Friday, November 6, 2009

2

சச்சின் சதம் அடித்தால் இந்திய அணி தோற்றுவிடுமா?

  • Friday, November 6, 2009
  • Share

  • நீண்ட நாட்களுக்கு பின் ஒரு விறுவிறுப்பான மேட்ச் ,  ஒவ்வொரு பந்துகள் வீசும் போதும் என்ன நடக்கும் என்று எல்லோருக்கும் ஒரு திரில் அனுபவம் அதுவும் இந்திய பேட்டிங் போது இன்னும் அதிகம் பாண்டிங் அன் கோ வின் 350 ரன்கள்  இந்திய அவ்வளவுதான் என்று தெளிவாக சொல்லியிருந்தன .

                  போட்டிக்கு முன் பாண்டிங் கிட்டத்தட்ட புதியவீரர்கள் இருப்பாதால் தோற்றுவிடுவோம் என்று சொல்லி இருந்தார் ,  தோணி வேறு இந்திய பேட் ஸ் மேன் களுக்கு ஒழுங்காக விளையாடுவதில்லை என்று மிரட்டல் விடுத்திருந்தார் . பலரும் சச்சின் மேல் வெறுப்புடன் சரி என்னதான் நடக்கிறது என்று பர்ர்க்கதொடங்கினால் வழக்கம் போல் சேவாக் அதிரடியை துவக்கி வழக்கம்போல்   30 + வந்ததும் நடையைகட்டினார் .கம்பீர் , யுவராஜ் ,தோணி வந்தவுடன் சென்றுவிட்டனர் சச்சின் மட்டும் தான் மீது அவ்வப்போது வரும் விமர்சனங்களுக்கு பேட்டிங் மூலம் சொல்லும்முடிவுடன் 50 ரன்கள் 47 பந்துகளில் 3/126, சச்சின் இருக்கும்வரை பார்க்கலாம் என்ற முடிவுடன் ரெய்னா வந்ததும் இன்னும் விறுவிறுப்பு
          
           சச்சின் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸ்  எப்படியும் சதம் போட்டுவிடுவார் என்ற நம்பிக்கைய நிறைவேற்றினார் , அசோகா டீ சில்வா எப்படியும் இன்று பழி வாங்கமாட்டார் என்ற நம்பிக்கை இருந்தது.  நண்பன் அப்போது சொன்னான் சச்சின் சதம் போட்டால் இந்திய ஜெயிக்காது மச்சி என்று. நீயுமா டா இத நம்புற இன்னிக்கு ஸ்கோர் அதிகம் இருந்தாலும் ஜெயிக்கும் மச்சி பாருடா என்று சொல்லிவிட்டு பார்த்தோம்.
              அப்படியே அதிரடியாக 150 ரன்களை அடித்தபோது எல்லோருக்கும் இந்தியா வெற்றியைவிட சச்சின் 200 அடித்தால் போதும் என்ற எண்ணம் , ரெய்னா சிக்ஸ் மற்றும் 4 அடித்து 50 ரன் அடித்து இந்தியா வெற்றி என கிட்டத்தட்ட  முடிவு செய்தார் பாண்டிங் முகம் தான் எதோ இன்னும் ரிலீஸ் செய்யாமல் வைத்திருக்கும் சன் picture படத்தை பார்த்தவர் போல இருந்தார் .

                     ரெய்னா அவுட் ஆனதும் இன்னும் 51 ரன்கள் 43 பந்துகளில் சச்சின் இருக்க பயமேன் இப்போது அதிரடி என்றாலே ஹர்பஜன்  பந்து, ரோட்டில் வருபவர் , கேமரா மேன் என எல்லோரையும் அடிக்கும் ஒரே மனிதர் இந்த மாட்சிலும் எல்லோராலும் அதிகம் எதிர்பார்க்கப்பட்டவர் இவர்தான் ஹர்பஜன் ரன் எடுக்காமலே சென்றுவிட்டார் அதை அடுத்து அனைவரையும் அதிர்ச்சி அடையவைதார் சச்சின் 175 ரன்களில் அவுட் . அதன்பிறகு  பர்வீன்குமார் ரன் அவுட் ஆகும் வரை ஒரே எரிச்சல் தான் எப்படி இருந்த இந்திய அணி இப்படி ஆய்டுச்சே என்று , இடையில் பிரவீன் குமார் அடித்த ஒரு சிக்ஸ் கடைசியாக இந்தியா வெற்றி பெரும் என்ற கடைசி ஆவலை தூண்டியது  . அதற்கும் முடிவுகட்டியது ஆஸ்திரேலியா .

    சச்சின் மட்டுமே முழு நம்பிக்கையுடன் ஆரம்பம் முதல் அவுட் ஆகும் வரை இருந்தார் இன்னும் அவரே  அந்த 3 ரன்கள் அடித்திருந்தால் நண்பன் கூறியதுபோல் நினைக்கும் பலருக்கும் முடிவுகட்டியிருப்பார் என்ன செய்ய? முடியவில்லை .பாண்டிங் 4 ரன் 3 ரன்கள் வித்தியாசத்தில் எப்படியோ ஜெயித்துவிடுகிறார்.

    சச்சின் மீது வரும் விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி  இவ்வாறு பலமுறை வைத்துவிட்டார் ஆனால் அணி வெற்றி என்பது 100% தனி நபர் மீது எப்போதும் இருக்கமுடியாது அப்படி இருந்தால்  அதனையும் அவர் செய்திருப்பார். இரண்டு போட்டிகளிலும் அவரை விமர்சித்தவர்கள் இப்போது அவரின் சிறப்பான ஆட்டத்திற்கு என்ன அவருக்கு கிரீடம் கொடுத்துவிடுவார்களா?  அவர் ஒரு சில போட்டிகளில்  விளையடமுடியாவிட்டாலும் அடுத்த போட்டிகளில்சிறப்பாக ஆடுகிறார் . இடையிடையே சச்சினுக்கு அவுட் கொடுத்து நான் அம்பயர் ஆக இருக்கிறேன் என்று புகழ் தேடிக்கொள்ளும் அசோகா டீ சில்வா போன்றவர்களையும் சமாளிக்கவேண்டும்.
              
                 இந்தியா முதல் மூன்று இடங்களில் இப்போது தள்ளடிக்கொண்டிருக்க  சச்சின் பெரும்பங்கு என்று எல்லோருக்கும் தெரியும் . சச்சின் இன்றுவரை ஒருநாள் போட்டியில் 45 சதம் அடித்துவிட்டார் அனைவரின் எதிர்பார்ப்பையும் பூர்த்திசெய்யும் வாய்ப்பு இருந்தால் இப்போது 435 சதம் அடித்திருப்பார்.

    சரி சச்சின் சதம் அடித்தும் இந்தியாதான்  தோற்றுவிட்டதே, இன்றைய போட்டியில் சச்சின் contribution இல்லாவிட்டால் எப்படியும் இந்தியா 200 ரன்கள்தான் எடுத்திருக்கும் அப்போது இன்னும் நிலைமை மிக மோசம் தான் . சச்சின் இவ்வாறு இந்தியா தோற்கும் போதெல்லாம் சதம் அடித்து போராடி இந்திய அணி தோல்வி என்று சொல்ல வைத்திருக்கிறார் .  மேன் ஆப் தி மேட்ச் வாங்கும் போதெல்லாம் வருத்தத்துடன் தான் வாங்கியிருக்கிறார் இந்த நிலை மற்ற அணி வீஈரர்களுக்கு அதிகம் வந்தது இல்லை .இன்றைய .போட்டியி கூட 135 ரன்கள் அடித்திருந்தால் அவருக்கு கிடைத்திருக்காது . மார்ஷ் வாங்கியிருப்பார் என்பதுதான் உண்மை.
          எப்படியோ இன்று தான் இன்னும் திறமையானவந்தான் என்பதை விமர்சகர்களுக்கும் உணர்த்திவிட்டார்.
    இன்னும் பத்து வருடங்கள் ஆனாலும் சச்சின் இந்தியா அணிக்கு தூணாக தான் இருப்பார், வேண்டம்  என்று அவர் உணர்ந்தால் அவரே விலகிவிடுவார் 20-20 போல , பிறகுதான் சச்சின் இன்னும் விளையாண்டிருக்கலாமே என்று அப்போதும் நினைக்கவைப்பார் என்பது நிச்சயம் . சச்சின் இலாத இந்தியா அணி எப்போது கனவில் கூட இருக்கமுடியாது . பிறருடன் ஒப்பிட்டு பார்க்க முடியாத ஒரே வீரர் சச்சின் மட்டும் தான் . தனிப்பட்ட வாழ்விலும் சிறந்தவர் .அவருடன் ,அவருக்கு பின் வந்த பல வீரர்கள் அனைத்து அணிகளிலும் இன்று இல்லை.

         என்னதான் புதிது புதிதாக அதிரடி வீரர்கள் வந்தாலும் அனுபவம் தான் இறுதிவரை வரை சிக்கலான நேரத்தில் வெற்றியை கொடுக்கும் அதுதான் சச்சின் என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த உண்மை. வெற்றி,போராடி தோல்வி அடைந்த அணி என்ற பெயரை தான் சச்சின் நமக்கு கொடுத்துள்ளார்  .

       April 24, 1973  பிறந்த அவரின் பிறந்த நாளை கிரிக்கெட் தினமாக கொண்டாடும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பது மட்டும் நிச்சயம் .


    2 Responses to “சச்சின் சதம் அடித்தால் இந்திய அணி தோற்றுவிடுமா?”

    அஹோரி said...
    November 6, 2009 at 11:06 AM

    அருமை. அத்தனையும் உண்மை. சச்சின் தி கிரேட்.


    Unknown said...
    September 9, 2012 at 3:51 PM

    ithu jai yoda blog thana?


    Subscribe