Wednesday, March 14, 2012

2

எங்க ஊருக்கு எப்போ ட்ரெயின் வரும்-ரயில்வே மினிஸ்டர்ருடன் அரவிந்த் அதிரடி பேட்டி

  • Wednesday, March 14, 2012
  • Share
  • இடம் : டிவி ஸ்டுடியோ , 
    அரவிந்த்: டிவி நிருபர், பிரகதீஷ், கௌரி ஆடியன்ஸ் ...
    கோட் , டை எல்லாம் கட்டிட்டு ., கோட்டை இல்லங்க  வெள்ளகார தொரைங்க கட்டுற கோட், டை .


     நம்ம அரவிந்த் ஷாருக் சேர்ல சுத்திகிட்டு ஆரம்பிக்கிறாரு (இன்னும் பிரபாகர் பிறந்த   நாளுக்கு   கவிதை எழுதியதிற்கு   துபாய் டிரஸ் வாங்கி குடுக்கல  அதனால வாடகைக்கு  வாங்கி போட்ருக்காரு  )   வணக்கம் நேயர்களே இது .. 

    பிரகதீஸ்: ஹலோ நிறுத்து  என்ன நீயும் ஒரு கோடி ப்ரோக்ராம் நடத்தப்போறியா ( நாராயணா இந்த கொசு தொல்ல தாங்கல..)
    அரவிந்த் ஷாருக்:இல்ல ..
    பிரகதீஸ்:அப்புறம் எதுக்கு இந்த டிரஸ்?
    அரவிந்த் ஷாருக்:ஹலோ கோட் போட்டா .. ஒரு கோடி ப்ரோக்ராம்தான்  நடத்தனுமா? நான்  நம்ம ரயில்வே மினிஸ்டர பேட்டி எடுக்க போறேன்.

    பிரகதீஸ்:அதுக்கு ஏன் கோட் போட்டு இருக்க அடிக்கிற வெயில்ல ஏன் ?  ...  பேட்டி எடுக்க போறேன்னு சொல்லிட்டு இங்கயே இருக்க .போகலையா?
    .........அரவிந்த் ஷாருக்  இனி அரவிந்த் ஷா ..
    அரவிந்த்ஷா :ஓஒ ....நோ பேட் வோர்ட் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க இன்னைக்கி ரயில்வே பட்ஜெட்ல டிக்கெட் விலை    ஏத்திட்டாங்க..? நம்ம ஊருக்கு ட்ரெயின்  விடமாற்றாங்க ? அத இப்போ கேக்கபோறேன்.
    பிரகதீஸ்:சரி அந்த சேர் யாருக்கு ?
    அரவிந்த்ஷா:அது மினிஸ்டருக்கு.. 
    பிரகதீஸ்:நீதா நிக்க வெச்சி  நாலு கேள்வி கேக்க போறியே அப்போ எதுக்கு அந்த சேர் ?
    அரவிந்த்ஷா :நான்   எப்போ அப்டி சொன்னே? கேள்விதான்  கேக்கறேன்னு சொன்னேன் (ஓவரா கலாய்க்கிறாங்களே  நாம திருப்பி கேக்கணும் )
    அதென்ன ஒருத்தர நிக்க வெச்சிதான்  கேக்கணுமா உக்கார வெச்சா  பதில் சொல்லமாட்டாங்களா ,அது என்ன நாலு கேள்வி ஒன்னு கம்மியா கேக்க கூடாதா ..?
    பிரகதீஸ்:(நம்மளையே திருப்பி கலாய்க்கிறானே ..!)
    அரவிந்த்ஷா :ஆகா பிரகதீஷ் அமைதியா இருக்கிறதா பார்த்தா    இனி கேள்வியே கேக்க கூடாத மாதிரி பண்ணனும் .. இன்னும் கேக்கலாம் ,.நானும் உங்க ஊரு தானே (பஞ்ச் டயலாக் மாதிரி  பேசுரராமா)  என்னைக்காச்சும்  யோசிச்சி இருக்கீங்களா யாராச்சும் நம்ம ஊருக்கு  ஏன் இன்னும் ட்ரெயின் வரலன்னு .?
    பிரகதீஸ்:தண்டவாளம் இருந்தாதானே ட்ரெயின்  வரும் ...(அவ்வவ்வ்வ்வ் )
    அரவிந்த்ஷா :கோபமா என்ன கலாய்க்கிறாமா இப்படி பேசி தான்  ட்ரெயின் இன்னும் நம்ம ஊருக்கு விடல ,அமெரிக்கா- காரன் ராக்கெட் விட்டுட்டு இருக்கான் இன்னும் நாம இப்படியே  இருக்கோம் போய் உக்காருங்க பிரகதீஷ் ...(கடுப்பேத்துறாங்க மை லார்ட் )
    பிரகதீஸ்:(நாம என்ன கேட்டோம்  இவன் என்ன சொல்லுறான் பாரு ..ராக்கெட் விடரதையும் நம்ம ஊருக்கு ட்ரெயின் விடறதுக்கும் என்ன சம்மந்தம் ..).
    அரவிந்த்ஷா :மினிஸ்டர் வராரு எல்லாம் எழுந்திரிச்சி வணக்கம் சொல்லுங்க,,
    பிரகதீஸ்:ஏன் மினிஸ்டர் பாடம் நடத்த போறாரா ..?
    அரவிந்த்ஷா :கோபமா கைய நீட்ட பிரகதீஷ் அங்க இருந்து எஸ்கேப் ......
    கௌரி சங்கர் ;( இவன் பண்றதா பார்த்த முதல்வன் அர்ஜுன் மாதிரி  கேள்விகேட்டு . மினிஸ்டர் ஆய்டுவானோ ? எப்டியோ ட்ரெயின் ஊருக்கு வந்தா சரி.. )
    எல்லாரும்  ஒன்னு தெரிஞ்சிக்கோங்க எனக்கு கேள்வி கேக்குறது புடிக்கும் ஆனா கேக்குறது நானாதான் இருக்கணும் ..
    கௌரி சங்கர் ;( இவன் ஓவரா ஸீன் போடறனே  , பிரகதீஷ் ஓடிட்டான் எப்ப வருவான்னு தெரியல அதுவரைக்கும் நாம  கலாய்ப்போம்)
    கௌரி சங்கர் ;மினிஸ்டர் பெயர் என்ன சார்..?
    அரவிந்த்ஷா :அது தெரியாம இந்தியால இருக்குற உங்களமாதிரி இளைஞர்களாளதான் இவளோ பிரச்சனை ..
    கௌரி சங்கர் ;(ஆகா நம்ம மேலயும் கடுப்பாகுரானே)
    அரவிந்த்ஷா : அவர் பெயர்   தினேஷ் திரிவேதி  .
    கௌரி சங்கர்:என்ன தீவிரவாதிய சுட்டுடான்களா ,,?
    அரவிந்த்ஷா :மறுபடியும் கோபமா பார்க்க கௌரி சங்கரும் எஸ்கேப் 
    கேமரா மேன்   கௌதமன்: (இவன் இப்படியே மொறைச்சி இருக்க கூட்டத்த விரட்டிடுவான் போல இருக்கே ..)
    (கௌதமன் எப்படி  கேமரா மேன் ஆனான்னு கேக்குறவங்களுக்கு போன மாதம் வேலூர்ல ட்ரைனிங்  எடுத்துக்கிட்டாரு ..)
    மினிஸ்டர் வருகிறார் ...
    அரவிந்த்ஷா :வணக்கம் சார் ...
    அந்த ரயில்வே  மினிஸ்டராக நம்ம துபாய்  பிரபாகர் வெள்ளை  சட்ட வெள்ளை வேட்டில வணக்கம் சார்  வந்து சேர்ல உக்காருங்க சார்...


    அரவிந்த்ஷா:சார் நாம பேட்டிய ஆரம்பிக்கலாமா ...
     ரயில்வே மினிஸ்டர் பிரபாகர் :யோவ் நான் பேட்டின்னு சொன்னதும்  ஹேமாசின்ஹா, இல்லைன்னா      ஒரு மகேஸ்வரி   அட்லீஸ்ட் பெப்சி உமா ஆண்டி  இருப்பாங்கன்னு பார்த்தா  நீ  இருக்கியே இது தெரியாம துபாய் சென்ட் அடிச்சிட்டு  வந்துட்டேன் .சரி ஆரம்பிங்க ..(இப்பவே கண்ணா கட்டுதே )
    அரவிந்த்ஷா :சார் நாங்க மாவலிங்கை Trouble creators cricket club TV ல இருந்து உங்கள பேட்டி எடுக்க வந்துருக்கோம்  நீங்க இன்னைக்கி...
    ரயில்வே மினிஸ்டர் பிரபாகர் :நிறுத்துங்க தம்பி நீங்க என்ன கேக்க போறீங்க ன்னு தெரியும் எனக்கு புடிச்ச நடிகர் சிம்பு, நடிகை  அனுஷ்கா...எனக்கு ரோபோல இருந்து கிளிமாஞ்சாரோ பாட்டு போடுங்க...
    அரவிந்த்ஷா :சார் இது நேரடியா உங்க கிட்ட ரயில்வே பத்தி கேள்வி கேட்டு குறை தீர்க்கும் நிகழ்ச்சி  ,...
    ரயில்வே மினிஸ்டர் பிரபாகர் :(அட அதுவும் போடமட்டானா எண்ட குருவாயூரப்பா ..).
    அரவிந்த்ஷா :சார் குருவாயூரப்பா சாங் கூட போடா முடியாது ப்ளீஸ் அது வேற நிகழ்ச்சி ப்ளீஸ் ...
    ரயில்வே மினிஸ்டர் பிரபாகர் :சரி கேளுங்க ..
    அரவிந்த்ஷா :(நேரடி  ஒளிபரப்பு  நல்லா  பதில்  சொல்ல முடியாத மாதிரி கேட்டு மடக்கி famous  ஆகிடனும்) ...
     அரவிந்த்ஷா :ரயில்வே பட்ஜெட்ல முதல் வகுப்பு ,இரண்டாம் வகுப்பு , ஏசி வரை எல்லா கட்டணமும் உயர்வு ...ஏன்  சார் இப்படி ஏழைங்களை கஷ்டபடுத்துறீங்க? பாவம்   என்ன பண்ணுவாங்க?முக்கியமா  இன்னும் எங்க ஊருக்கு ட்ரெயின் வரல ?
    ரயில்வே மினிஸ்டர் பிரபாகர் : சார் அரை மணி நேரம் கொஞ்சம் லேட்டா வரும் வெயிட் பண்ணுங்க ..எந்த ட்ரெயின் ?பெயர் என்ன ?..
    அரவிந்த்ஷா :அத நீங்கதா சொல்லணும்..lol
    ரயில்வே மினிஸ்டர் பிரபாகர் :என்ன சொல்றீங்க?
    அரவிந்த்ஷா :மாவிலங்கைன்னு ஒரு அழகான கிராமம் 
    ரயில்வே மினிஸ்டர் பிரபாகர் :(இவன் பாரதி ராஜா ரேஞ்சுக்கு பில்ட் அப் குடுக்குறானே)
    அரவிந்த்ஷா :பெரம்பலூர் பக்கத்துல இருந்து  10 கிலோ மீட்டர் தூரத்துல .. பெரம்பலூர் மாவட்டத்துல ட்ரெயின் வசதியே இல்ல நீங்காத ட்ரெயின் வசதி பண்ணனும் ...
    ரயில்வே மினிஸ்டர் பிரபாகர் :இவன் நம்பள  கலாய்க்கிறானா நாமளும் ஆரம்பிசிட வேண்டியதுதான்..
    அப்போது ஆடியன்ஸ்  கிட்ட இருந்து சத்தம் ..
    கௌரி கான் :பார்த்து கும்புடறேன் சாமி  ...போன வருஷம்   சைதாபேட்டை ரயில்வே ஸ்டேஷன்ல டிக்கெட் எடுக்க போனப்ப டிக்கெட் கவுன்ட்டர்ல  டிக்கெட் தூக்கி போடறாங்க . கைல குடுக்கமாட்றாங்க?  அப்பறம் நான் கோவமா   ஒரு மொற மொரச்சிட்டு  வந்தேன் ..
    அரவிந்த்ஷா :வெயிட் பண்ணுங்க கௌரி  கான்  உங்க கேள்வி அப்பறம் கேக்கலாம் நான் கேட்டுக்கிட்டு இருக்கேன் .சொல்லுங்க சார் .
    கௌரி கான் :(அப்பறம் கேக்குறதா  ட்ரெயின் மட்டும்  வரல ஊருக்கு உனக்கு அப்பறம் இருக்கு )
    ரயில்வே மினிஸ்டர் பிரபாகர் :சார் 8 வருசமா விலையை ஏத்தல  அத கொஞ்சமா ஏத்தி இருக்கேன் .
    அரவிந்த்ஷா :சார் 2ம் வகுப்பு ,முதல் வகுப்பு, ஏசி வரை எல்லா கட்டணமும் உயர்வு ...சின்ன பசங்க படிக்காம ஊர் சுத்துரானுங்கன்னு நல்லதுக்காகதான்  பண்ணி இருக்கீங்க  
    ஆனா,  சார் பாவம்   1ம் வகுப்பு, 2ம் வகுப்பு சின்ன பசங்க    இலவசமா போக சொல்லலாமே  பஸ்பாஸ்  மாதிரி குடுப்பீங்கன்னு  பார்த்தா  நீங்க  டிக்கெட் விலையை ஏத்தி இருக்கீங்க ?
    ரயில்வே மினிஸ்டர் பிரபாகர் :என்ன சொல்லுறீங்க ..?
    அரவிந்த்ஷா :ஆமா சார் முதல்  வகுப்பு, இரண்டாம் வகுப்பு பசங்க எல்லாம் பாவம் இல்லையா ?நாங்க எல்லாம் பத்தாவது  +2 எல்லாம்  முடிசிட்டு காலேஜ் வந்துட்டோம் எங்களுக்கு ஏத்தி இருந்தா கூட சமாளிசிடுவோம் ..
    முக்கியமா இத கேட்டே ஆகணும் .ஸ்கூல் பீஸ் உயார்த்த கல்வி மந்திரி இருக்காரு நீங்க எப்புடி உயர்த்தலாம் ?

    ரயில்வே மினிஸ்டர் பிரபாகர் :யோவ் முதல் வகுப்பு இரண்டாம் வகுப்புன்னு சொல்றது ஸ்கூல் படிப்பு இல்லையா ட்ரெயின்ல போறதுக்கு  ஏத்தின கட்டணம் உன்ன எவன்யா நிருபரா  போட்டது அவன @#%^&%$.
    அரவிந்த்ஷா :(அய்யோ நாமதான்  தப்பா புரிஞ்சிக்கிட்டோமா அப்போ ஒன்னாம் வகுப்பு , ரெண்டாம் வகுப்பு பசங்களுக்கு ரயில்ல  கட்டணம் உயர்வு இல்லையா ?)
    ரயில்வே மினிஸ்டர் பிரபாகர் : (அவசரமாக போன்  செய்து) யோவ் சீ பி ஐ  இன்னும் பத்து நிமிசத்துல இவனபத்தி விசாரிச்சி சொல்லுங்கயா..உன்னோட பேஸ் புக்  நேம் என்ன யா ?அரவிந்த் செல்வா சார்.
                       (போட்டோல இப்படி வெறிக்க பாக்குறாரே அரவிந்த்ஷா இவர் தான் ,கமான் கேள்ஸ் ...)
     சீ பி ஐ பார்த்திபன் :சார் சைபர் கிரிம் ரிப்போர்ட் வந்துடுச்சி  இவர் பேரு அரவிந்த் ,அரவிந்த் ஷாருக்-னு பேர் வெச்சிக்கிட்டு இருக்கான் மொத்தம் 265 பிரண்ட்ஸ் அதுல 143  பொண்ணுங்க மொத்தம்  1008  like  குடுத்திருக்கான்111 போஸ்ட் போட்டு இருக்கான் online ல இருந்த பொண்ணுங்க கூட chat பண்ணிட்டு பிரெண்ட் களுக்கு ஒழுங்கா reply கூட  குடுக்க மாட்டான் .முக்கியமா பவர் ஸ்டார் fan  சார் இவன் .சுருக்கமா சொல்லனுனா கிங்க்ஸ் காலேஜ் மைனர்.
     ரயில்வே மினிஸ்டர்:சரி இவனோட ஊரைப்பத்தி சொல்லு :
     சீ பி ஐ பார்த்திபன் :இவங்க ஊர்  பிரண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து பேஸ்புக் ல Trouble creators cricket club maalingai ன்னு குரூப் ஓபன்  பண்ணி இருக்காக்க அதுல எதாச்சும் ஜாலி யா போட்டு என்ஜாய்   பண்ணுறாங்க..,
     இந்தவாரம்  அவங்க ஊருல அழகான அறிவாளி யாருன்னு போட்டி ஆரம்பிச்சி  கள்ள ஓட்டு வாங்கி இவனே கப் ஜெயிச்சிருக்கான்  முக்கியமா  சொலனுன்னா இவனுக்காக  இவங்க டீம் அம்பயர் ..,ஓட்டு போட பெர்மிசன் குடுங்க இல்லன நானும் அடுத்த வருஷம் விளயாடறேன்னு சொல்லி ஓட்டு உரிமை வாங்கி (எப்புடியெல்லாம் மிரட்டுறாங்கப்பா    )இவருக்கு ஓட்டு போட்டாரு கடைசில இவர் தான்  ஜெயிச்சாரு மத்தவங்க எல்லாம் டெப்பாசிட் காலி .. எல்லாமே கள்ள ஓட்டு சார் ..
    ரயில்வே மினிஸ்டர் பிரபாகர் :வாட் எ மேன்.,!
    பிரகதீஷ்:புடிங்க சார் புடிச்சி இவன ஜெயில்ல  போடுங்க ..கள்ள ஓட்டு போடறான் ..(பிரகதீஷ் எஸ்கேப் )
    ரயில்வே மினிஸ்டர் பிரபாகர் :தம்பி உங்களமாதிரி ஆளு தான்  எனக்குதேவை நீங்க என்கூட வந்துடுங்க ..இனி என்னோட PA நீங்க தான் .,
    அரவிந்த்ஷா :சார் அப்படினா  ஒரு கண்டிசன் ...
    ரயில்வே மினிஸ்டர் பிரபாகர் :என்ன தம்பி ..?(சம்பளம் அதிகம் கேப்பானோ ?)
    அரவிந்த்ஷா :எங்க ஊருக்கு எப்போ ட்ரெயின் வரும்.................?
    lol....

        Moral of the story:எங்க ஊருக்கு எப்போ ட்ரெயின் வரும்.?


    அடுத்து "எங்க ஊருக்கு எப்போ மழை வரும் ?-திரு ஏ. வீ  ரமணனுடன் (அதாங்க டிவி ல மலை ல எப்ப வரும்ன்னு சொல்லுவாரே )  ..விரைவில் ...(அரவிந்த்ஷா ரயில்வே மினிஸ்டர் பிரபாகர் கூட ஓடிட்டதால பேட்டி எடுக்க ஆள் தேடிட்டு இருக்கோம் ..)



    2 Responses to “எங்க ஊருக்கு எப்போ ட்ரெயின் வரும்-ரயில்வே மினிஸ்டர்ருடன் அரவிந்த் அதிரடி பேட்டி”

    Unknown said...
    March 15, 2012 at 6:38 PM

    Hm nice one yaar.. keep posting like this, enakum konjam ofc la timepass aguthu


    Vinoth said...
    March 15, 2012 at 10:48 PM

    ENNE IDHU CHINNAPULLA THANAMA IRUKKU


    Subscribe