Thursday, June 3, 2010

2

மலையரசியில் பிறந்த என் (june 3)

  • Thursday, June 3, 2010
  • Share


    மலையரசியில் பிறந்த என் அமுதமே
    அன்பு என்ன என்று கற்றுக்கொடுத்தாய்
    உன் அன்பினால் கற்றுக்கொண்டேன்

    காதல் என்பது என்ன என்று கற்றுக்கொடுத்தாய்
    உன் காதலால் கற்றுக்கொண்டேன்.
    நீ சொன்ன ஒன்றை மட்டும் நான் இன்னும்
    கற்றுக்கொள்ள விரும்பவில்லை அது நீ சொன்ன

    நீ கல்விகற்று கொடுக்கும் ஆசிரியையாக  இருந்திருக்கலாம்
    அனால் நான் எல்லாவற்றையும் கற்றுக்கொள்ளும்
    புத்திசாலி மாணவனாக இருக்க விரும்பவில்லை .

    முதல் பார்வையிலேயே முழுதாய் பேருந்தில் என் இதயத்தை
    திருடிப்போன என் தேவதையே,

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் .
    இப்போது என் அருகில் நீ இல்லை


    நீ கற்றுகொடுத்த அன்பு ,காதல் என் மணத்தில்
    இப்போது இன்னும் பல மடங்கு அதிகமாய்

    இன்று இதோ என் கால்கள் உனக்காக
    பிரார்த்தனை செய்ய கோவிலுக்குள்.
    கைகள் உனக்காக வேண்ட குவிய தொடங்கிவிட்டன.

     

    ----------------------------------------------------


    "உனது பனி படர்ந்த வெண்ணிற மார்பில்
    தலை சாய்த்து என்னை சாக விடு,

    உனது சதை கனியை நான் உண்ண விரும்புகிறேன்,
    அதன் வாசம் என்னை கள்ளுண்டவன் போல ஆக்குகிறது,
    உனது சிகை அலங்கார வாசனை என்னை விழுங்கும் தீச்சுடர்."

    2 Responses to “மலையரசியில் பிறந்த என் (june 3)”

    யாதவன் said...
    June 3, 2010 at 2:56 PM

    மலையரசியில் பிறந்த என் அமுதமே
    1st


    mani said...
    June 14, 2010 at 3:10 PM

    அருமை !!!


    Subscribe