Friday, September 11, 2009

8

பதிவு திருடர்கள் விருது பற்றிய அறிவிப்பு

  • Friday, September 11, 2009
  • Share



  • நம் பதிவுலகில் எவ்வளவோ திறமைகளை பாராட்டி விருதுகளும் ,பாராட்டுகளும் வழங்குகின்றோம் , இப்படி ஒரு விருதை அறிவித்தால் எல்லோரும் ஆர்வமுடன் படிக்கவருவார்கள் இப்படி ஒரு விருதா என்று ? விருது கொடுப்பவர்களுக்கு intresting blog போல intresting award வழங்குபவர் என்ற பெயரும் கிடைக்கும் . ஹிட்ஸ் அதிகமாக கிடைக்க வாய்ப்பு அதிகம். ரசிக்க கூடிய விருதாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை .......

    நமது பதிவுகளை திருடி அவர்களது ப்ளோகில் போட்டு அந்த ப்லோக் கிற்கு புதுமையான பேர் வைத்து இருப்பவர்களுக்கு இத்தகைய விருது .
    அனைத்து பதிவர்களிடமும் கருத்துக்களை கேட்டால் அவர்களும் சில ப்லோக் பற்றி சொல்லுவார்கள் அவற்றை தொகுத்து திறமை அடிப்படையில் வழங்கி கௌரவிக்கலாம் . ஒவொருவரும் தனித்தனியாக இப்படி பெற்ற அனுபவம் உண்டு இதை தடுக்க என்ன செய்யலாம் ? அல்லது நம் பதிவை திருடி போட்டிருப்பதால் நமக்கு ஒரு சந்தோசம் , நம் பதிவையும் திருட ஆரம்பித்து விட்டனர் என்று .

    விருதுக்கு உதாரணமாக கந்தசாமி பட டைரக்டர் சுசி கணேசன் போல யோசித்து முகமூடி அணிந்த உருவம் அமைத்து முடியை பறக்கவிட்டு இருப்பது போல(மேலே உள்ள படத்தை போல) லோகோ செய்யலாம் .
    இதை எப்படி அவர்களுக்கு வழங்கமுடியும்?
    இதை அவர்கள் எப்படி ப்லோக் இல் போட்டு கொள்வார்களா என்பது தானே ?
    சுயமாக சிந்திக்காதவர்களுக்கு இவ்வளவு கஷ்டம் ஏன் நாமே நமது ப்லோக் அவர்களது ப்லோக் பெயருடன் போட்டுக்கொள்ளலாம் . அவர்களுக்கும் ஒரு விளம்பரம் கிடைத்தால் சந்தோசப்படுவார்கள் . இப்படி வள்ளுவர் சொல்லியபடி தண்டிக்கலாம் .

    முடிந்தால் பதிவு திருடர் விருதை உபயோகமான கருத்துக்களை எல்லோருக்கும் பொய் சேர தனது ப்லோக் கிலும் போட்டு சேவை புரிந்தவர் விருது என மாற்றி அமைக்கலாம் .

    செந்தழல் ரவி , பொன்மலர் ,sumazla அக்கா ,வால் பையன் , கேபிள் ஜி , நிஜாமுதீன்
    சூர்யா கண்ணன் , ராகவன் நைஜீரியா,butterfly சூர்யா , எவனோ ஒருவன் ,பனையூறான் ,prabhakar ramasamy ,செல்வராஜ் அண்ணே ,கார்கி geetha achel,கார்த்திகேயன் ,வசந்த் மற்றும் செந்தில் போன்றவர்கள்(விடுபட்ட நண்பர்கள் மன்னிக்கவும் ) இப்படி ஒரு விருது கொடுத்தால் அது இன்னும் சிறப்பாக இருக்கும் எல்லோருக்கும் போய்சேரும் வார இறுதியில் இதுபற்றி அறிவிப்பீர் கள் என்ற நம்பிக்கையுடன் இந்த பதிவை இடுகிறேன் .


    கடந்த வாரம் நண்பர் செந்தில் - செந்தில் பக்கங்கள் எழுதிய

    முதுமலைக் காட்டுல இருந்து ஒரு கடுதாசி!

    என்ற கட்டுரை படித்து கூட எழுதமுடியுமா என வியந்தேன் இப்படி எழுதுபவர்களுக்கு மத்தியில் இது போன்றவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர் என்பது வேதனை ,


    நன்றி :
    இப்படி ஒரு பதிவு எழுதவைத்த கண்ணாடி போட்டுக்கொண்டு பைக்கில் போஸ் கொடுக்கும் புதுமை வலைதள நண்பருக்கு நன்றி .

    காரணம்:

    "பிடித்த பாடலை பாடி அதை வைத்து கண்டுபிடித்து டவுன் லோடு செய்யலாம்" இரண்டு நாட்களுக்குமுன் நான் எழுதியது

    http://saidapet2009.blogspot.com/2009/09/blog-post_09.html


    அவரது வலைத்தளத்தில் இன்று http://puthumaitech.blogspot.com/2009/09/blog-post_1877.html
    என்ற தலைப்பில் நான் எழுதியதை சூடாக ஒரு எழுத்து கூட மாற்றாமல் ஒரே ஒரு போட்டோ மற்றும் மாற்றி தலைப்பை கூட மாற்றாமல் அப்படியே எழுதியதற்கு நன்றி . நன்றி, நன்றி ..
    என்னால் முடிந்தவரை என் நண்பர்களிடம் விருது வழங்க ஏற்ப்பாடு செய்துவிட்டேன் உங்கள் திறமையின் அடிப்படையில் கண்டிப்பாக வழங்குவார்கள் .

    8 Responses to “பதிவு திருடர்கள் விருது பற்றிய அறிவிப்பு”

    Anonymous said...
    September 11, 2009 at 10:00 AM

    good thinking.ha ha haa


    புதிய மனிதா said...
    September 11, 2009 at 12:13 PM

    நம்ம வால் பையன்ட்ட கத்துகிட்டது ,,, அவர்ட கேளுங்க சொல்லுவாரு...நன்றி பிரபாகர்


    சந்ரு said...
    September 11, 2009 at 3:01 PM

    அந்த புதுமயானவரின் வலைத்தளத்தில் இருப்பது எல்லாமே திருட்டு இடுகைகளே நான் பல தடவை அவரிடம் பின்னூட்டம் மூலம் சுட்டிக்காட்டினேன். பினூட்டத்தைக்கூட காண்பிக்கின்றார் இல்லை.


    Anonymous said...
    September 11, 2009 at 5:33 PM

    ungalu yellam velai veti yedhuvum illaiya. mudhalil, veti news poduvathu yepadi yenru unaku award kodukanum


    Selvaraj said...
    September 12, 2009 at 3:46 AM

    அப்படி ஒரு விருது கொடுததீங்கன்னாலும் அதையும் சந்தோசமாக வாங்கிட்டு உங்களுக்கு நன்றி சொல்லி ஒரு பதிவும் போடுவார்கள். எனவே பிறரை கொடுக்க சொல்லுவதைவிட நீங்கள் முதலில் தைரியமாக அந்த விருதை கொடுக்கலாம்.


    Anonymous said...
    September 12, 2009 at 11:26 PM

    hi


    கற்போம் கற்பிப்போம் said...
    September 18, 2009 at 9:36 PM

    வணக்கம் சரியான பதிவு...வாழ்த்துக்கள்.....என்னுடைய www.pudhuvai.com இல் நான் வெளியிடும் பதிவுகளையும் அப்படியே வாந்தி எடுத்ததுபோல சிலர் அவர்களது பதிவில் போட்டு விடுகிறார்கள்..அவர்களிடம் கேட்டால் உங்களாலும் பதிவு மக்களை சென்றடைகிறது...என்னாலும் பதிவு ம‌க்களிடம் சென்றடைகிறது என தத்துவம் பேசுகிறார்கள்.. பணிச்சுமை+குடும்ப‌சுமை இரண்டிற்க்கும் நடுவில் படைப்பை படைத்தால் கொஞ்சம் கூட கூசாமல் அப்படியே போட்டு தள்ளி அதற்கு ஓட்டு வேறு வாங்கிக்கொள்கிறார்கள் என்ன செய்வது எல்லாம் தலை எழுத்து!!!


    suthanthira-ilavasa-menporul.com said...
    November 2, 2009 at 9:09 AM

    Removed pudumaitech link given in my blog. Cannot give link to hacking sites and thief sites.


    Subscribe