Monday, September 17, 2012

0

Twenty20 World Cup-2012 - schedule

  • Monday, September 17, 2012
  • Group A - England (A1), India (A2) and Afghanistan
    Group B - Australia (B1), West Indies (B2) and Ireland
    Group C - South Africa (C1), Sri Lanka (C2) and Zimbabwe
    Group D - New Zealand (D1), Pakistan (D2) and Bangladesh


    Twenty20 World Cup-2012


    Sep-2012
    Tue 18 Day/Night
    14:30 GMT, 19:30 local
    1st Match, Group C - Sri Lanka v Zimbabwe
    Mahinda Rajapaksa International Cricket Stadium, Hambantota

    Wed 19 Day/Night
    10:00 GMT, 15:30 local
    2nd Match, Group B - Australia v Ireland
    R.Premadasa Stadium, Colombo

    Wed 19 Day/Night
    14:00 GMT, 19:30 local
    3rd Match, Group A - India v Afghanistan
    R.Premadasa Stadium, Colombo

    Thu 20 Day/Night
    14:00 GMT, 19:30 local
    4th Match, Group C - South Africa v Zimbabwe
    Mahinda Rajapaksa International Cricket Stadium, Hambantota

    Fri 21 Day/Night
    10:00 GMT, 15:30 local
    5th Match, Group D - Bangladesh v New Zealand
    Pallekele International Cricket Stadium, Kandy

    Fri 21 Day/Night
    14:00 GMT, 19:30 local
    6th Match, Group A - England v Afghanistan
    R.Premadasa Stadium, Colombo

    Sat 22 Day/Night
    10:00 GMT, 15:30 local
    7th Match, Group C - Sri Lanka v South Africa
    Mahinda Rajapaksa International Cricket Stadium, Hambantota

    Sat 22 Day/Night
    14:00 GMT, 19:30 local
    8th Match, Group B - Australia v West Indies
    R.Premadasa Stadium, Colombo

    Sun 23 Day/Night
    10:00 GMT, 15:30 local
    9th Match, Group D - New Zealand v Pakistan
    Pallekele International Cricket Stadium, Kandy

    Sun 23 Day/Night
    14:00 GMT, 19:30 local
    10th Match, Group A - India v England
    R.Premadasa Stadium, Colombo

    Mon 24 Day/Night
    14:00 GMT, 19:30 local
    11th Match, Group B - West Indies v Ireland
    R.Premadasa Stadium, Colombo

    Tue 25 Day/Night
    14:00 GMT, 19:30 local
    12th Match, Group D - Pakistan v Bangladesh
    Pallekele International Cricket Stadium, Kandy

    Thu 27 Day/Night
    10:00 GMT, 15:30 local
    13th Match, Super Eights, Group 1 - C1 v D2
    Pallekele International Cricket Stadium, Kandy

    Thu 27 Day/Night
    14:00 GMT, 19:30 local
    14th Match, Super Eights, Group 1 - A1 v B2
    Pallekele International Cricket Stadium, Kandy

    Fri 28 Day/Night
    10:00 GMT, 15:30 local
    15th Match, Super Eights, Group 2 - D1 v C2
    R.Premadasa Stadium, Colombo

    Fri 28 Day/Night
    14:00 GMT, 19:30 local
    16th Match, Super Eights, Group 2 - B1 v A2
    R.Premadasa Stadium, Colombo

    Sat 29 Day/Night
    10:00 GMT, 15:30 local
    17th Match, Super Eights, Group 1 - C1 v B2
    Pallekele International Cricket Stadium, Kandy

    Sat 29 Day/Night
    14:00 GMT, 19:30 local
    18th Match, Super Eights, Group 1 - B1 v C2
    Pallekele International Cricket Stadium, Kandy

    Sun 30 Day/Night
    10:00 GMT, 15:30 local
    19th Match, Super Eights, Group 2 - D1 v A2
    R.Premadasa Stadium, Colombo

    Sun 30 Day/Night
    14:00 GMT, 19:30 local
    20th Match, Super Eights, Group 2 - B2 v D2
    R.Premadasa Stadium, Colombo
    Oct-2012
    Mon 01 Day/Night
    10:00 GMT, 15:30 local
    21st Match, Super Eights, Group 1 - A1 v C1
    Pallekele International Cricket Stadium, Kandy

    Mon 01 Day/Night
    14:00 GMT, 19:30 local
    22nd Match, Super Eights, Group 1 - B1 v D1
    Pallekele International Cricket Stadium, Kandy

    Tue 02 Day/Night
    10:00 GMT, 15:30 local
    23rd Match, Super Eights, Group 2 - A2 v C2
    R.Premadasa Stadium, Colombo

    Tue 02 Day/Night
    14:00 GMT, 19:30 local
    24th Match, Super Eights, Group 2 - A1 v D2
    R.Premadasa Stadium, Colombo

    Thu 04 Day/Night
    14:00 GMT, 19:30 local
    1st Semi-Final - TBC v TBC
    R.Premadasa Stadium, Colombo

    Fri 05 Day/Night
    14:00 GMT, 19:30 local
    2nd Semi-Final - TBC v TBC
    R.Premadasa Stadium, Colombo

    Sun 07 Day/Night
    14:00 GMT, 19:30 local
    Final - TBC v TBC
    R.Premadasa Stadium, Colombo
    Read more...

    Sunday, June 24, 2012

    5

    எனக்கு பிடித்த கவியரசு கண்ணதாசன் அவரது செப்பு மொழிகள்

  • Sunday, June 24, 2012
  •               தமிழுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் எனக்கு பிடித்த தமிழ் கவிஞர்கள் இருவர். முதலாமவர்   பாரதி    அடுத்து  கவியரசு கண்ணதாசன் . பாரதியார் பாடல்கள் பள்ளியில் முதல் வகுப்பில்  ஓடி விளையாடு பாப்பாவிலிருந்து  அறிமுகம் ஆனால்  கண்ணதாசன் ஆறாம் வகுப்பு அல்லது ஏழாம் வகுப்பிலோ இயேசு காவியம்  படித்தாதாக நினைவு. பாடப்புத்தகம் தவிர வேறு புத்தகங்கள்வாங்கி படிக்கும் பழக்கம் இல்லை பதினொன்றாம் வகுப்பில் தமிழ் கட்டுரைப்போட்டியில் முதல் பரிசு வாங்கியதற்கு ஒரு புத்தகம் கொடுத்தார்கள் அதை படித்தபின் கண்ணதாசன் எழுத்துக்கள் ஒரு நல்ல நண்பன்   என்று சொல்லலாம் அந்த புத்தகம் "கண்ணதாசனின் செப்பு மொழிகள் ". ஒவ்வொருமுறை வீட்டிற்கு செல்லும்போதும்  படிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும் .

                     இந்த புத்தகத்தை படிக்காதவர்களுக்கு அப்படியென்ன புதிதாக  சொல்லி இருக்கப்போகிறார் இதில் என நினைக்கலாம் கதையாகவோ , பாடல் வரிகளாகவோ   இருக்கும் என எண்ணி  நானும்  திறந்தேன் .ஏனெனில் பேச்சுபோட்டி ஆங்கிலகட்டுரை என மேலும் சில போட்டியில் வென்றதற்கு பாரதிதாசனின் அழகின் சிரிப்பு,    பாண்டியன் பரிசு என கொடுத்திருந்தனர் அவற்றை எல்லாம் அந்த வயதில் படிக்கும் பொறுமை கொஞ்சம் கூட இல்லை இருந்தாலும் பரிசாக வாங்கியது  என திறந்து பார்த்து எல்லாமே பாடல் வரிகள் இதற்க்கு அர்த்தம் தெரிந்து புரிந்து கொள்ளவேண்டும் நமக்கு சாத்தியம்  இல்லை  என சலித்து இறுதியாக தான் திறந்தேன் இப்புத்தகத்தை  கண்ணதாசன் என்ன எழுதியிருக்கப்போகிறார் ? 

                    முதலில் விளக்கவுரை அப்போதெல்லாம் இதையெல்லாம் எதற்கு எழுதுகிறார்கள் அவர் எழுதிய புத்தகம் எப்படியும் நன்றாக தான் இருக்கும் இதனை யாருக்காவது சமர்ப்பிக்கிறேன் என சொல்லபோகிறார்கள் என எண்ணம்தான்தோன்றியது  . சரி இதாவது உரை நடையில் இருக்கிறதே  என படித்தேன். அதில் நான் ஏன் பொன் மொழிகள் என இப்புத்தகத்திற்கு பெயர் வைக்காமல் செப்பு மொழிகள் என வைத்தேன் பொன்னில் கலப்படம் உண்டு அதனை உறுதியாக்க உலோகங்களை கலப்பார்கள். ஆனால் செப்போ எவ்வித கலப்போ இல்லாமல் தூயது . இதில் என்னுடைய அனுபவங்களை பகிர்ந்துள்ளேன் என எழுதியிருந்தார் . என்ன எழுதி இருந்தாலும் சரி படித்தே தீரவேண்டும் எனும் ஆர்வம் வந்தது முதல் பக்கம் சென்று படிக்கத்தொடங்கும் பொது இன்னும்  ஆச்சர்யம் பாடல் வரிகள் இல்லாமல் எளிமையாக எல்லோருக்கும் புரியும் வகையில் உரைநடையில் அதுவும் ஓரிரு வரிகளில் திருக்குறள் போல எழுதப்பட்டிருந்தது.

                           அரசியல் , சமுதாயம், நட்பு , சினிமா , பொருளாதாரம் , சொந்த வாழ்க்கை இல் நடந்த,இழப்பு ,குடிப்பழக்கம் , பெண்கள் என  எதையும் மறைக்காமல்    அவரது அனுபவ மொழிகளை மிக நகைச்சுவையாக நமக்கு உணர்த்தியிருப்பார்  இருப்பார் .   படிக்க படிக்க ஆச்சர்யமும் ஆர்வமும் கண்டிப்பாக தோன்றும் நினைத்தது போலவே அன்று முழுமையாக படித்து விட்டுதான் மூடிவைத்தேன் ..நடிகைகள் மீது  அவருக்கு என்ன கோபமோ ? அதிகமாக அவர்களைப்பற்றி அவர்களைப்பற்றி எழுதியிருப்பார் .

    சில வரிகள் உங்களுக்காக  

    காந்தியைப் போல் எல்லோரும் வாழ்ந்தால் எப்படி இருக்கும்?  கடலை வியாபாரம் நன்றாக நடக்கும்.

    நன்கொடை என்பது என்ன?வாங்குகிறவனை நன்றாக ஆக்குவது. கொடுப்பவனை None  ஆக ஆக்குவது.

    ஒரு பிரபல நடிகையின் தாய் பொதுத் தேர்தலில் ஓட்டுப் போட முடிவதில்லை ஏன்?
    ஓட்டுப் போடும் வயது இன்னும் வரவில்லை.

    கலியுகத்தில் கண்ணன் என்னென்ன நட்க்குமென்று சொன்னபோது மற்றுமொரு கருத்தையும் சொல்லியிருக்கிறான் அதுவென்ன மற்றுமொரு கருத்து?
    நடிகையின் பாட்டி அந்த நடிகைக்கே மகளாக நடிப்பாள்.

    பைத்தியக்கார ஆஸ்பத்திரியிலுள்ள பலரை விசாரித்ததில். எப்படி பைத்தியமானார்கள்?சினிமா நடிகைகளை மேக்கப்பில்லாமல் பார்த்ததினால்.

    சிறந்த மேடைப்பேச்சு என்பது  என்ன? பேசுபவருக்கே புரியாமல்பேசுவது  .

    இப்படி நகைச்சுவையாக அவரின் அனுபவங்களை நாம் அன்றாடம் சந்திக்கும் நிகழ்வுகளை சொல்லி இருப்பார் .

              கல்லூரி முடித்து வேலைக்கு சென்றபின் எங்கள் அலுவலகத்தில் தினமும் ஏதாவது கருத்தை அலுவலக வாயிலில்  உள்ள   போர்டில்  எழுதவேண்டும். பெரும்பாலும் தினசரி காலண்டரில் இருக்கும்  கருத்துக்கள் எழுதுவார்கள். நான்  எழுதியது  பெரும்பாலும் கண்ணதாசனின் இப்புத்தக  வரிகள்தான் , கருத்தை எழுதிவிட்டு கீழே  கண்ணதாசன் என எழுதும்போது ஏதோ என்   பெயரை எழுதுவது போலத் தோன்றும். உயர் அதிகாரிகள் ஆய்வுக்கு  வரும்போது இதனை பார்த்து நல்லா   இருக்கே யார் இங்க எழுதியது ?என இரண்டு மூன்று முறை கேட்டது உண்டு .

                இப்போதும் எனக்கு வாரம் தோறும்  சனிக்கிழமை   தினத்தந்தி நாளிதளில்  வரும் அர்த்தமுள்ள இந்து மதம் என  கண்ணதாசன் இன்னும்   பல வாழ்வியல் அர்த்தங்களை சொல்லிக் கொண்டுதானிருக்கிறார்  என்  கண்ணதாசன் .


    அர்த்தமுள்ள இந்துமதம் எழுதிய அதே கண்ணதாசன் இந்து மதத்தில் பிறந்தவராயினும் மதவேற்றுமை கருதாமல் "ஏசுகாவியம் " இயற்றியவர் .

               தம்முடைய நல்ல பக்கங்களை மட்டுமே இவ்வுலகிற்கு காட்டும் மனிதர்கள் மத்தியில்  அவரது  அனைத்து குணங்களையும்  இவ்வுலகிற்கு  அனுபவமாக எடுத்து சொல்லிய கவியரசு உண்மையான வழிகாட்டி .
    Read more...

    Sunday, June 17, 2012

    1

    நான் -விஷால்- நித்யானந்தா & பேப்பர் பாய்

  • Sunday, June 17, 2012


  •   காலை 11 மணிக்கு சார் என்று சத்தம் சண்டே கூட தூங்க விடமாற்றானேன்னு நினைத்துக்கொண்டு  போய் கதவை திறந்தால் பேப்பர் போடும் பையன்.........


    பேப்பர் போடும் பையன் : சார் பேப்பர் பணம்,சார் இந்த மாசம் எல்லா நாளும் சரியா வந்திருக்குமே! சார் நான்தான் போட்டேன்.


    (பேப்பர் மாதத்தில் 2-3 நாட்கள் ஒழுங்காக வரவில்லை என்று இதற்க்கு முன் சொல்லி இருந்தேன்)
    இந்த மாசம் எதுவும் சொல்லமுடியாதே   என்பது போல பார்த்தான்..
    வழக்கம் போல் எவ்வளவு என்று கேட்டு பணத்தை எடுத்து வந்து கொடுக்கும் போது..

    (இந்த மாசம் எதுவும் சொல்லமுடியாதே     என்பது   போல பார்த்தான் )
    நான் : என்னப்பா இந்த மாசம் பேப்பர்ல நியூஸ் ஒன்னும் சரி இல்ல ஒரே போர் ன்னு 

    சொன்னவுடன்...,அந்த பையன்     கடுப்பாகி பார்த்தான்
    நான் :இந்தாப்பா பணம் என்று சொல்லி (ஜெய் எஸ்கேப்).



    ஆபீஸ் முடிந்து எக்மோர் ஸ்டேசனில் ட்ரெயினுக்காக வெயிட் செய்துகொண்டிருந்தபோது உடன் 
    பணிபுரியும் நண்பன் பிஸ்கட் வாங்கி வந்தான் அப்போது ட்ரெயின் வர ஏறிய பின் வந்து எடுத்துக்கோ என்று சொன்னான் . 
    நான் வேறு யோசனையில் இருந்ததால் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். அடுத்த நாள் ஆபீஸ் 
        வந்து நான் அவனிடம் லஞ்ச் போகலாம் வா என கூப்பிட்டேன் . , நான் பிஸ்கட் குடுத்தா 
    சாப்பிட மாட்ட இப்போ  மட்டும் எதுக்கு கூப்பிடற என்று கோவப்பட்டுக்கொண்டிருந்தான் , .
    .இல்ல மச்சி ட்ரெயின் ல பிஸ்கட் யார் குடுத்தாலும் சாப்பிட கூடாதுன்னு டிவி விளம்பரத்துல 
    போடுறத நீ பாக்கலியா என கேட்க்க  ,அவன் கடுப்பாக... #ஜெய் எஸ்கேப்


    ===============================================
    நித்யானந்தாவை கர்நாடக போலீஸ் கைது செய்ய போகும்போது நித்யானந்தாவின் பதிலைக்கேட்டு 


    கர்நாடக போலீஸ் பயந்து திரும்பி வந்து விடுகின்றனர் அவர் என்ன அப்படி சொல்லி இருப்பார்                      ?...
    ?
    ?
    ஏய் நானும் மதுரைக்காரன்(மதுரை ஆதீனம் ) தாண்டான்னு சொல்லிட்டாரு அதனால கர்நாடக 


    போலீஸ் பயந்து ஓடிட்டாங்க #விஷால் ராக்ஸ்




    லவ் பண்ணுரவனுக்கு போன் பண்ணி பிறந்த நாள் வாழ்த்து சொல்லுறத விட கஷ்டமான காரியம் உலகத்துல ஏதும் இல்ல ஒரே வெயிட்டிங் கால் 

    ===================================================================
    எவன் D உன்ன பெத்தான் பெத்தான் .. #தந்தையர் தின வாழ்த்துக்கள் #இப்படிக்கு இன்று ஒருநாள் மட்டும் சிம்புவின் விழுது
    Read more...

    Tuesday, June 5, 2012

    2

    உங்கள் username ,password எப்படி திருடப்படுகிறது எப்படி தடுக்கலாம்

  • Tuesday, June 5, 2012

  •    இணையதளம் பல வழிகளில் நம் வேலைகளை எளிமையாக்கினாலும் அதன் இன்னொரு பக்கம் கொஞ்சம் ஆபத்தானது என்பதை மறுக்க முடியாது ,
    இணைய தள பாதுகாப்பு முறைகளை கையாள்வதில் எடுக்கப்பட்ட கருத்துகணிப்பில் நம் நாடு முதல் நாற்ப்பது இடங்களில் கூட வரவில்லை . முதலில் தகவல் எவ்வாறு திருடப்படுகிறது என்பதை தெரிந்தால் அதனை பாதுகாக்கும் வழி மிக சுலபமாகிவிடும் . பல வழிகளில் நம் இணைய தள  கணக்குகள் திருடப்படுகின்றன அவற்றில்   ஒன்றை இந்த பதிவில் பார்ப்போம் .

        ஒரே கணினியை பயன்படுத்துகிறீர்களா நீங்கள் சேமித்து வைக்கும் உங்கள்   username ,password ஆகியவை திருடப்படலாம் , எனவே பாதுகாப்பாக பயன்படுத்துங்கள் .இதற்க்கு மிக சிறந்த வழி உங்கள் கணினியை பகிர்ந்துகொள்கின்றவர்களுக்கு தனிLogin  உருவாக்கி கொடுத்துவிடலாம் . நீங்கள் எப்படி திருடப்பட வாய்ப்புள்ளது என்பதை இப்போது தெரிந்து கொள்வோம் .
                 
      நீங்கள் பயன்படுத்தும்  தளங்களின்   username ,password போன்றவற்றை Firefox ,google crome ல் இருந்து கண்டுபிடிக்கலாம் அதுவும் ஒரு சில நொடிகளில் .மறந்துபோகின்றவர்களுக்கு இது நல்ல பயன்தரும் .பயன்படுத்தும் Username மற்றும் Password அனைத்தும்.
    இணையதளத்தில் பெரும்பாலும் IE விட Firefox ,chrome மிக  பாதுகாப்பானது ,வேகமானது .
    நாம் பல்வேறு இணையதளங்களில் உபயோகப்படுத்தும் username ,password ஆகியவை நமது Firefox, Google Chrome ல் சேமித்து வைக்கபட்டுஇருக்கும்    அவற்றை எப்படி கண்டுபிடிக்கலாம் என்று பார்ப்போம் . 
    தடுக்கலாம் 

    1) Mozilla Firefox சென்று 

    2)  Edit  பட்டனை அழுத்தி   > Preferences என்பதை தேர்வுசெய்துகொள்ளுங்கள் .

    3) பிறகு security tab சென்று 

    4)"view saved passwords"  பட்டனை அழுத்தி .

    5) இறுதியாக  "show passwords " பட்டனை தேர்வு செய்து  பார்த்துக்கொள்ளலாம் .

     முதலில் sitename, username  காட்டும்  பிறகு show password button மூலம் password காட்டும் அவ்வளவுதான் நீங்கள் மறந்துபோன  Username,password ரெடி.


    அடுத்து Google chrome ல் எப்படி என்று பார்ப்போம்

    1. Google chrome சென்று 

    2.படத்தில் காட்டியவாறு வலது புறப்புறம் மேலே உள்ள ஸ்பானர் போன்று  இருக்கும் பட்டனை அழுத்தி யவுடன்  புதிதாக தோன்றும் விண்டோவில் 

    3.
    Personal stuff  என்பதை தேர்வுசெய்து  அங்கிருக்கும் manage  password   பட்டனை அழுத்தி யவுடன் -> Show saved passwords என்பதை தேர்வு செய்ததும்  நீங்கள் பயன்படுத்தும் தளத்தின் பெயரும் username ஆகியவை காணப்படும்  ,ஆனால் password ....... ஆக இருக்கும் அந்த இடத்தில் உங்கள் கர்சர் pointer  ரை  வைத்தால்  show  என காட்டும் அதனை அழுத்தியதும் உங்கள் password -ம்  கிடைக்கும் ... இனி password  மறந்துவிட்டது என்ற கவலை இல்லை .. பயன்படுத்த நீங்கள்    உங்கள்  username ,password ஆகியவற்றை save செய்திருக்கும்போது மட்டும் பயன்படுத்த முடியும் ..


                இதனை பயன்படுத்தி மற்றவர்கள் உங்கள் கணினியில் இருந்து கண்டுபிடித்து  விடுவார்கள் இதனை  master password அமைப்பது போன்ற  இன்னும் சில வழிகளிலும்  பாதுகாக்கலாம் இவற்றைப்  பற்றி   அடுத்த பதிவில் ...
    எனது ட்விட்டரில்  இருந்து :
    லவ் பண்ணுரவனுக்கு போன் பண்ணி பிறந்த நாள் வாழ்த்து சொல்லுறத விட கஷ்டமான காரியம் உலகத்துல ஏதும் இல்ல ஒரே வெயிட்டிங் கால் #HappyBDay


    மெதுவாக பந்து வீச்சு: ஹர்பஜன்சிங்குக்கு ரூ.10 லட்சம் அபராதம் -- டேய் நான் ஸ்பின் பௌலர் மெதுவாதாண்டா வீசமுடியும் #ஹர்பஜன் மைண்டு வாய்ஸ்

    இதையும் படிங்க 


    ரத்த பூமி எங்க ஊர் நாட்டாமை- பஞ்சாயத்து
    Read more...

    Saturday, June 2, 2012

    0

    software பயன்படுத்தாமல் இலவசமாக நமக்கு பிடித்த ரிங்க்டோன்.

  • Saturday, June 2, 2012

  • இசைக்கு  இன்று இனியபிறந்தநாள் வாழ்த்துக்கள் .
     நமக்கு பிடித்த ரிங்க்டோன் நாமே உருவாக்கலாம்.எவ்வித software பயன்படுத்தாமல் .. இந்த எளிய வழிகளை பின்பற்றி online இல் இலவசமாக http://www.makeownringtone.com/ தளம் வழங்குகிறது .
    * Upload, பட்டன் அழுத்தி edit செய்யவேண்டிய Mp3 file தேர்வு செய்துகொள்ளுங்கள் mp3, wma or ogg audio file.
    * முதலில் இவற்றை ஓடவிட்டு உங்களுக்கு தேவையானபகுதியை  குறிப்பிடுங்கள்  .

    * make a ringtone பட்டன் தேர்வு செய்து ok கொடுத்தால் உங்களுக்கு தேவையான ரிங் டோன் தயார் ..
    * இதனை   save செய்துகொள்ளுங்கள்  .

    இனி ஒவ்வொரு தளமாக சென்று நமக்கு பிடித்த பாடலை தேட தேவை இல்லை .இலவசமாக இந்த தளம் சென்று நமக்கு வேண்டிய வடிவில் நாமே பெற்றுக்கொள்ளலாம் .இதற்கென இலவச சாப்ட்வேர் தேடி அலைந்து கணிணினியில் நிறுவாமல் எளிதாக நாமே உருவாக்கலாம் ...


    Read more...

    Thursday, May 31, 2012

    0

    ரத்த பூமி எங்க ஊர் நாட்டாமை- பஞ்சாயத்து

  • Thursday, May 31, 2012
  •                   படையப்பா , நாட்டாமை போன்ற படங்களை பார்க்கும் போது பஞ்சாயத்து & தீர்ப்பு  சொல்லும்   காட்சிகள் விறுவிறுப்பாகவும்  மிக சுவாரஸ்யமாகவும் இருக்கும் எப்படியாவது தவறு செய்தவர்களை கண்டுபிடித்து தண்டித்துவிடுவார்கள் என்ற எண்ணம் தோன்றும் , முதன்முதலில் பஞ்சாயத்து காட்சியை கலாய்த்தவர்  நம்ம கௌண்டமணிதான் ராம்கியுடன் சேர்ந்து "ஆகா என்ன பொருத்தம்" படத்தில். இந்த   படம்   கடந்த  மாதம் ஊருக்கு சென்றபோது கே. டிவி இல் பார்த்தேன்  நீண்ட நாட்களுக்கு பிறகு அதே அளவு சிரிப்பு எனது நட்பு வட்டாரத்தில் எல்லோருக்கும்  பிடித்த  படம் என்று     சொல்லலாம்,  அதன்பிறகு எல்லோரும் பஞ்சாயத்து காட்சிகளை கிண்டல் செய்ய ஆரம்பித்தனர் கௌண்டமணிக்கு அடுத்து விவேக் காதல் சடுகுடுவில் கலக்கி  இருப்பார்   ..  

                  இதை எல்லாம் எதற்கு சொல்கிறேன் என்றால் எங்கள்  ஊரில் நடந்த ஒரு கலகலப்பான  பஞ்சாயத்து பற்றி இந்த பதிவில் பகிரப்போகிறேன் ,ஊரில் திருட்டு,சண்டை ,  நிலத்தகராறு எது நடந்தாலும் பஞ்சாயத்துதான் காவல் நிலையம்  எல்லாம்  கடைசியாகத்தான் போவார்கள்    .அப்போது ஒன்பதாவது அல்லது பத்தாவது படித்து   கொண்டிருந்ததாக நினைவு      எங்கள் ஊரில் ஐந்தாம்  வகுப்புவரை  மட்டும்   இரண்டு பள்ளிகள் உள்ளன .(இரண்டையும் சேர்த்து  எட்டாம் வகுப்பு வரை வைத்திருந்தாள் இந்த பிரச்சினை வந்திருக்காது )
                          
                 ஐந்தாம் வகுப்பிற்கு மேல் 3 கிலோமீட்டர் அருகில் உள்ள செட்டிக்குளம்  எனும் ஊரில் தான் படிக்க செல்லவேண்டும் பஸ்சிலோ அல்லது  சைக்கிளிலோ  சென்று வருவோம்   அன்று ஸ்கூல்   முடிந்து வீட்டுக்கு    வந்த நண்பன் சதீசுடன் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தேன் , சிறிது   நேரத்தில் தெருவில் ஒரே சத்தம் என்ன வென்று போய் பார்த்தால்  எங்கள் ஊரை சேர்ந்த இரண்டு பெண்களை ஸ்கூலில்  இருந்து வரும்போது அந்த ஊர் பையன்கள் 3 பேர் கிண்டல் செய்து கொண்டிருந்ததை  எங்கள் ஊர் ஆட்கள் சில  பேர் பார்த்து அந்த பையன்களை  இழுத்து வந்து ஊரின் நடுவில் உள்ள கம்பத்தில் கட்டி வைத்து  அங்கிருந்த பஞ்சாயத்து தலைவர்கள்  ஆளுக்கு ஆள் அந்த பசங்களை அறைந்து  கொண்டிருந்தனர், பெண்கள் நீங்க எல்லாம் படிக்கிற பசங்களா  என அர்ச்சனை செய்யத்தொடங்கினர் . 
                        சற்று நேரத்தில் மீதம் வர வேண்டிய  பஞ்சாயத்து தலைகளும் வந்து சேர ஆகா என்ன பொருத்தம் போல எல்லாரும் அமைதியா இருங்க என்ன பிரச்சினைன்னு கேட்க ஆரம்பிக்க .. இப்போதுதான் களைகட்ட ஆரம்பித்தது   அங்கிருந்த இன்னொரு தல நம்ம ஊரு பொண்ணுங்கள இந்த பசங்க ராகிங் பண்ணிடாங்க அதான் புடிச்சி கட்டி வெச்சிருக்கோம் என சொல்ல ,அங்கிருந்த நான்கைந்து தலைகளும் கோபமாகி  யார் என விசாரித்து" காந்தி பொறந்த மண்ணுல ஏன்டா இப்புடி பொம்பள புள்ளைங்கள ரேகிங்  பண்ணுறீங்க? ",என பஞ்ச் டயலாக் சொல்ல பக்கத்திலிருந்த நாங்கள் மச்சி    காந்தி குஜராத்ல பொறந்தாரு இவங்க என்னனா நாம் ஊர் சொல்லுறாங்க என சொல்லி  எங்களுக்கு வந்த சிரிப்பை அடக்கி கொண்டு வேடிக்கை பார்க்க தொடங்கினோம். இப்பொது  கூட நண்பர்களுடன் பேசும்போது  "காந்தி பொறந்த மண்ணுல ஏன்டா இப்புடி? " என ஜாலி யாக சொல்லி சிரிப்போம்  அந்த அளவுக்கு மறக்கமுடியாத  ஒன்று , 
        
                         அடுத்து படிக்கிற வயசுல ஏன்டா இப்படி பண்ணுறீங்க என பஞ்சாயத்து தலைகளின்  அட்டகாசம் தொடர்ந்தது...எப்படா   தீர்ப்பு சொல்லுவாங்க என நினைத்துக்கொண்டு பார்த்துகொண்டிருந்தோம், சில நிமிடச்ங்களுக்கு பிறகு தீர்ப்பில் அவர்களுக்கு தண்டனை கொடுக்க தீர்மானித்து , என்ன தண்டனை சின்ன பசங்கள் என்ன பண்ணலாம் என்று யோசித்து இறுதியாக ஒருவரை கூப்பிட்டு போய் ஒரு ஆறு செங்கல் கொண்டுவரச்சொன்னார்கள் , தலைவர்  என்னமோ  பண்ணப்போகிறார்   என அனைவரின் முகத்திலும் ஆச்சர்யம் பாவம் அந்த பசங்கள் பயத்துடன் ஏற்கனவே நல்ல அடி வேறு விழுந்ததால் பரிதாபத்துடன்  பார்த்துக்கொண்டிருந்தனர் .. செங்கல் வந்ததும் அந்த பசங்களை அவிழ்த்து விட சொல்லி அவர்களை வந்து இந்த செங்கல் மேல் கால்  மணி  நேரம் முட்டிகால் போடுங்கள் என சொல்லி அந்த பசங்களை முட்டிக்கால் போட வைத்தனர். 

               இதில் முக்கியமான விசயம் என்ன வென்றால் அந்த பசங்களின் குடும்பப்பின்னணி       பெரிதாக இல்லை என்று  தெரிந்தபின்தான்  அந்த பஞ்சாயத்து தலைகள்  தீர்ப்பு சொன்னார்கள் ... இதுபோல பல முறை பஞ்சாயத்துதீர்ப்புகள்  நடந்திருந்தாலும் ,இது மறக்கமுடியாத ஒன்றுஎல்லாமே பெரும்பாலும் தப்பு செய்தவரின்  பின்னணிக்கு  ஏற்றவாறு  தீர்ப்பு சொல்லும்  கட்டபஞ்சாயத்து   ...  ஆனால் இப்போதெலாம் ஏனோ நோ பஞ்சாயத்து நோ தீர்ப்பு ...

    ஊரைவிட்டு வந்துவிட்டோம் என்பதாலா?.. என்ன நாங்க எல்லாம்   ..........................

    Read more...

    Sunday, May 27, 2012

    1

    பர பர விறு விறு TC சம்மர் கப் கிரிக்கெட் அப்டேட்ஸ்

  • Sunday, May 27, 2012
  •  Trouble creators cricket club mavilangai- summer cup- updates 

     போட்டி 1:மே 12,13 இல் நடந்து முடிந்த Trouble creators cricket club mavilangai- summer cup இல் main sponsor ராமகிருஷ்ணன் தலைமையில் அரவிந்த்,நான் +8 பேர்கள்  பில்லா அணியினரும்  . இன்னொரு main sponsor பெண்களூரு பார்த்திபன் தலைமையில் பிரபாகர் ,வினோத் , பிரகதீஷ் ,கௌதமன் என  துப்பாக்கி அணி யினரும்  விளையாடினோம் சனிக்கிழமை நடைபெற்ற முதல் போட்டியில் எங்கள் பில்லா அணி டாஸ் வென்று பந்து வீசத்தொடங்கினோம் .எப்பவும் டோஸ் எப்படா  ஜெயிப்போம் பேட் பண்ணலாம் ன்னு இருக்கும் இந்த டைம் வின்  பண்ணனும்னு பந்து வீசத்தொடங்கினோம் ,ஆரம்பத்தில் விறுவிறு வென உயர்ந்த ஸ்கோர் பிறகு குறைந்து இறுதியில் 
    15 ஓவர்களின் முடிவில்  துப்பாக்கி அணியினர் 94 ரன்கள் அடித்தனர் .அடுத்து பேட் செய்த எங்கள் அணி மெதுவாக 14 ஓவர்களில் 83 ரன்கள் 7 விக்கெட்டுக்கு எடுத்தோம்  கடைசி ஓவரில் 11  ரன்கள்  தேவைப்பட்டது அவ்வளவுதான் என்று நினைத்தபோது  .... திக் திக் கடைசி ஓவரில் இருந்தது இரண்டாவது & ஐந்தாவது பந்தில் four   அடித்து கடைசி பந்தில் ஒரு ரன் அடித்து எங்கள் அணி வெற்றிபெற்றது ....   

    போட்டி 2:  அடுத்த போட்டி ஞாயிறு காலை தொடங்கியது அந்த போட்டியில் துப்பாக்கி அணியினர் டாஸ் வென்று எங்களுக்கு பந்து வீசத்தொடங்கினர்  பார்த்திபனின் சிறப்பான பந்து வீச்சை  சமாளித்து ஒரு வழியாக 76 ரன்கள் சேர்த்தோம்  இந்த குறைவான ரன்களை வைத்து முடிந்த வரை போராடலாம் என்று எண்ணி பந்து வீச்சை துவக்கினோம் ஆனால் விக்கெட் தான் விழவே இல்லை பிரகதீஷ் ரைனா போல செம்ம அடி அடித்துக்கொண்டிருந்தார் இந்த ஆட்டமும் பரபரப்பின் உச்சத்தை அடைந்தது இறுதி ஓவர் 4 விக்கெட் இருந்தது அடிக்க வேண்டியதோ 3 ரன்கள்  இன்னும் மச்சி பிரகதீஷ் அவுட் ஆகவில்லை .... இந்த முறை முதல் நான்கு   பந்துகளில் சொதப்பலான பீல்டிங்கால் 3  ரன்கள்   கொடுத்து இரண்டு விக்கெட்டுகள் கிடைத்தன 5 வது பந்தில் விக்கெட் விழ இன்னும் பரபரப்பானது கடைசி பால் ரன் அவுட் ஆனது இந்த ஓவர்ரை வீசியது சத்தியாம நம்புங்க நான் தான் (ஒரு விளம்பரம் ) ஒரு வழியாக வெற்றி பெறவேண்டிய போட்டி டிரா ஆனது ..lol 

    Jr .Trouble Creators cup :
    இதற்கிடையே ஜூனியர் போட்டி தொடங்கியது இந்தபோட்டி செம்ம விறுவிறுப்பு கடைசி பந்தில் சிக்ஸ் அடிக்கவேண்டும் என்ற அளவிற்கு போனது முதல் முறையாக எங்களுக்கு சிறுவயதில் கிடைக்காத வாய்ப்பை அவர்களுக்கு வழங்கினோம் அவர்கள் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி ...இனி ஒவ்வொரு வருடமும் அவர்களுக்கு நடத்த வேண்டும் என்று ..
         இன்னும் ஒரு போட்டி மீதம் இருக்க  அதனையும் விளையாட தொடங்கி டாஸ்   வின்  பண்ணியதும் இந்தமுறை பேட்  செய்ய தொடங்கினோம், அப்போதே  மழைத்தூறல் வர ஆரம்பித்தது பத்து நிமிடங்களில் இன்னும் வேகமாக  வர ஆட்டம் நிறுத்தப்பட்டது 
    (இன்னும் நிறைய  விறு விறு அப்டேட்ஸ் இருந்தாலும்  சுருக்கமாக முடிக்கிறேன் )
    இடி & மழை :
    இறுதியாக பரிசளிப்பு அதற்குள் என்ன பரிசு என்று கேட்டுக்கொண்டிருந்தனர் , இந்த முறை சிறிய பரிசு அடுத்தமுறை இன்னும் உயர்ந்த விலையில் கொடுக்கிறோம் சங்கம் கடனில் போய்க்கொண்டிருக்கிறது என்று சொல்லும்போது பெரிய இடி சுமார் 20 அடி தூரத்தில் பளிச்சென்று விழுந்தது சீக்கிரம் இங்கிருந்து செல்ல வேண்டும் என  இரண்டு கேப்டன் களிடம் இரண்டு மெயின் ச்போன்சொர் கள் பரிசு வழங்கி பின் எங்கள் அணிகளுக்கும் பரிசு வழங்கப்பட்டது .. அதிரடியாக தொடங்கிய போட்டி இறுதியில் இடி மழையுடன் சிறப்பாக முடிந்தது ..... மொத்தத்தில் குறுகிய காலத்தில் திட்டமிட்டு  சிறப்பாக முடிந்தது .

    முதன்  முறையாக இம்முறை சிறப்பாக விளையாடுபவர்களுக்கு 4 cap  வழங்கப்பட்டது ...

    Max  ரன்கள் orange cap  :  TC ரைனா - பிரகதீஷ் 
    Max  விக்கெட்  purple  cap  :  TC  யுவராஜ்- பார்த்திபன் 
    Max catch red cap  :Tc  முரளி விஜய் - வினீத் 
    Max  six yellow cap  :   ஜெயக்குமார் கிருஷ்ணா     அட நாந்தாங்க மறுபடியும் நம்புங்க ...
    ரன் விக்கெட் கேட்ச் என cap   துப்பாக்கி டீம் வாங்கி இருந்தாலும் ஜெயிச்சது எங்கள் டீம் தான் ... 
    ஆடாம ஜெயிச்சோமடா   .....
    எனது ட்விட்டரிலிருந்து :@jaikumarkrishna 

    1. இந்த மினி பஸ் டிரைவர் கண்டக்டர் இளையராஜா பாட்ட இவனுங்க பாட்டு மாதிரி போட்டு பிகர்களை உ ஷார் பண்ணிடுறானுங்க

    2.மெதுவாக பந்து வீச்சு: ஹர்பஜன்சிங்குக்கு ரூ.10 லட்சம் அபராதம் -- டேய் நான் ஸ்பின் பௌலர் மெதுவாதாண்டா வீசமுடியும் #ஹர்பஜன் மைண்டு வாய்ஸ்

    3.நோபால் வீச ரூ.10 லட்சம் -அப்புடின்னா நம்ம TC சம்மர்கப்ல நான் போட்ட 10 நோ பாலுக்கு 1கோடி கிடைசிருக்கும்  # மச்சி பிரகதீஷ் மைண்டு வாய்ஸ்.

    4.ஜோசிய கிளிகளை எத்தன டோனி வந்தாலும் திருத்தவே முடியாது #சென்னைக்கு விசில் போடு

    5.ஒருத்தன் டா-ன்னு சொன்னாலே கோவமா திட்டுவோம் ஆனால் இந்த கங்குலிய Dada ன்னு ரெண்டு டா(da) போட்டுகூப்புடுறாங்க இவருக்கு ஏன் கோவமே வரல

    Read more...

    Wednesday, April 18, 2012

    7

    பார்த்திபன் & அரவிந்த்ஷா இணைந்து கலாய்க்கும் எங்க ஊருக்கு எப்போ மழை வரும் ?

  • Wednesday, April 18, 2012


  • இடம் :Mavilangai  Trouble  creators  TV   studio .
    உறுப்பினர்கள் : TC விராத் கோலி-  அரவிந்த் , TC யுவராஜ்-  பார்த்திபன்  சிறப்பு தோற்றம் நம்ம TC சேவாக்- பிரகதீஷ் ..

    இரண்டு வருடங்களுக்கு(2010)  முன்பு.. (இதுக்கெல்லாம் falsh  back  கா அவ்வ்வ்வ்  )
    சேலம் கிங்க்ஸ் காலேஜ் எக்ஸாம் ஹால் .......

    ஹால் சூப்பர் வைசெர் பார்த்திபன்: டியர் ஸ்டுடென்ட் எல்லாரும் கொஸ்டின் பேப்பர் ஆன்செர் சீட் வாங்கிக்கோங்க  ..

    அரவிந்த்ஷா பக்கத்துல இருக்கிற பிரகதீஸ் கிட்ட   அவரோட கொஸ்டின் பேப்பர் ஆன்செர் சீட் கொடுக்கிறதை பார்த்துவிட்டு பக்கத்தில் வந்து  
           (   left  ல இருந்து முதலாவதா இருக்காரே அதாங்க பவர் ஸ்டார் மாதிரி ஸ்டைலா லுக் விடறார் அவர்தான் பார்த்திபன் )
     பார்த்திபன்: தம்பி என்ன பண்ணுற உன்னோட  கொஸ்டின் பேப்பர் ஆன்செர் சீட்ட  எதுக்கு அவன்கிட்ட பாஸ் பண்ற..?
    அரவிந்த்ஷா:சார் எங்க அப்பா எப்புடியாவது இந்த பேப்பரை பாஸ் பண்ண சொன்னாரு..இல்லன வீட்டுக்கு வராதன்னு சொல்லிடாரு .
     
      பார்த்திபன்: ஏன்டா ஏன் காலேலையே  கடுப்பேத்துற?
    அரவிந்த்ஷா:சார் இன்னைக்கி எக்ஸாம் காலேல வெச்சிடாங்க சார் நான் என்ன பண்றது ..
    ( ஒண்ணுமே தெரியாத அப்பாவி மாதிரி இருக்குற கட்டம் போட்ட சட்டை தான் நம்ம அரவிந்த்ஷா )
      பார்த்திபன்:  ஒழுங்கா மொக்க போடாம எக்ஸாம் எழுது 
    அரவிந்த்ஷா:சார் எந்த கேள்விக்கும் பதில் தெரியல  ?இதுல இருக்குற 15  மார்க் கேள்விக்காச்சும்    பதில் சொல்லுங்க சார் ?
     பார்த்திபன்: இதுக்கு பதில் நாக்க புடுங்கிட்டு சாகலாம் 
    அரவிந்த்ஷா:அப்டியா சார் இந்த கேள்விக்கு இதான் பதிலா? அப்டியே அடுத்த கேள்விக்கும் பதில் சொல்லுங்க சார் ?
       பார்த்திபன்: வாட்ச்மேன் இவன வெளிய அனுப்புங்க ..
    அரவிந்த்ஷா: சார் இது ஜூவாலஜி எக்ஸாம் வாட்ச்மேன்னு எல்லாம் ஆன்செர்  வராது  தப்பு தப்ப சொல்லாதீங்க சார் .

      பார்த்திபன்: (அவ்வவ் ..இவன் நாம திட்டுரதக்கூட ஆன்செரா எழுதுறானே .)
     (இவருதான் பிரகதீஷ் என்ன லுக்கு இன்னும் ஊருக்கு போன வேலைக்கி வர ஒரு வாரம் ஆகும் அப்புடி ஊர்ல என்ன பண்ணறார்னு யாருக்கும் தெரியல )


    பிரகதீஷ்:சார் அடிசனல் சீட் வேணும்
      பார்த்திபன்: இவன பார்த்து ..
    அரவிந்த்ஷா:ஒக்கே சார் பிரகதீஷ  பாத்து 
    எழுதிக்கிறேன் நன்றி சார்  
     பார்த்திபன்: டேய் இவன பார்த்து திருந்துன்னு சொல்ல  வந்தேன் .
    அரவிந்த்ஷா:(கடுப்பாயிடாறு சின்னதா பிட்ட போடுவோம் ) சார் உங்களமாதிரி professor  ஆகணுனா  என்ன சார் பண்ணனும்

     பார்த்திபன்: (இவன் எல்லாம் professor  ஆனா வெளங்கிடும் ) 


    அரவிந்த்ஷா:என்ன சார் சொன்னீங்க கேக்கல?

      பார்த்திபன்: தம்பி அதுக்கு நீ மேல படிக்கணும் .
    அரவிந்த்ஷா:சார் மே ல காலேஜ் லீவ் சார் நான் ஏனுன்ன ஜூன் ஜூலை ல போய் படிக்கிறேன் சார் 
      பார்த்திபன்: இரு நான்தான் உன்னோட பேப்பர திருத்தப்போறேன் பெயில் போட்டாதான் அடங்குவ ..  
       
    அரவிந்த்ஷா:இன்னைக்கு நமக்கு நாக்குல சனின்னு சொன்னது சரியாய் போச்சி ..


    பிரகதீஷ்: மச்சி இன்னைக்கி புதன் கிழமை டா .


    அரவிந்த்ஷா: நீ பிட்டு வெச்சி எழுதினத அவரால கண்டு புடிக்க முடியலன்னு என்ன கலாய்கிரியா  ஓடிடு .நான் அவர பழிவாங்காம விடமாட்டேன் ..


    பிரகதீஷ்:ஆமா இவரு நீலாம்பரி ஆண்ட்டி படையப்பா- வ பழி  வாங்க போறாரு ?


    அரவிந்த்ஷா:கடுப்பாகி பார்க்க பிரகதீஷ் எஸ்கேப் ...அந்த எக்ஸாம்ல பிரகதீஷ் கோல்ட் மெடல் வாங்கினது தனி கதை   அப்பறம் பாக்கலாம் ,,  
    சரி பிளாஷ் பேக்  போதும்  
    இன்று  (2012)
    அரவிந்த்ஷா: வணக்கம் நேயர்களே உங்கள் TC டிவி யின் சிறப்பு நிகழ்ச்சி எங்க ஊருக்கு எப்போ மழை வரும் வானிலை நிபுணர் பார்த்திபனுடன் அதிரடி பேட்டி

    (அப்போது பிரகதீஷ் அங்கிருக்கும் டிவிய  தூக்கி கொண்டு கிளம்ப )
    அரவிந்த்ஷா:ஹலோ சார் ஏன் டிவி ய தூக்கிட்டு போறீங்க ..
    நீங்க தானே சார் சொன்னீங்க உங்கள் TC டிவின்னு அத எங்க வீட்டுக்கு எடுத்துபோக போறேன் ..

    அரவிந்த்ஷா:இங்கயும் வந்து கடுப்பேத்தாதீங்க  சார். உங்கள போலீஸ்ல புடிச்சி குடுத்துடுவேன் ? 
    பிரகதீஷ்:அவ்வ கடுப்பாகுரானே   அரவிந்த்.
    அப்போது பார்த்திபன் வருகிறார் ..
    அரவிந்த்ஷா:வாங்க சார் வணக்கம் உக்காருங்க 
    இவர எங்கயோ பார்த்திருக்கோமே.. அவ்வவ் நம்ம காலேஜ் professor
    நம்மள பெயில் போட்டுட்டு இவரு வானிலை நிபுணர் ஆகிட்டாரா ..இன்னைக்கி விடக்கூடாது  ..

    அரவிந்த்ஷா:நீங்க வந்ததுல எங்களுக்கு ரொம்ப மகிழ்ச்சி .முதல் கேள்வி சார் நீங்க என்ன படிச்சிருக்கீங்க ?
      பார்த்திபன்: குமுதம் விகடன் சார் இல்லதம்பி  கார் ல வரும்போது அத படிச்சிட்டு வந்தேன் .


    அரவிந்த்ஷா:ஏன் சத்தியம் நீதி, நேர்மை எல்லாம்   படிக்கலையா ,டிகிரி என்ன படிச்சிங்கன்னு கேட்டேன் சார் ?
     பார்த்திபன்: சாரி தம்பி என்னோட டிகிரி உங்களுக்கு தரமுடியாது நீங்க கேக்காதீங்க ப்ளீஸ் .

    அரவிந்த்ஷா:சார் நீங்க ஒரே தமாசா பேசுறீங்க அடுத்தவாரம் சுட்டி டிவி ல இப்படி பேசிக்கலாம் இப்ப சொல்லுங்க சார் .
     பார்த்திபன்: (இவன் இன்னும் அடங்கலையே ) தம்பி நான் BE  EEE  முடிச்சிட்டு இப்போ MBA  படிச்சிட்டு இருக்கேன்
      
    அரவிந்த்ஷா:சார் கரண்டே  இல்லாத ஊருல எதுக்கு EEE  படிக்கிறீங்க ?
     பார்த்திபன்: தம்பி நான்  அதை அப்பவே  படிச்சி முடிச்சிட்டேன் .
    அரவிந்த்ஷா:அதனாலதான் இன்னும் கரண்ட்  வர்றதே  இல்லன்னு ஒத்துக்குறீங்க  ?
     
     பார்த்திபன்: (அவ்வவ் நம்மள மடக்குரானே ).
    அரவிந்த்ஷா:அது என்ன உங்க ஜிமெயில் status ல i  am  here  for  you  dear  ன்னு?
      பார்த்திபன்: தம்பி ஒரு பிட்டு போட்டுவைக்கலாமேன்னு..
    அரவிந்த்ஷா:என்ன பிட்டா ?
     பார்த்திபன்:இல்ல தம்பி நல்லா இருக்கேன்னு போட்ருக்கேன் . தம்பி அது என்னோட   பர்சனல்.
    அரவிந்த்ஷா:என்னது உங்க பர்ஸ காணாமா ?
      பார்த்திபன்: இவனுக்கு தமிழும் வராது இங்கிலீசும் வராது .!
    அரவிந்த்ஷா:சார் நீங்க  மழை வரும்ம்ன்னு சொன்ன அன்னைக்கு மழை வராது ,வராதுன்னு சொன்னா மழை கொட்டுது  !
     
     பார்த்திபன்: ( இவன் நம்ம வேலைக்கே ஆப்பு வெச்சிடுவான்  போல  )   தம்பி அது அமெரிக்கா டிவி நமக்கும் அவங்களுக்கும்  கிட்டத்தட்ட 12  மணி நேரம் வித்தியாசம் அதான் இவ்வளவு பிரச்சினை 

    அரவிந்த்ஷா: சன் டிவி. ஜெயா  டிவி எல்லாம் அமெரிக்கா சேனலா? 

     பார்த்திபன்:தம்பி இந்த டிவி எல்லாம் அமெரிக்கால  கூட தெரியும் 
     அரவிந்த்ஷா: சோ வாட் ?
      பார்த்திபன்: அது வந்து தம்பி .....
    அரவிந்த்ஷா:அப்போ உங்களுக்கு நாட்டு மக்கள் மேல அக்கறை இல்ல 
    போன வாரம் நில நடுக்கம் வந்துச்சே அத ஏன் முன்னாடியே சொல்லல ?
     பார்த்திபன்:நான் முன்னாடியே  சொல்லிட்டா நில நடுக்கம் வராம போய்டுமா ?அவ்வவ் ..
    அரவிந்த்ஷா:பாருங்கள் மக்களே  இப்படி ஒரு பொறுப்பிலாத அதிகாரி இருந்தால் நாடு எப்படி வல்லரசு ஆகும் ?
      பார்த்திபன்: வல்லரசா தம்பி அது நம்ம தலைவர் விஜயகாந்த் படம் அது வந்து பத்து வருஷம் ஆய்டுச்சி நீங்க இன்னும் பாக்கலையா அதுல  "அருப்பு கோட்டை அக்கா பொண்ணு "பாட்டு எனக்கு ரொம்ப புடிக்கும் ...
    அரவிந்த்ஷா:சார் இப்படி பொறுப்பே இல்லாம பதில் சொன்னா எப்படி சார் ?
    பார்த்திபன்: சரி தம்பி எனக்கு ஹன்சிகா  மொத்வாணினா ரொம்ப புடிக்கும் எனக்கு வேலாயுதம் படத்துல இருந்து "சில்ளக்ஸ் " பாட்டு போடுங்க ,முடிஞ்சா விஜய் மூஞ்சிய  கர்ர்பிக்ஸ்ல மறைச்சிட்டு போடுங்க ..

    அரவிந்த்ஷா:சார் அது வேற ப்ரோக்ராம் இதுல பாட்டு எல்லாம் போட  மாட்டோம் ப்ளீஸ் சார் ...ப்ரோக்ராம் போயிட்டு இருக்கு நீங்க பெங்களூர்ல  இருந்து வந்துருக்கீங்க ..


    பிரகதீஷ்:(என்ன பெங்களூரா  அப்போ நாம கேட்டுட வேண்டியதுதான் )
      பார்த்திபன்: யோவ் நீ பொறுப்பா கேளுயா ?
     
    பிரகதீஷ்:எச்சுச்மீ .
     
    அரவிந்த்ஷா:என்ன வேணும்?
    பிரகதீஷ்:நான் சார் கிட்ட ஒரு கேள்வி கேக்கணும் ?
      பார்த்திபன்: ம்ம் அவர கேக்க விடுங்க (பாக்க நல்ல பையனா  இருக்கான் ஒரு வேளை இன்னைக்கு ஏவின அக்னி ஏவுகணை மழை பெய்தால் என்ன ஆகும்ன்னு கேப்பானோ ? இப்படி ஒருத்தன பேட்டி எடுக்க போடாம இவன போய் போட்டுருக்கா ங்களே ..)


    பிரகதீஷ்: நீங்க உங்க profile  picture ல ஹிட்லர்  படம் போட்டுருந்தீங்க  இப்ப ஏன் யுவராஜ் க்கு மாறுனீங்க ?


     பார்த்திபன்: (இத எல்லாமா கேப்பானுங்க?) ..


    பிரகதீஷ்:யுவராஜும் ஒரு (6  *சிக்ஸ் ) hit லர் தானே ...?


     பார்த்திபன்:  (ச்ச என்னாமா யோசிக்கிறான் ..இவன எப்படியாச்சும் நம்ம அசிஸ்டன்டா வெச்சிக்கணும் ..) சூப்பர் தம்பி உங்களுக்கு என்ன வேணும் கேளுங்க .?


    பிரகதீஷ்: சார் உங்களுக்கு எப்போ கல்யாணம் ஏப்ரல் 1  ம்  தேதி உங்களுக்கு நிச்சயதார்த்தம் ன்னு சொல்லி  இருந்தீங்களே எப்போ கல்யாணம் ?


     பார்த்திபன்: தம்பி அதுசும்மா உங்கள பூல் பண்ண சொன்னது  chemistry  படிச்ச பொண்ண தேடிட்டு இருக்காங்க கிடைச்சதும் கல்யாணம் தான்.


     பிரகதீஷ்: உங்களுக்கு chemistry  ல அவ்வளோ ஆர்வமா ?


     பார்த்திபன்: கல்யாணத்துக்கு அப்புறம் யாரும் எங்களுக்குள்ள chemistry  இல்லன்னு சொல்லிடக்கூடாதுஇல்ல ..

    பிரகதீஷ்:(அவ்வவ்  மொக்க போடுறாரே நம்மகிட்டையே )சார் இன்னொரு கேள்வி சுவாமி நித்தியானந்தா  எப்படி இருக்கார் சார் ?
      பார்த்திபன்: அவ்வ்வ்வ் இவன் அரவிந்த்ஷாவ விட டெர்ரரா இருக்கானே அத போய் அவர் கிட்ட கேளு என்கிட்ட ஏன் கேக்குற? 
    பிரகதீஷ்::நீங்களும் பெங்களூரு அவரும் பெண்களூரு.....
      பார்த்திபன்: என்ன தத்துவம் அடேய் ..அடுத்து என்ன கேப்பன்னு தெரியும் அவங்களும் அங்க இருக்காங்களான்னு கேப்ப அடேய்  அடேய்  %$#%^&(@!%%^&^*

    அரவிந்த்ஷா::சார் பப்ளிக் பப்ளிக் நோ பேடு  வோர்ட்ஸ் ..
     பார்த்திபன்:  யோவ்  அக்குவாபினா எங்கயா  ?
    அரவிந்த்ஷா: சார் எனக்கு அக்கா இல்ல ஒரே தம்பி தான் ,
      பார்த்திபன்: டே ய் அந்த தண்ணிய எடுடா $#$#%^^&%$%
    அரவிந்த்ஷா: சாரி சார் இனி கலாய்க்கமாட்டேன் 
      பார்த்திபன்: ம்ம் சரி  .
    அரவிந்த்ஷா:சரி சார் எங்க ஊருக்கு எப்ப மழை வரும் சார் ?
      பார்த்திபன்: (இவன் ஏன்னா ஊருக்கு பஸ் எப்ப வரும்ன்னு கேக்குறமாதிரி கேக்குறான் )தம்பி இப்போ ஏப்ரல் மாசம் அக்டோபர் நவம்பர் வந்தா மழை வரும் தம்பி ஆமா நீங்க எந்த ஊரு ?
    அரவிந்த்ஷா:சார் நான் பெரம்பலூர் பக்கத்துல.. 
    பார்த்திபன்:யோவ் பக்கத்துல ஏன் கொஞ்சம் தள்ளியே உக்காந்துக்கோ ?
    அரவிந்த்ஷா:சார் ......
     
    பார்த்திபன்:சரி எந்த ஊரு ?
    அரவிந்த்ஷா:பெரம்பலூர் மாவட்டம் மாவிலங்கை கிராமம் சார் .
     
    பார்த்திபன்:அட தம்பி நம்ம ஊர்க்கார புள்ள ..!
    பிரகதீஷ்:சார் அது புள்ள இல்ல பையன் .
    பார்த்திபன்:அவ்வ்வ் தம்பி நீங்க எந்த ஊர்?
     பிரகதீஷ்:சார் நானும் அதே ஊருதான் 
     பார்த்திபன்:நல்லதா போச்சி ..
    பிரகதீஷ்:என்னது நல்ல பாம்பு போச்சா ஐயோ ...
     பார்த்திபன்:: தம்பிக்கு மறுபடியும் குறும்பு , தம்பி நான் கூட அந்த ஊருதான்.
    அரவிந்த்ஷா:(அந்த ஊருல பொறந்து  இப்படி இருக்கீங்களே பிட்டு கூட அடிக்க விடாம ...)
    பார்த்திபன்:தம்பி பச்சை என்கிற காத்து எங்க வீட்டு பக்கத்துல எடுத்த படம் எங்க வீட்ட  கூட காட்டுவாங்க.. 
    அரவிந்த்ஷா:(என்னமோ நமிதாவ காட்டுன மாதிரி சொல்லுறாரு) 
    பிரகதீஷ்:அதான் அந்த படம் ஊத்திகிச்சா....அவ்வ்வ்வ் 
    ஆடியன்ஸ் : தம்பிகளா  யாரோ bomb   வேச்சிட்டானுன்கலாம்   ஓடுங்க ..ஓடுங்க ..
    பார்த்திபன் அரவிந்த்ஷா வை பார்த்து முறைக்க  சார் நான்  ஏதும் பண்ணல..
    பார்த்திபன்:யோவ் நான்  அதை சொல்லல நாம வா போய் அதை கண்டு புடிச்சி மக்களை காப்பாத்தலாம் 
    அரவிந்த்ஷா:சார்..
     பார்த்திபன்:என்ன தம்பி  பயமா இருக்கா ?
    அரவிந்த்ஷா:இல்ல சார் ஒரு கண்டிசன் ..
    பார்த்திபன்:என்ன?
    அரவிந்த்ஷா:எங்க ஊருக்கு எப்போ மழை வரும் ...?
    **********************************************
    அரவிந்த்ஷா வின் ஊர் பாசத்தை கண்டு மழை வந்து விடுகிறது  bomb  மழையில் நனைந்து  விடுகிறது. மக்கள் எல்லாம் சேர்ந்து அரவிந்த்ஷா வாழ்க வாழ்க என்று மழையில் அவரை தூக்கி ஆடுகிறார்கள் ..


    பிரகதீஷ்:"அடப்பாவி பெயில் போட்டுடாருன்னு bomb  வச்சதே அவன்தான் அவன போய் ...எத்தன டோனி வந்தாலும் இந்திய மக்களை திருத்தவே முடியாது ...god  blees  you ..."
    அடுத்த பதிவில் நம்ம தல தோனிக்கு  விசில் போடுங்க TC சேவாக்- பிரகதீஷ் கலக்கல் பேட்டி ...
    குறிப்பு : இதை படிச்சிட்டு ஊர்ல கிரிக்கெட் விளையாடும்போது புல் டாஸ் பால்  போடறது ,ரன் அவுட் பண்றேன்னு பந்தால அடிக்கிறது ,FB  ல குரூப்பா   சேர்ந்து  தல டோனிய கலாய்க்கிறது  அப்புறம் என்னோட இந்த சைட்ட hack  பண்ண  ட்ரை பண்றது இதுகெல்லாம் நான் பயப்படமாட்டேன் .







    Read more...

    Subscribe