Wednesday, December 2, 2009

0

நெப்போலியன் அவர்களின் பிறந்தநாளும் பெரம்பலூர் தொகுதியும்

  • Wednesday, December 2, 2009


  •               தற்போது    ஆறு லட்சத்திற்கு மேல் மக்கள் தொகை ,    1977 முதல் 1996 வரை அ.தி .மு.க கோட்டையாக வே இருந்தது  பெரம்பலூர் தொகுதி இதற்க்கு காரணம் எம்.ஜி.ஆர் என்று சொல்லி தெரியவேண்டியது இல்லை . . அதன்பிறகு ஆ.ராசா அவர்கள் வந்ததும் மூன்றுமுறை வெற்றி பெற்று தி.மு.க வசம் ஆனது.இன்றும் கூட M.G.Rருக்கு ஓட்டு போடுகிறேன் என்று சொல்லும் கிராமங்களே உண்டு .




            தற்போது பொதுதொகுதி ஆனதால் அவர் நீலகிரி சென்றுவிட்டார் (அப்பா இப்பதான் கொஞ்சம் நிம்மதி ) 12 ஆண்டுகளில் ஆ.ராசா தொகுதிக்கு வழக்கம்போல் அரசு மருத்துவ கல்லூரி வரும் என்று சொல்லி இன்றுவரை அரியலூர் செல்லும் வழியில் ஒரு போர்டு மட்டும் மாட்டி சென்றுவிட்டார்  ,இனி நீலகிரிக்கு மருத்துவக்கலூரி வரும் என்று சொல்லுவார் விரைவில் ...அவர்செய்த சிறப்பான பணி  காவேரி குடிநீர் வழங்கியது  என்கிரமத்தில் கூட கிடைகிறது.


           எப்படியும் கல்லூரி  இங்கு அமைத்திருந்தாலும் பெரம்பலூர் மாவட்டத்தில் மருத்துவகல்வி சாமானியர்களுக்கு கிடைக்கப்போவதில்லை பெயருக்காவது எங்கள் மாவட்டத்தில் இருக்கிறது என்று சொல்லலாம்என்றால் அதுவும் இல்லை  என்றாகிவிட்டது .சரி எல்லோருக்கும் பயன்படும் அரசு கலை அறிவியல் கல்லூரி அதுவும் அதே கதைதான் . இதில் பொறியியல் கல்லூரி யும் அடக்கம் . எனக்கு தெரிந்து கலை கல்லூரி கூட இல்லாத கொடுமை இங்குதான் .


    ரயில் வசதியே இல்லாத ஒரே மாவட்டம் என்ற பெருமையும் பெரம்பலூர் மாவட்டதிற்க்கே. சேலம் -ஆத்தூர்-பெரம்பலூர் இடையே தொடங்க இன்னும் ஆய்வு மேற்கொண்டுவருகின்றனர் .

    பேருந்துகளில்இன்றும் சென்னையில் ஏறினால் திருச்சி டிக்கெட் எடுத்தால் தான் பயணம் செய்யமுடியும் பெரும்பாலும் .ஆனால் எல்லா தேர்தலிலும் மத்திய அமைச்சர் உருவாக்குவது  மட்டும் எங்களால் சாத்தியம் .இதெல்லாம் இரண்டாம் விருப்பம் தான் .


    முதன்மை தேவையான நிரந்தர  வருமானம்


          வறட்சி மிக்க மாவட்டங்களில் பெரம்பலூர் மாவட்டமும் ஒன்று .  விவசாயமும் வருடத்தில் ஆறு மாதம் நீடிப்பதே அதிகம் . வருடத்தில் பாதிநாட்கள் தான் மக்களுக்கு வேலை அப்போதுகூட தினமும் நூறு ருபாய் கிடைப்பதே கஷ்டம் .இங்கு தொழிற்சாலை என்றால் என்னவென்று கேட்கும் நிலைதான் . இங்கு பிறந்து வளர்ந்த ராசா அவர்களுக்கு நான்கு இது தெரிந்தும் செய்யாதது ஏனோ? M.R.F company அமையவிருக்கிறது என்று சொல்லி வழக்கம்போல் வெற்றி பெற்று டெல்லி சென்று அவரும் வழக்கமான அரசியல்வாதி யாக மாறி அவ்வபோது தொகுதி அலுவலகத்தில் மக்களிடம் இருந்து குறைகளை கேட்டு சென்றுவிட்டார் .
     
                  இன்று கூட ஐம்பது ரூபாய்க்கு வேலை கிடைக்காமல் இருக்கும் நிலைதான் , பெரும்பாலான கிராமங்களில் பசு தரும் பால் தான் இன்றுவரை  வருமானம் எனது குடும்பம் உட்பட.  தொழில் தொடங்க வங்கிகள் அவ்வளவு எளிதாக கடன் வழங்குவதில்லை அவ்வாறு கொடுத்தாலும் தொழில்சிறப்பாக நடத்தி வெற்றி பெறுவது எத்தனை பேர் ?
     ஏதேனும் பெரிய நிறுவனங்கள் அங்கு தொடங்கினால் கடுமையாக உழைக்கும் மக்கள் இங்கு உண்டு என்பதில் சந்தேகமே இல்லை .மேலும் தொழிற்சாலை கழிவு ஆற்றில் கலக்கிறது , சுற்றுபுறசூழல் பாதிக்கிறது என்ற பிரச்சினைகளும் வாய்ப்பு இல்லை .



                எங்கள் ஊரில் பிறக்காவிட்டாலும்  பக்கத்துக்கு மாவட்டத்தில் பிறந்து பல இன்னல்களுக்கிடையே வளர்ந்து  எங்கள் தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்று மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்று சிறப்பாக செயல்பட்டு வரும் மாண்புமிகு.நெப்போலியன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் எங்களுக்காக பணியாற்ற ஆண்டவன் உங்களுக்கு நீண்ட ஆயுள் வழங்கவேண்டும் என்று வேண்டி .



     இந்த இனிய நாளில்
    ஒருமுறை வென்றால் தொடர்ந்து வெற்றியை கொடுக்கும் எங்கள் மாவட்ட மக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் நீண்டநாள் தேவையான தொழிற்சாலைகள்  அமைய ஆவன செய்யுங்கள் என ஒவ்வொரு தேர்தலிலும் மத்திய  அமைச்சர்களை உருவாக்கி தன்னையும் வளரவைப்பீர்கள் என்று பலவருடங்களாக கட்சி பாகுபாடின்றி ஆவலுடன் எதிர்பார்க்கும் பெரம்பலூர் தொகுதி   .....

    மேலும் தகவல்களுக்கு  
      விரைவில் :கணிணியை புதிதாக வாங்கிய போது இருந்த வேகத்தில் இயங்கவைப்பது எப்படி ?
    Read more...

    Friday, November 27, 2009

    0

    வலைபூவிற்கு Background Picture சில நிமிடங்களில் அமைக்கும் எளிய வழி

  • Friday, November 27, 2009
  • நமது blog Template எவ்வித படங்களும் இல்லாமல் இருக்கும் அதில் இயற்கை காட்சிகளோ அல்லது நமக்கு பிடித்த தலைவர் , சினிமா நட்சத்திரங்களோ இணைத்தால் blog பார்பதற்கு மிக அழகாக இருக்கும் , படிக்கவருபவர்களையும் ஈர்க்கும் வகையில் இருக்கும் .

     
    உங்களுக்கு தேவையான Image ஐ photobucket
    அல்லது Google Image சென்றோ தேடி அதன்மேல் Click செய்து Save Copy Image தேர்வு செய்துகொள்ளுங்கள் .

    இந்த படத்தினை Background ல்  HTML ,Script போன்றவை தெரிந்திருக்கதேவை இல்லை .

    முதலில் உங்கள் blog ல்
    1.Click 'Layout' -->'Edit Html' for your blog
    அடுத்து
    Ctrl F clickசெய்து
    search box ல்
    body {         என type செய்து Enter கொடுத்ததும் அந்த இடத்தை காட்டும் கீழ்க்கண்டவாறு Code இருக்கும் 

    body {

      background:#123;
      margin:0;
      text-align:center;
      line-height: 1.5em;
      font: x-small Trebuchet MS, Verdana, Arial, Sans-serif;
      color:$mainTextColor;
      font-size/* */:/**/small;
      font-size: /**/small;
      }
    body {  உள்ளே
    background:url(PUT IMAGE URL HERE) repeat top right;

    என type செய்து  PUT IMAGE URL HERE என்ற இடத்தில் நீங்கள் Background ல் இடம்பெற செய்யும் படத்தின்  URL address கொடுத்துவிடுங்கள்  //background:#123; என்பதை நீக்கிவிடுங்கள் அல்லது Comment கொடுத்துவிடுங்கள் ..
    அவ்வளவுதான் . இறுதியில் கீழ்க்கண்டவாறு இருக்கும்
    body {
    background:url(http://img1.chakpak.com/se_images/63422_-1_564_none/rajnikanth-wallpaper.jpg) ;
    /* background-attachment: fixed; */
      //background:#123;
      margin:0;
      text-align:center;
      line-height: 1.5em;
      font: x-small Trebuchet MS, Verdana, Arial, Sans-serif;
      color:$mainTextColor;
      font-size/* */:/**/small;
      font-size: /**/small;
      }
    உங்கள் Blog Background Picture ரெடி ...


    Read more...

    Thursday, November 26, 2009

    0

    ஒபாமா வுக்கு ஓட்டு போடாத உங்கள் நண்பரை ஒபாமா ஆதரவாளர்கள் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்ய வைக்கும் கலக்கல் காமெடி வீடியோ பதிவு

  • Thursday, November 26, 2009
  • நண்பரை ஜாலி யாக கலாட்டா செய்யும் வீடியோ  அவருக்கு  அனுப்புவது பற்றிய பதிவு .

                தேர்தலில் ஒபாமா ஆதரவாளரான உங்கள் நண்பர் அவருக்கு ஓட்டு போடததால் ஒபாமா ஒரு ஓட்டில் தோல்வி அடைகிறார் அது யார் என்பதை தீவிரமாக விசாரித்தால் அது உங்கள் நண்பர் என்று தெரிகிறது .
                இதனால் ஒபாமா ஆதரவாளர்கள் அவரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்து வது  இதனை  CNBC செய்தி சேனல் ஒளிபரப்புகிறது இந்த வீடியோவை உங்கள் நண்பருக்கு அனுப்பி அவரை ஜாலியாக  கலாய்க்கலாம்..

                    இதில் யாருக்கு வீடியோ அனுப்புகிறோமோ அவரது பெயரை சொல்லி ஒபாமா ஆதரவாளர்கள்  பேட்டி கொடுப்பது banner ல் அவரது பெயர் , செய்தியின் போது அவர் பெயர் வீடியோ வில் தோன்றும் தொழில்நுட்பத்துடன்  இந்த வீடியோ அமைக்கப்பட்டுள்ளது ..  அவர் பார்க்கும் போது நல்ல காமெடி யாக இருக்கும் ...


    முதலில் இந்த இணையதளம் சென்று  http://www.cnnbcvideo.com/taf.shtml?hp=1கீழே உள்ள படத்தில் உள்ளவாறு From என்ற இடத்தில் உங்கள் பெயர் மற்றும் மெயில் ஐடி கொடுத்துவிடுங்கள் பிறகு

    SEND TO A FRIEND — OR LOTS OF FRIENDS:  என்ற இடத்தில் உங்கள் நண்பரின் அல்லது நீங்கள் ஜாலி யாக கலாட்டா  செய்யவிரும்புபவரின் பெயர் மற்றும் அவரது மெயில் ID கொடுத்துவிடுங்கள் ஒன்றிற்கு  மேற்ப்பட்டவருக்கும்   இதனை அனுப்பலாம் அனைவரின் பெயர் மற்றும் மெயில் ஐடி இதில் கொடுத்து






    கீழே உள்ள sendmy videos button அழுத்திவிடுங்கள் அவ்வளவுதான் அவர்களின் முகவரிக்கு சென்றுவிடும்  ஸ்ரீ.கிருஷ்ணா  sent you a video - Dear ராம் , Your friend ஸ்ரீ.கிருஷ்ணா sent you the following video from CNNBC: "Obama's Loss …

    என்று அவருக்கு மெயில் வரும் அதனை Click செய்தால்

    Obama's Loss Traced To Non-Voter என்று வீடியோ ஓடத்தொடங்கும் அதில் அவர் பெயர் சொல்லி போராட்டம் நடத்தும்படி இருக்கும் ..நல்ல பொழுதுபோக்கிற்காக உருவாக்கப்பட்டுள்ள வீடியோ .  He ll realy enjoy this video..


     
    Read more...

    Friday, November 20, 2009

    0

    திரு .சுந்தர் பிச்சை கூகிள் Vice President, Product Management அறிமுகப்படுத்திய google Os Demo வீடியோ காட்சி

  • Friday, November 20, 2009
  • திரு .சுந்தர் பிச்சை கூகிள்
    Vice President, Product Management அறிமுகப்படுத்திய google Os Demo வீடியோ காட்சி 

    1994  ம் ஆண்டு கூகிள் நிறுவனத்தில் சேர்ந்தார் . IIT ல் தனது B.Tech முடித்து வெள்ளி பதக்கம் வாங்கியவர் .. 




    Read more...
    0

    கூகிள் OS Demo வெளியிடப்பட்டது பற்றிய விரிவான தகவல்கள்



  • முந்தய பதிவில் கூறியது போல இந்த வாரம் எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்த Google OS  பற்றி 

                                   Sundar Pichai, Google's VP of product management  10 am PST க்கு Google OS Demo காண்பித்தார் மேலும் கீழ்க்கண்ட  தகவல்களை  வெளியிட்டார் .

                 முழுமையாக பயன்பாட்டிற்கு இன்னும் ஒரு வருடத்தில் கிடைத்துவிடும் . கடந்த வருடமே தயாரானாலும் இன்னும் அத்தனை மேம்படுத்திக்கொண்டிருக்கிறோம் .

    Chrome OS இல்  speed, simplicity, security ஆகியவை இதன் சிறப்பாக இருக்கும்.

    Demo வின் போது 7 நொடிகளில் Login Screen வருகிறது விபரங்களுக்கு வீடியோ பாருங்கள்  ..(நல்ல வேகம் தான் .... )



    Application Menu எப்படி இருக்கிறது பாருங்கள் 



     படத்தில் உள்ளவாறு Application Menu & Browsing மிக எளிமையாக உடனுக்குடன் மாற்றி பயன்படுத்தும் வகையில்.


     Google Os பார்க்க  அப்படியே Crome Browser போலவே தோற்றமளிக்கும்.

    குறைபாடுகள் :
                பிற Browser களுக்கு Support செய்யாமல் Google Crome Browser க்கு மட்டும் support செய்யும் வகையில்  இருக்கும் .

                 physical hard drives பயன்படுத்தாமல் SSDs . குறிப்பிட்ட Wi-Fi chipsets தேவைப்படும்.

    Data is Stored in the Cloud

                     நாம்  சேமிக்கும் தகவல்கள் நமது Home Directory ல்  இருந்து Network கிற்கு சென்றுவிடும் இதனால் நமது Home Directory வெறும் Cache   அதாவது   duplicate data போல செயல்படும்.

                       நாம் Google OS இருக்கும் System சென்று ஜிமெயில்    கணக்கின் மூலம் மட்டுமே தகவல்களை பயன்படுத்தமுடியும்  இதனால் Google server Down ஆகிவிட்டால் பயன்படுத்துவது கடினம்.

    நம் பயன்பாட்டிற்கு வந்த பின் தான் இதன் நிறை குறைகள் இன்னும் முழுமையாக தெரியும்.   

       முழுமையாக நாம் Googleலை சார்ந்து இருக்கும் வகையில் அதன் செயல்பாடுகள் இருக்கிறது ...  இதனால் கூகிள் மட்டும் போட்டியே இன்றி செயல்படும் நிலையை அடைந்துவிடும் என்று தெளிவாக தெரிகிறது ..





                                          
    Read more...

    Tuesday, November 17, 2009

    2

    இணைய உலகிற்கு கூகிள் கொடுக்கபோகும் அடுத்தடுத்த ஆச்சர்யங்கள் ,

  • Tuesday, November 17, 2009




  •               கூகிள் crome web browser தற்போது 40,000 மில்லியன் மக்களால் பயன்படுத்தபெற்று மிகுந்த   வரவேற்ப்பை அடுத்து ஏற்கனவே அறிவித்தபடி google Os அதனை சிறப்பாக உருவாக்குவதில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருக்கிறது.

                           இது  open source என்பது எல்லோரிடத்திலும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. Netbook எனப்படும் எதிர்காலத்தில் வரவேற்ப்பு பெறப்போகும் 
      விலை குறைந்த  light and inexpensive லேப்டாப்பை  குறிவைத்து வடிவமைத்து வருகிறது . 


                மிக வேகமாக சில நொடிகளில்  இணைய பக்கங்களை Display செய்வது தான் இதன் முக்கிய நோக்கம் . Windows போல் அல்லாமல் குறைந்த அளவு இடத்தையே எடுத்துகொள்ளும் வகையில் வடிவமைக்கபட்டுவருகிறது.  இன்னும் ஒரு வாரத்திற்குள் வெளியிடுவதாக Google அறிவித்துள்ளது.

             2010 ம் ஆண்டு பிற்பாதியில் முழுமையாக  நம் பயன்பாட்டிற்கு வந்துவிடும். linux os அடிப்படையாக கொண்டு இதனை உருவாக்குவதால் வைரஸ் பதிப்பு மிக மிக குறைவாக இருக்கும் என்பது மேலும் சிறப்பு .

          இதற்கென  Google இணையதள பயன்பாட்டிற்கென புதிய வசதிகளை அறிமுகப்படுத்த GO என்றProgramming Language அறிமுகப்படுத்தியுள்ளது .

    இணைய உலகையே மாற்றப்போகும் dubbed SPDY Protocol :

            நாம் செல்லவிரும்பும் வலை பக்கங்களை ie , Firefox லோ டைப்   செய்வதை Http  அதற்குரிய server க்கு சென்று Tcp மூலம் நமது கணினி browser க்கு அனுப்புகிறது , பல ஆண்டுகள ஆகியும் Http எந்த மாறுபடும் இல்லாமல் அப்படியே உள்ளது இதற்க்கு மாற்றாக dubby SPDF என்ற புதிய protocol ( speedy என்று உச்சரிக்கவும் ) Http க்கு மாற்றாக பயன்படுத்த உள்ளது , இதனால் 50% வேகமாக இணைய பக்கம் நமக்கு கிடைக்கும்.

               உதாரணமாக இணையதள பக்க Backgroung Image load ஆக அதிக நேரம் எடுத்துக்கொண்டால் முதலில் மற்ற தகவல்களை Browser க்கு அனுப்பிவிடும் . குறைந்த Bandwidth ல் அதிக தகவலை அளிக்கும் வகையில் வடிவமைக்கபட்டுள்ளது .

       dubbed SPDY 55% வேகமாக Http ஐ விட இயங்குகிறது என்று google lab உறுதி செய்துள்ளது. விபரங்களுக்கு கீழே உள்ள அட்டவணையை பார்க்கவும் .

                   தற்போது  எல்லா Browserகளும், இணையதளங்களும் Http அடிப்படையிலேயே இயங்குகின்றன ,இவை அனைத்தும் dubbed SPDY protocol க்கு மாறுவது எவ்வளவு சாத்தியம் என்று தெரியவில்லை .மைக்ரோசாப்ட்டும் Google தனக்கென்று ஒரு Protocol வைத்துக்கொள்ளப்போவதை நினைத்து கலக்கத்தில் உள்ளது .

                  முடிவில் நமக்கு இந்த இணையதள போட்டி வேகமாகவும் ,நமக்கேற்றவாறும் (speed ,cosistant) இணையதளத்தை மாற்றித்தரும்   என்பது நிச்சயம் .


    மேலும் தெரிந்துகொள்ள :

    dubbed SPDY protocol 

    Http protocol



     Average page load times for top 25 websites


    DSL 2 Mbps downlink, 375 kbps uplink
    Cable 4 Mbps downlink, 1 Mbps uplink


    Average ms
    Speedup
    Average ms
    Speedup
    HTTP
    3111.916


    2348.188


    SPDY basic multi-domain* connection / TCP

    2242.756

    27.93%

    1325.46

    43.55%

    SPDY basic single-domain* connection / TCP

    1695.72
    45.51%
    933.836
    60.23%
    SPDY single-domain + server push / TCP

    1671.28
    46.29%
    950.764
    59.51%
    SPDY single-domain + server hint / TCP

    1608.928
    48.30%
    856.356
    63.53%
    SPDY basic single-domain / SSL

    1899.744

    38.95%

    1099.444

    53.18

    SPDY single-domain + client prefetch / SSL

    1781.864

    42.74%

    1047.308

    55.40%


     -----விரைவில்

    1.  வைரஸ் Software யை பாதிக்கும் என்பது தெரியும்  Hardware ஐ பாதிக்குமா ?  
    2. உங்களுக்கு பிடித்தமானவரை பற்றி  செய்தி சேனல் ல் Banner வைத்து ஆர்ப்பாட்டம் செய்து பரபரப்பான  மக்கள் கருத்துக்கள்  சொல்லவைக்கும் நகைச்சுவை பதிவு
    Read more...

    Sunday, November 15, 2009

    0

    வைரஸ் தாக்காமல் இருக்க , கணிணியின் வேகத்தை அதிகப்படுத்த எளிய ஒரே வழி ..

  • Sunday, November 15, 2009



  • கணிணியில் Memory space , Ram போன்றவை அதிகமாக இருந்தாலும் வேகம் குறைய இரண்டே காரணங்கள் தான்

    . வைரஸ் பாதிப்பால் Software / Hardware பாதிக்கப்படுவது இவற்றை விட முக்கிய காரணம்

    .Temporary files, history, cookies, download history, form history ,index.dat போன்ற File கள் மற்றும் Recyclebin .

                      நாம் இன்டர்நெட் ல் வெவ்வேறு வலை பக்கங்களுக்கு  செல்லும்போது அவற்றில் இருந்து சில தகவல்களை file ஆக சேகரித்து  இவற்றை எல்லாம் ஒரு Folder ல் வைத்துக்கொள்ளும் , மீண்டும் அதே பக்கத்திற்கு செல்லும்போது இந்த File கள் மூலம் விரைவாக அந்த பக்கங்களை நமக்கு காட்டும் .

                 இதனுடன் நாம் செய்த Download போன்றவற்றை இவ்வாறு வைத்துக்கொள்ளும்  இன்னும் Multimedia Web sites செல்லும்போது அதிக அளவு தகவல்களை சேகரித்து வைத்துக்கொள்கின்றன .
    ஒரு வாரத்தில்  300Mb அளவிற்கு இந்த file வந்துவிடுகிறது என்று வைத்துக்கொண்டால் ஒரு மாதத்தில் 1GB நெருங்கிவிடும் . இதனால் கணிணி வேகம் குறைய ஆரம்பிக்கும்
    இந்த file களை Delete செய்ய Temporary Internet Files சென்று அழிக்கவேண்டும்.

                     சில வைரஸ் பரப்பும் தளங்கள் நாம் சென்றுவிடும்போது Temporary Files உடன் வைரஸ் வந்துவிடும் வாய்ப்பும் உண்டு .உதாரணமாக

    BloodhoundV2 Trojan Horse இந்த வைரஸ் temporary Internet Files வழியே வந்து கணினியை பாதிக்கும் அபாயகரமான வைரஸ் இந்த வைரஸ் பற்றி முழுமையாக அறிந்துகொள்ள Click Here



    Recyclebin: நமக்கு வேண்டாத தகவல்களை பெரும்பாலும் Recyclebin அனுப்பிவிடுவோம் . ஆனால் அந்த தகவல் Recycle bin ல் இருந்தாலும் memory space குறைவது  இல்லை . இதற்க்கு Shift + Delete கொடுத்தல் முற்றிலும் நீக்கி Memory space அதிகபடுத்தலாம் .

           மேற்கண்ட அனைத்தையும் தினமும் சென்று அவற்றை Delete செய்வது கணினியின் வேகத்தை அதிகரிக்க சிறந்தவழி .இதற்காக ஒவ்வொரு போல்டெர்,Recyclebin  சென்று Delete செய்வது நேரத்தை வீணாக்கும் .


                 சில வினாடிகளில் முடிக்க சிறந்தccleaner Software     3.16 Mb மட்டும் கொண்டது  இலவசமாக கிடைக்கிறது .இதனை Install    செய்து ஒரே Click ல் அனைத்து Temporary Files களை Delete செய்யலாம் . Password போன்ற முக்கிய தகவல்களை விட்டு விட்டு மற்றவற்றை மட்டும் அளிக்கும் வசதியும் உள்ளது கூடுதல் சிறப்பு.

                           வேகத்தை அதிகரிப்பதைவிட மேலே கூரியதுபோன்ற temp வைரஸ்  இடமிருந்து பாதுகாக்க இதுபோன்ற cleaner பயன்படுத்துவது அவசியம்  ...


    Download CCleaner

    விரைவில் 
    இணைய உலகிற்கு கூகிள் கொடுக்கபோகும் அடுத்தடுத்த ஆச்சர்யங்கள் !
     வைரஸ் Software யை பாதிக்கும் என்பது தெரியும்  Hardware ஐ பாதிக்குமா ?  
    உங்களுக்கு பிடித்தமானவரை பற்றி  செய்தி சேனல் ல் Banner வைத்து ஆர்ப்பாட்டம் செய்து பரபரப்பான  மக்கள் கருத்துக்கள்  சொல்லவைக்கும் நகைச்சுவை பதிவு -----.
               
             Hacking தகவல் இடம்பெறுகிறது இன்று mail வந்ததால் சகபதிவரின் கருத்துக்களை ஏற்று  Ban செய்துபிறகு நேரடியாக Chatting வந்து உடனடியாக தளத்தை பார்வையிட்டு  Ban செய்ததை நீக்கி தொடர்ந்து ஆதரவு கொடுத்து வரும்    Tamilish மற்றும் அவர்களது குழுவினருக்கும் & சக பதிவர்களுக்கும் ,படிக்கும் நண்பர்களுக்கும் நன்றி ... Tamilish கூறியதுபோல் opinion poll நீக்கிவிட்டேன் என்றும் தெரிவித்துகொள்கிறேன் ...


                 Hacking தகவல் எப்பொழுதும் இதில் இடம்பெறாது பிறர் நம்முடைய தகவல்களை திருடாமல் காத்துக்கொள்ளும் வழிமுறை தான் இதில் இடம்பெறும்  என்று மீண்டும் தெரிவித்துகொள்கிறேன் ....
    உங்கள் ஆதரவை தொடர்ந்து வேண்டி ......




    Read more...

    Saturday, November 14, 2009

    0

    நகைச்சுவை & மிரட்டல் படங்கள் தொகுப்பு

  • Saturday, November 14, 2009

  • 1)ரொம்ப படிச்சதால எழுத்து கொட்டுது





    2)தலைவர் ரஜினி பஞ்ச் இதுதானா..






    3)இப்படியே எல்லா மரத்தையும் வெட்டுனா  ஊட்டிலருந்து மேட்டுபாளையம் Direct டா பார்க்கலாம்






    4) Flower pot விழும்போது  பிடிக்கபோய்  கை ஒடஞ்சிடுச்சி.





    5)வேட்டைக்காரன் Trailor வந்ததுக்கே இப்படியா ?

     

     

    6)Macronis சாப்பிடலாமா?






    7)லாரி வாடகை அதிகமானதால?







    8) கொஞ்சம் ஓவரா வெட்டிட்டாரோ ?







    9)இங்கயும் ஆரம்பிச்சிடாங்களா?







    10) வாய இப்படியும் மூடலாமா?







     11) Iron பண்ண மறந்துட்டே !






    12) சைனஸ் கொஞ்சம்அதிகம் ஆய்டுச்சி 






    13) vacum Face Cleaner








    14)கந்த கந்த கந்த கந்த கந்தசாமி குரூப் ஸ்





    15) கையால இல்ல., கையில எழுதினது






    16) Self-Stiching







    17) மூன்று முகம்









    18) அலாவுதீன் இல்ல இல்ல ,..நூடுல்ஸ் பூதம்..




    Read more...

    Thursday, November 12, 2009

    3

    ஆபாச தகவல் கூகிள் தேடலில் வராமல் Lock செய்வது எப்படி ?

  • Thursday, November 12, 2009




  • நாம் வீட்டில் இலாத போது குழந்தைகள் ஆபாச தளங்கள் பார்க்காமல் இருக்க சிறந்த வசதி google வழங்குகிறது அது எப்படி என்று பார்க்கலாம் .

    முதலில் கூகிள் தளம் சென்று உங்கள் User name, password கொடுத்து Login செய்யுங்கள் .பிறகு படத்தில் உள்ளவாறு settings தேர்வு செய்து search settings click செய்யுங்கள். படத்தில் உள்ளவாறு Safe serrch Filtering சென்று உங்களுக்கு தேவையானவாறு நிறுவுங்கள் , விபரங்களுக்கு Click here





    அடுத்து படத்தில் உள்ளவாறு  Safe SearchFiltering கீழே உள்ள Lock safe search கிளிக் செய்துகொள்ளுங்கள்.  அடுத்த படத்தில் உள்ளவாறு Locking Process நடைபெறும்

    பிறகு 



    பிறகு Safe search Locked என்று  தோன்றும் சரியாக Lock ஆகா விட்டால் மீண்டும் ஒரு முறை சென்று Lock safe search கொடுங்கள் ,அவ்வளவுதான் இனி





     ஆபாசம் சம்மந்தமான எந்த தகவலும் உங்கள் குழந்தைகளுக்கு Google வழங்காது .இதன்  பிறகு google search பக்கத்தில் நீங்கள் Lock செய்தான் அடையாளமாக படத்தில் உள்ளவாறு வண்ண பந்துகள் அடையாளமாக தோன்றும் .



    நீங்கள் இதனை Unlock செய்ய மீண்டும் Search setting சென்று unlock என்று மாற்றிவிடுங்கள்.

    google எவ்வளவு பாதுகாப்பானது பாருங்கள் ......


    Read more...

    Sunday, November 8, 2009

    2

    ஊட்டியில் ஜாலி கலாட்டா

  • Sunday, November 8, 2009

  •       ஊட்டியில்   இரண்டு வருடங்களுக்கு முன் வேலை பார்த்தது அங்கு பெரும்பாலும் Jerkin,sweter அணியாமல் இருப்பவர்களை பார்ப்பது கடினம் .அதிலும் பள்ளி செல்லும் குழந்தைகள் red color sweter ல் பார்க்கும்போது அவ்வளவு Cute ஆக இருப்பார்கள் ,






    பழனிஇலிருந்து ஊட்டிக்கு மாறுதல் முதன்முறையாக ஊட்டி செல்லும் ஆவலில் முதல் நாளே கோவிலுக்கு சென்றேன் .மேட்டுப்பாளையம் தாண்டியதுமே மழை தொடங்கிவிட்டது.மழை சாரலுடன் வளைந்து செல்லும் பாதை மேலிருந்து வழியும் மழைநீர் என்று ரசித்துக்கொண்டே FingerPost சென்றடைந்தோம்.


    Fingerpost ல் எப்போதும் குளிர் அதிகம் ,அவ்வப்போது மழை வேறு , புதிய அனுபவம் ரூமில் Heater போட்டுக்கொண்டு பணி  முடிந்தவுடன் நன்றாக சாப்பாடு ,நல்ல தூக்கம் வீட்டில் கூட அவ்வளவு பசிக்கவில்லை.என்ன காரணமோ தெரியவில்லை .

    Fingerpost, Charing Crossஎன்று நான்கு நாட்கள் சுற்றிவிட்டு அப்படியே எனக்கு மஞ்சூர் அருகே உள்ள கெத்தை Power House ல் பணி வாங்கிக்கொண்டு  புறப்பட்டு சென்றேன் .





    கெத்தை Power House ல்  மிதமான குளிர் வெயில் எப்போதாவது வந்து போகும். இங்குதான் செந்தாழம் பூவில் பாடல் எடுத்ததாக நண்பர்கள் சொன்னார்கள் .

    காட்டு பகுதி என்பதால் அங்கு பணிபுரிபவர்கள் மின்வாரிய ஜீப்பில் தான் பணிக்கு வருவார்கள் , JE,SE என எல்லோரும் நன்றாக எங்களிடம் பழகுவார்கள் , நாங்கள் பக்கத்துக்கு ஊர் அல்லது எங்கள் ஊருக்கு சென்று திரும்பிவரும்போது ஒரு கிலோமீட்டர் நடந்து வரவேண்டும் அங்கு Mobile Tower கிடையாது  சிறுத்தை அவ்வப்போது அங்கு வந்து செல்லும்  .போட்டி  தனியாக ஊருக்குள் சென்று கடையில் எதாவது வாங்கிவரவேண்டும் என்று .ஒரே த்ரில் அனுபவம்தான்.



                இரவில் மேட்டுப்பாளையம் - குந்தா வரும்வழியில் யானைகள் வழிமறிக்கும் தினமும் இது நடக்கும் ,பிறகு சில நிமிடங்கள் கழித்து காட்டுக்குள் சென்றபிறகுதான் பேருந்து புறப்படும் .

                 அவ்வப்போது Glenmorgan  ,குந்தா  என சென்று சுற்றிபார்க்க சென்றுவிடுவோம் . எனக்கு வேலை நேரம் முடிந்தால் ரூம் ல் ஓய்வு எடுப்பது பிடிக்காது பல இடங்களை பார்க்கவேண்டும் , சினிமா என்று செல்லவிரும்புவேன்.  வேட்டையாடு விளையாடு , உயிர் ,ஜில்லுனு ஒரு காதல்,திமிரு  என்று எல்லா படங்களையும் பார்த்துவிடுவோம்
    வின்ச்ல் பயணம் அவ்வப்போது.




    ,பலாமரங்களில் குரங்குகள் வந்து சாப்பிடும் அவற்றை விரட்ட பெரும்  போராட்டம் நடத்தி மீதம் உள்ளவை மட்டுமே எங்களுக்கு.ஒவ்வொரு நாளும் எல்லாமே புது அனுபவம் . அங்குள்ள வீடுகளில் பெரும்பாலும் பழ மரங்கள் வைத்திருப்பார்கள் நாம் அவ்வழியே செல்லும் போது எந்த ஊர் என்று நலம் விசாரித்து  பலாப்பழம் போன்றவற்றை தருவார்கள் ஒவ்வொரு முறையும் . கல்லூரி மாணவர்கள் Industrial Visit வரும்போது யார் பணியில் இருப்பது என்ற போட்டி வரும் அப்போது செந்தில் தான் பெரும்பாலும் ஜெயிப்பான் .

                 நண்பன் வேலாயுதம் என்னுடன் சினிமாவிற்கு Company கொடுப்பவன் அவனது காதலியின் தம்பி அங்கு படித்துக்கொண்டிருப்பது அப்போதுதான் தெரிந்தது அவனையும் சினிமாவுக்கு அழைத்து சென்றுவிட்டு  FingerPost வந்தபோது அங்கு ஒருவன் குடி போதையில் அவனிடம் வம்பிழுக்க, வேலாயுதம் அவனை அங்கேயே அவனது வயிற்றில் ஓங்கி உதைக்க அவன் சுருண்டு விழுந்தான் காதலியின் தம்பி ஆயிற்றே சும்மாவா .அடி வாங்கியவனோ  உன்னை அடிக்க ஆள் கூட்டி வருகிறேன் என்று சொல்லிவிட்டு செல்ல அவனோ பயத்தில் தலைமை அலுவலகம் வந்து என்னிடம் புலம்ப ,நான் இதற்க்கு முன் தலைமை அலுவலக பணி செய்துவந்ததால் எல்லோரிடமும் நல்ல அறிமுகம் .

          ஊட்டி வந்துதான் பிற இடங்களில் பணி புரிய செல்லவேண்டும் அப்போது கொஞ்சம் free யாக இருக்கலாம் . அவனை  Glenmorgan  க்கு பணிக்கு அனுப்ப ஏற்பாடு செய்தேன் .

                    அவன் அங்கு சென்றதும் என்னுடன் சுற்ற  ஆள் இல்லை . ஒரு வாரம் கழித்து அங்கு சென்று அவனை பார்க்க சென்றால் அவன் என்னிடம் அழத்தொடங்கினான் விடுடா இதெல்லாம் ஒரு விசயமா , இனியாவது கொஞ்சம் பொறுமையாக நட என்று சொல்லி விட்டு அங்கு குளிர் அதிகம் எனவே அன்றே சுற்றிபார்த்துவிட்டு மறுநாள் கெத்தை Power ஹவுஸ்  வந்தேன் . .

                       அப்போது தான் ஆப்பு வந்தது திருச்சிக்கு மாறுதல் என்று . இரண்டு மாதங்களுக்கு முன் எல்லோரும் மாறுதல் கேட்டு விண்ணப்பிக்க நான் மட்டும் விண்ணப்பிக்கவில்லை , நண்பன் கமலதாசன் டேய் மச்சா இதெல்லாம் கண்துடைப்புடா  மாறுதல் வராதுடா ,அப்படி வந்தால் இன்னும் ஒரு வருடம் ஆகும் , கையெழுத்து மட்டும் போடு நான் Head office ல் கொடுத்துவிடுகிறேன் என்றது நினைவுக்கு வந்தது
    Read more...

    Friday, November 6, 2009

    2

    சச்சின் சதம் அடித்தால் இந்திய அணி தோற்றுவிடுமா?

  • Friday, November 6, 2009

  • நீண்ட நாட்களுக்கு பின் ஒரு விறுவிறுப்பான மேட்ச் ,  ஒவ்வொரு பந்துகள் வீசும் போதும் என்ன நடக்கும் என்று எல்லோருக்கும் ஒரு திரில் அனுபவம் அதுவும் இந்திய பேட்டிங் போது இன்னும் அதிகம் பாண்டிங் அன் கோ வின் 350 ரன்கள்  இந்திய அவ்வளவுதான் என்று தெளிவாக சொல்லியிருந்தன .

                  போட்டிக்கு முன் பாண்டிங் கிட்டத்தட்ட புதியவீரர்கள் இருப்பாதால் தோற்றுவிடுவோம் என்று சொல்லி இருந்தார் ,  தோணி வேறு இந்திய பேட் ஸ் மேன் களுக்கு ஒழுங்காக விளையாடுவதில்லை என்று மிரட்டல் விடுத்திருந்தார் . பலரும் சச்சின் மேல் வெறுப்புடன் சரி என்னதான் நடக்கிறது என்று பர்ர்க்கதொடங்கினால் வழக்கம் போல் சேவாக் அதிரடியை துவக்கி வழக்கம்போல்   30 + வந்ததும் நடையைகட்டினார் .கம்பீர் , யுவராஜ் ,தோணி வந்தவுடன் சென்றுவிட்டனர் சச்சின் மட்டும் தான் மீது அவ்வப்போது வரும் விமர்சனங்களுக்கு பேட்டிங் மூலம் சொல்லும்முடிவுடன் 50 ரன்கள் 47 பந்துகளில் 3/126, சச்சின் இருக்கும்வரை பார்க்கலாம் என்ற முடிவுடன் ரெய்னா வந்ததும் இன்னும் விறுவிறுப்பு
          
           சச்சின் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸ்  எப்படியும் சதம் போட்டுவிடுவார் என்ற நம்பிக்கைய நிறைவேற்றினார் , அசோகா டீ சில்வா எப்படியும் இன்று பழி வாங்கமாட்டார் என்ற நம்பிக்கை இருந்தது.  நண்பன் அப்போது சொன்னான் சச்சின் சதம் போட்டால் இந்திய ஜெயிக்காது மச்சி என்று. நீயுமா டா இத நம்புற இன்னிக்கு ஸ்கோர் அதிகம் இருந்தாலும் ஜெயிக்கும் மச்சி பாருடா என்று சொல்லிவிட்டு பார்த்தோம்.
              அப்படியே அதிரடியாக 150 ரன்களை அடித்தபோது எல்லோருக்கும் இந்தியா வெற்றியைவிட சச்சின் 200 அடித்தால் போதும் என்ற எண்ணம் , ரெய்னா சிக்ஸ் மற்றும் 4 அடித்து 50 ரன் அடித்து இந்தியா வெற்றி என கிட்டத்தட்ட  முடிவு செய்தார் பாண்டிங் முகம் தான் எதோ இன்னும் ரிலீஸ் செய்யாமல் வைத்திருக்கும் சன் picture படத்தை பார்த்தவர் போல இருந்தார் .

                     ரெய்னா அவுட் ஆனதும் இன்னும் 51 ரன்கள் 43 பந்துகளில் சச்சின் இருக்க பயமேன் இப்போது அதிரடி என்றாலே ஹர்பஜன்  பந்து, ரோட்டில் வருபவர் , கேமரா மேன் என எல்லோரையும் அடிக்கும் ஒரே மனிதர் இந்த மாட்சிலும் எல்லோராலும் அதிகம் எதிர்பார்க்கப்பட்டவர் இவர்தான் ஹர்பஜன் ரன் எடுக்காமலே சென்றுவிட்டார் அதை அடுத்து அனைவரையும் அதிர்ச்சி அடையவைதார் சச்சின் 175 ரன்களில் அவுட் . அதன்பிறகு  பர்வீன்குமார் ரன் அவுட் ஆகும் வரை ஒரே எரிச்சல் தான் எப்படி இருந்த இந்திய அணி இப்படி ஆய்டுச்சே என்று , இடையில் பிரவீன் குமார் அடித்த ஒரு சிக்ஸ் கடைசியாக இந்தியா வெற்றி பெரும் என்ற கடைசி ஆவலை தூண்டியது  . அதற்கும் முடிவுகட்டியது ஆஸ்திரேலியா .

    சச்சின் மட்டுமே முழு நம்பிக்கையுடன் ஆரம்பம் முதல் அவுட் ஆகும் வரை இருந்தார் இன்னும் அவரே  அந்த 3 ரன்கள் அடித்திருந்தால் நண்பன் கூறியதுபோல் நினைக்கும் பலருக்கும் முடிவுகட்டியிருப்பார் என்ன செய்ய? முடியவில்லை .பாண்டிங் 4 ரன் 3 ரன்கள் வித்தியாசத்தில் எப்படியோ ஜெயித்துவிடுகிறார்.

    சச்சின் மீது வரும் விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி  இவ்வாறு பலமுறை வைத்துவிட்டார் ஆனால் அணி வெற்றி என்பது 100% தனி நபர் மீது எப்போதும் இருக்கமுடியாது அப்படி இருந்தால்  அதனையும் அவர் செய்திருப்பார். இரண்டு போட்டிகளிலும் அவரை விமர்சித்தவர்கள் இப்போது அவரின் சிறப்பான ஆட்டத்திற்கு என்ன அவருக்கு கிரீடம் கொடுத்துவிடுவார்களா?  அவர் ஒரு சில போட்டிகளில்  விளையடமுடியாவிட்டாலும் அடுத்த போட்டிகளில்சிறப்பாக ஆடுகிறார் . இடையிடையே சச்சினுக்கு அவுட் கொடுத்து நான் அம்பயர் ஆக இருக்கிறேன் என்று புகழ் தேடிக்கொள்ளும் அசோகா டீ சில்வா போன்றவர்களையும் சமாளிக்கவேண்டும்.
              
                 இந்தியா முதல் மூன்று இடங்களில் இப்போது தள்ளடிக்கொண்டிருக்க  சச்சின் பெரும்பங்கு என்று எல்லோருக்கும் தெரியும் . சச்சின் இன்றுவரை ஒருநாள் போட்டியில் 45 சதம் அடித்துவிட்டார் அனைவரின் எதிர்பார்ப்பையும் பூர்த்திசெய்யும் வாய்ப்பு இருந்தால் இப்போது 435 சதம் அடித்திருப்பார்.

    சரி சச்சின் சதம் அடித்தும் இந்தியாதான்  தோற்றுவிட்டதே, இன்றைய போட்டியில் சச்சின் contribution இல்லாவிட்டால் எப்படியும் இந்தியா 200 ரன்கள்தான் எடுத்திருக்கும் அப்போது இன்னும் நிலைமை மிக மோசம் தான் . சச்சின் இவ்வாறு இந்தியா தோற்கும் போதெல்லாம் சதம் அடித்து போராடி இந்திய அணி தோல்வி என்று சொல்ல வைத்திருக்கிறார் .  மேன் ஆப் தி மேட்ச் வாங்கும் போதெல்லாம் வருத்தத்துடன் தான் வாங்கியிருக்கிறார் இந்த நிலை மற்ற அணி வீஈரர்களுக்கு அதிகம் வந்தது இல்லை .இன்றைய .போட்டியி கூட 135 ரன்கள் அடித்திருந்தால் அவருக்கு கிடைத்திருக்காது . மார்ஷ் வாங்கியிருப்பார் என்பதுதான் உண்மை.
          எப்படியோ இன்று தான் இன்னும் திறமையானவந்தான் என்பதை விமர்சகர்களுக்கும் உணர்த்திவிட்டார்.
    இன்னும் பத்து வருடங்கள் ஆனாலும் சச்சின் இந்தியா அணிக்கு தூணாக தான் இருப்பார், வேண்டம்  என்று அவர் உணர்ந்தால் அவரே விலகிவிடுவார் 20-20 போல , பிறகுதான் சச்சின் இன்னும் விளையாண்டிருக்கலாமே என்று அப்போதும் நினைக்கவைப்பார் என்பது நிச்சயம் . சச்சின் இலாத இந்தியா அணி எப்போது கனவில் கூட இருக்கமுடியாது . பிறருடன் ஒப்பிட்டு பார்க்க முடியாத ஒரே வீரர் சச்சின் மட்டும் தான் . தனிப்பட்ட வாழ்விலும் சிறந்தவர் .அவருடன் ,அவருக்கு பின் வந்த பல வீரர்கள் அனைத்து அணிகளிலும் இன்று இல்லை.

         என்னதான் புதிது புதிதாக அதிரடி வீரர்கள் வந்தாலும் அனுபவம் தான் இறுதிவரை வரை சிக்கலான நேரத்தில் வெற்றியை கொடுக்கும் அதுதான் சச்சின் என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த உண்மை. வெற்றி,போராடி தோல்வி அடைந்த அணி என்ற பெயரை தான் சச்சின் நமக்கு கொடுத்துள்ளார்  .

       April 24, 1973  பிறந்த அவரின் பிறந்த நாளை கிரிக்கெட் தினமாக கொண்டாடும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பது மட்டும் நிச்சயம் .


    Read more...

    Tuesday, November 3, 2009

    0

    கம்ப்யூட்டர் Expert பழக்கவழக்கங்கள் எப்படி இருக்கும்?

  • Tuesday, November 3, 2009
  • computer Expert எப்படி தூங்குவர் என்று தெரியுமா?






    அவரது Cap எப்படி இருக்கும் ?

    அவரது T. Shirt  color



    Traffic man வேலை செய்யும்போது




    இரட்டை குழந்தை பிறக்க


    Redhat


    அவரின் பூனை Mouse ஐ பிடிக்க


    Read more...

    Subscribe