Showing posts with label blog. Show all posts
Showing posts with label blog. Show all posts

Saturday, August 28, 2010

1

சிறந்த பதிவராகவும் தனது வலைப்பக்கம் தான் சிறந்தது என்று காட்டிக்கொள்ள என்ன செய்யலாம் ?

  • Saturday, August 28, 2010
  • சிறந்த பதிவராகவும்  தனது வலைப்பக்கம் தான் சிறந்தது என்று காட்டிக்கொள்ள என்ன செய்யலாம் ?


    சன் செய்திகள் சிறப்பு பார்வை யில் சண்முகம் அவர்கள் போல் படிக்கவும்
                         நாம் எவ்வளவுதான் எழுதினாலும் பிரபலமாக வில்லை என்று நமக்கு தோன்றும் . சில  நேரங்களில் நமக்கு Hits கிடைக்காமல் போவிடும் இதற்க்கு என்னவழி , நாம் எப்படி எழுதினாலும் நம்மை பலரும் வந்து பாராட்டவேண்டும் என்ற மன வியாதி வந்துவிடும் . இதற்க்குஎன்ன வழி நாம் என்ன செய்ய வேண்டும் இப்போது பார்க்கலாம் .

                  முதலில் காசு கொடுத்து Cable அண்ணா போன்ற பிரபல தளத்தில் முன்பக்கத்தில் கொடுக்கலாம் இதற்க்கு நல்ல பலன் உண்டு . மறுபடியும் திரும்பி வருவார்களா என்பது உறுதியாக கூறமுடியாது .

    எவ்வளவு நாள் தான் காசு கொடுத்து தளத்திற்கு விளம்பரம் தரமுடியும் அடுத்து Top  10 , Super 10 போன்று மாதம் தோறும் வெளியிட்டு கொஞ்சம் Hits வாங்கலாம் முடிந்தால் தினந்தோறும் அதையே செய்யலாம் . சிறந்தவழி.

                    சிறப்பாக எழுதி தமிலிஷ் , தமிழ்மணம் போன்றவற்றில் இணைப்பு கொடுத்தவர்களுக்கு நிகராக விளம்பர படுத்திய தனது தளத்தை Alexa Rank படி வெளியிட்டிருக்கிறேன் விடுபட்டிருந்தால் சொல்லுங்கள் என்று காட்டிக்கொள்ளலாம்.

             போட்டி போன்றவற்றில் நடத்துபவர் அவரது குடும்பத்தினர் கூட கலந்துகொள்ள கூடாது என்பது போன்றவற்றை மீறி விளம்பரத்தில் கிடைத்த Hits மூலமும் , Top 10 போன்ற முடிவுகள் வெளியிடும் அன்று கிடைக்கும்  Hits   மூலம் கிடைக்கும் Hits ஸை தனது தொழில் நுட்ப பதிவுக்கு கிடைத்ததுபோல் காட்டிக்கொள்ளலாம் . Alexa Rank எப்படியெல்லாம் அதிகரிக்கலாம் என்று அவர்களுக்கு தெரியுமா என்ன?

         யாராவது புதியவர்கள் விருது வாங்கியிருந்தால் அதிகம் பேர் படிக்க செல்கிறார் என்று தெரிந்தால் அவரது கடந்த மாத பதிவுக்கு Comment ல் போய்   " இப்படி ஒரு மோசமான பதிவு   இதுவரை பார்த்ததில்லை என்று முடிந்தால் உலக பதிவுகளில் முதல் முறையாக என்று சேர்த்துக்கொள்ளலாம் .

             தனது   Top 10 வரிசைக்கு ஆபத்து வரும் என்று தெரிந்தால் நீங்கள் உங்கள் வலைபக்கத்தில் பிறவற்றையும் எழுதுகிறீர்கள்  ,  என்றோ HAcking தளம் என்றோ சொல்லிவிடலாம் .  இதற்க்கு Hacking க்கு என்ன Spelling என்று கூட தெரிந்திருக்க வேண்டியது இல்லை .

                      அடுத்து பெண்களை கேவலபடுத்தும் வகையில் எழுதலாம் உதாரணமாக நண்பனின் மனைவியைஎப்படி  ... என்று எழுதுங்கள் என்று  ஆலோசனை கொடுக்கலாம் .  நம் நண்பர் படித்தால் என்ன நினைப்பார் என்பது பற்றி கூட என்ன தேவை இல்லை .

                           பிரபல பதிவர் அவரின் பதிவை பாராட்டி இருந்தால் அவரை கூட உங்களுக்கு என்ன ஆயிற்றுஇதைபோய் பாராட்டி இருக்கிறீர்களே  என்று கேட்கலாம்  .அவர் முப்பது நாட்களுக்கு முன் போட்ட Comment அதுவும் பிறரது பதிவில் வந்து கேட்கவாபோகிறார்.

               அடுத்தவர் தளத்தில் எழுதினால் போதுமா நமது தளத்தில் எழுத வேண்டாமா  சரி நம் வீட்டுக்காரியை நினைத்து வேலைக்காரியை கேவலமாக போடலாம் அப்போதுதான் சோறு கிடைக்கும் , வேலைக்காரி என்றாலே பிடிக்காதவர் போல் மனைவியிடம் காட்டிக்கொள்ளலாம் .  உதாரணமாக அவள் அடுத்த வீட்டு சங்கதியை சொல்லுவாள் என்று போட்டாலே போதும் .

       அப்படி சொல்பவரை ஏன் வேலைக்கு வைக்கிறாய் என்று யார் நம்மை கேட்ப்பார்கள்  என்று நினைக்க  வேண்டியதில்லை .  நமக்கு தான் நாம் உண்டு நம் வேலை உண்டு இருக்கிறோம் அவர்கள்தான் இதக்காகவே சம்பளம் வாங்குகிறார் வேலையே செய்வதில்லையே .


                 உங்களுக்கு கொடுத்த Link ஐ  நீக்கி விட்டேன் என்று நாமே போய் பினூட்டம் இடலாம் காரணம்  கூட ஒன்றும்பெரிதாக  தேவை இல்லை .அப்போதுதான்  ஐயோ இனி நம் பதிவை யார் படிப்பார்கள் என்று அவரை  கெஞ்சும் நிலை க்கு கொண்டுவரலாம் .அப்போது ராஜபக்சே போல மனதில் சிரிதுக்கொள்ளலாம் .

                    முடிந்தால் World Tamil techblog organization என்று ஆரம்பித்து Copy rights உரிமை வாங்கி  தன்னிடம் அனுமதிபெற்றுத்தான் வலைப்பூ தொடங்க வேண்டும் என்று சொல்லலாம் .

    ஏனென்றால் நம்மை விட யார் புத்திசாலி நமக்கு தான்குறை சொல்லும் விமர்சனங்களை தாங்கிக்கொள்ள முடியாதே .தான் இல்லாவிட்டால் பதிவுலகமே மொடங்கிடும் என்று நினைத்துக்கொள்ளலாம் .

    எனக்கு இதனை Followers , Subscribbers ,Hits எட்டே வருடங்களில் என்று வலைபக்கத்தின் ஆரம்பத்திலேயே போட்டுக்கொள்ளலாம் , பார்ப்பவர்கள் அடுத்து  உள்ள  Visit Counter , Follower ல் இந்த விபரம் இருக்கிறதே இங்கு எதற்கு என்று கேட்கபோகிரார்களா என்ன?

    முக்கியமாக இலவசம் ,சுதந்திரம் மென்பொருள் என்று ஒரே அர்த்தத்தில் பெயர் வைத்து மக்களை குழப்பலாம் .
     ஏன் இப்படி செய்தாய் என்று நண்பர்கள் கேட்டால் நான் தான் அவனுக்கு ப்லோக் என்றால் என்ன ? எப்படி பதிவிடுவது சாப்பாடு கூட போட்டேன் நான் விமர்சிப்பதில் என்ன தவறுஅப்போதுதான் மேலும் நன்றாக எழுதுவான்  என்று  சொல்லி சமாளிக்கலாம்.

    ஐடி கொடுத்து பின்னூட்ட்டம் இட்டாலும் நாம் பார்த்து படித்துவிட்டுதான் அதனை வலைப்பூவில் காட்டவேண்டும், யாராவது நம்மைபோல இருப்பார்களோ என்ற நல்ல எண்ணம் தான் வேறு என்ன? .

    இதில்  உங்களுக்கு பிடித்த கருத்து எது என்று இடது பக்கத்தில் இருக்கும் Opinion Poll option ல் பதிவுசெய்து பிரபல பதிவராக துடிக்கும் நண்பருக்கு உதவுங்களேன். இனி அவர் வாழ்க்கை உங்கள் கையில் .......
     குறிப்பு : நானும் எனது நண்பன் எழுமலையும்  ப்லோக் தொடங்கியபோது  அவர் போட்டிருந்த புதிய முன்னணி  ப்லோக் என்பதை சண்டைபோட்டு சில நாட்களில் நீக்கினேன் என்பதை உங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன் . என்னை பொறுத்தவரை இந்த ப்லோக்   இன்னும் சில வருடங்கள் கழித்து பார்த்தாலும் ஏன்டா இப்படி எழுதினோம் என்று தோன கூடாது என்பதுதான் . கடந்த வாரம் கூட சக புதிய பதிவர் வருத்தத்துடன் அவருக்கு யாரோ இட்ட Comment ல் சொந்தமாக எழுதுங்கள் என்று அவரது பதிவை பற்றி  சொல்லியிருந்தாதாக வருத்தப்பட்டார் .

              இப்படி ஒரு சிலரது    செயலால் புதியவர்கள் வளர்வது எவ்வளவு கஷ்டம் பாருங்கள் .  நங்கள் உங்களுக்கு போட்டி அல்ல , நாங்கள் உங்களை வழிகாட்டியாகத்தான்  நினைக்கிறோம் என்பதை இனியாவது புரிந்துகொள்ளுங்கள்.
    Read more...
    1

    Hacking,நண்பனின் மனைவி , வேலைக்காரி , சக பதிவர் பற்றி பிரபல பதிவர் என்ன நினைக்கிறார் ?

  •                  Hacking என்பது எதோ பிறரின் தகவல்களை திருடுவதோ அல்லது மற்றிவிடுவதோ மட்டும் அல்ல . மிகபெரிய நிறுவனங்களின் உள்ள மதிப்பிட முடியாத தகவல்கள் திருடு போகாமல் தடுப்பதற்கு அவர்களால் மட்டுமே முடியும் .
                  எனவே Hacking என்பது எதோ திருடுவது Hackers என்பவர்கள் திருடுபவர்கள் என்று நினைப்பது மிகுந்த தவறாகும் .  Security என்பது இணையதளத்தை முழுமையாக்கும் ஒன்று  Security என்பது இல்லாவிட்டால் இணையதள பயன்பாடு என்றோ அழிந்து போயிருக்கும் . 

               தொழில்நுட்ப படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு கண்டிப்பாக இத்தகைய பாடங்கள் தற்போது பாடத்திட்டத்தில் சேர்த்து 5 வருடங்கள் ஆகிவிட்டது ,Cryptography , Internet Security & Virus Programming போன்ற பாடங்கள் படிக்காமல் தகவல் தொழில் நுட்ப பட்டபடிப்பு இப்போது இல்லை . இங்கு சென்று SRM University பாடத்திட்டத்தை பாருங்கள் .

             SRM University Mtech Syllabus Details View to Click Here . அல்லது உங்கள் நண்பர்களிடம் இவற்றை பற்றி கேளுங்கள் . மேற்கண்ட பாடங்கள் எல்லாம் எவ்வாறு தகவல்கள் திருடப்படுகின்றன என்று சொல்லி அவற்றில் இருந்து எப்படி பாதுகாக்கலாம் என்று தான் சொல்லபட்டிருக்கும் . தகவல்கள் திருடுபவர்கள் இதற்க்கு Brute force attack , Hybrid attack,Dictionary attack,  மற்றும் Virus creation போன்ற techniques பயன்படுத்துகின்றனர் .
    அதிர்ச்சி தரும் Hacking எப்படியெல்லாம் நடந்திருக்கிறது என்பதை இங்கு படித்து பாருங்கள் .

                   இதில் இந்தியர்கள் யாரும் இல்லை என்று சந்தோசம்தான் நமக்கு ,  ஆனால் உண்மையில் அந்த அளவிற்கு யாரும் இன்னும் வளரவில்லை என்பதுதான் உண்மை .
                 தற்போது  Hackers Council அறிவித்துள்ள சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்ப்பட்ட பரிசுதொகை கொண்ட போட்டியை அறிவித்துள்ளது . விபரங்களுக்கு http://www.hackerscouncil.org
    என்ற  இணையதள முகவரியை பாருங்கள் .


         உலகிலேயே அதிக சம்பளம் பெறுவோரின் பட்டியலில் இந்த HACKING Technonogy பிரிவினர் என்பது கூடுதல் தகவல் .இதற்காக பல்வேறு நகரங்களில் தனி Course கள் நடைபெறுகின்றன . 
           இப்போது எதோ எனக்கு தெரிந்த ,புரிந்த சிறிய ஒரு சில Hacking Techniques பற்றி எழுத தொடங்கியிருக்கிறேன் .அதற்கு நீங்கள் தரும் பேராதரவால் இன்னும் கூடுத நேரம் ஒதுக்கி மிக பயனுள்ள வகையில் எழுத முயற்சிக்கிறேன் .

    இன்று எனது வலை பக்கத்தில் நான் கடந்த மாடம் எழுதிய

    நண்பர்களது username ,password போன்றவற்றை ஹாக்கிங் செய்யலாம் வாங்க

     நமது Computer தவிர நமது நண்பர்களின் Computer அடுத்து அதிகமாக பயன்படுத்துவோம் அதனால் அப்போது அவர்களின் password கண்டுபிடிக்கலாம் என்று அப்படி தலைப்பு போட்டிருந்தேன் . இந்த பதிவின் முடிவில் இதனை தடுக்கும் முறை பற்றி சொல்லியிருந்தேன் .

              இதில் நான் கண்ட பின்னூட்டத்தில்நண்பர் ஒருவர் " இதைவிட கேவலமான பதிவை பார்த்ததில்லை". என்று போட்டிருந்தார்  .
                   சரி இது அவரது விருப்பம் Comment Box இருப்பது படிக்கும் நண்பர்களின் விமர்சனத்திற்கு , பாராட்டை மட்டுமல்ல குறைகளையும் சமமாக கருதுபவன் நான். ஆணாதிக்கம் என்று சகோதரிகள் நினைக்கவேண்டாம் அப்படி ஏற்றுக்கொள்பவன் தான் உண்மையான ஆண் . இதுவல்ல விஷயம் அடுத்து என்ன எழுதவேண்டும் என்று   அவர் எழுதியிருந்தார் 
    //அடுத்து என்ன நண்பர்களின் மனைவியை ....ape செய்வது எப்படியா?
     நண்பனின் மனைவியை பற்றி அவரின் அழகான கருத்து பாருங்கள்


    பின் உங்களுக்கு என்னால் லின்க் தர முடியாது. கொடுத்ததை அழித்துவிட்டேன்.இத்தோடு முடிக்கவில்லை .
    இவருக்கு முன்பே  சகோதரி ஒருவர் Comment ல் சொல்லியிருந்தார் .
    தெரியாத தகவல் தம்பி! ஆனால், தெளிவான தகவல்! IE ல் எப்படி?//   என்று கேட்டிருந்தார் .

    அதற்கும் சேர்த்து அடுத்த Comment ல்  இவர்
    சுமஜ்லா இதைப்போய் பாராட்டி இருக்கீங்களே. என்ன ஆச்சு உங்களுக்கு.  சகோதரி கதை, கவிதை  என பல துறைகளில் கலக்குபவர்  என்பது நான் சொல்லி தெரிவது  இல்லை .

            சரி நான் எழுதியது தான் அவருக்கு பிடிக்கவில்லை சகோதரியை என்ன ஆச்சு உங்களுக்கு என்று கேட்ட போதுதான் அவரது மன நிலையை தெளிவாக அறிந்து கொண்டேன் . அந்த பதிவிற்கு 22 vote தமிலிஷ் , 11 vote Tamil 10 ம் ஐந்து பின்னூட்டமும் 30 நாட்களுக்கு முன்பே வாங்கிவிட்டது என்பது கூடுதல் தகவல் . இதன்மூலம் வாக்களித்த வர்களின் உணர்வுகளையும் மதிக்க தவறிவிட்டார்  .

              இதுவரை எனக்கு அவருக்கும் எவ்வித பிரச்சினைகளும் இல்லை . ஒருமுறை தகவல் தொழில் நுட்ப வலைபூ இருந்தால் எனக்கு தெரியப்படுத்துங்கள் என்ற அவரது பதிவிற்கு Comment மூலம் தெரியபடுத்தினேன் அதற்கு அவர் நீங்கள் பிற செய்திகளை எழுதுகிறீர்கள் அதனால் உங்களது தளத்தை சேர்க்க முடியாது என்று சொல்லிவிட்டார் . இன்றுவரை நான் எனக்கு தெரிந்த எல்லாவற்றையும் கலந்துதான் எழுதுகிறேன் அவரது

    உலக டாப் டென் தமிழ் InfoTech பிளாக்ஸ் - நவம்பர் 2009

                    லிஸ்டில் வரும் எண்ணம் எனக்கு என்றைக்கும் இல்லை .     சக பதிவர்களை மதிக்க தெரியாத , அவர்களின் குறைகளை கூட நாசூக்காக சொல்லத்தெரியாத இவர் கொடுக்கும் லிங்க் தேவை இல்லை .அப்படி நீங்கள் லிங்க் கொடுத்தாலும் விஷயம் இருந்தால் தான் மீண்டும் படிக்க நண்பர்கள் வருவார்கள் என்பதை நன்கு தெரிந்த தமிழில் தகவல்தொழில்நுட்பம்  வளர உங்களை விட அதிக ஆவல் கொண்டவன்.

    இன்று அவரது வலைபக்கத்தில் எனக்காக சில மாறுதல்கள் செய்திருக்கிறார். இதோ 

    ஹேக்கிங் சைட்டுகளுக்கு எப்போதுமே என்னால் லின்க் கொடுக்க முடியாது. என்னை அறியாமல் ஹேக்கிங் சைட்டுகளுக்கு லின்க் கொடுத்து இருந்தால் தெரியப்படுத்தவும்.

    முதலில் ஹாக்கிங் என்றால் என்ன ? ஏன் அதை பற்றி தெரிந்துகொண்டு  மேலே நீங்கள் படித்தவற்றை நினைவு படுத்தி அடுத்த பதிவை தொடங்குங்கள் .அப்படி என்ன எனது வலைபக்கத்தில் நாட்டுக்கு கேடு விளைவிக்கும் தகவல்களை கண்டுவிட்டீர்கள் என்று  தெரியப்படுத்துங்கள் பார்ப்போம் .
              உங்களை போல் ஆணவத்தில் வலைப்பூவை விமர்சித்து நானும் சாக்கடையில் புரள விரும்பவில்லை .  சக பதிவர் (நண்பர்)களை தான் மதிப்பதில்லை நாங்கள் நண்பன் தவறு செய்தால் மன்னித்துவிடுவோம் ஆனால் நண்பனின் மனைவியை சகோதரியாக மதித்திருந்தால் இப்படி ஒரு கேள்வி  கேட்டிருக்க மாட்டீர்கள் , எனக்கு தெரிந்ததை தான் நான் எழுதுவேன். நண்பனின் மனைவிபற்றி நீங்களே எழுதுங்கள் நிறைய உங்களைபோன்ற எண்ணம் கொண்ட வாசகர்களும்  கிடைப்பார்கள் .   நானே படித்து முதல் Comment போடுகிறேன் முடிந்தால்.

                      இப்படி எல்லாம் எழுதி மலிவான விளம்பரம் தேடாதீர்கள் . பதிவுலகில் நீங்கள் பெரிய ஆள் , நான் புதியவன் என்னால் முடிந்த வரை தான் எழுதமுடியும் கல்லூரி படிப்பிற்கு நடுவே , உங்களை போல் அதிக Hits வரும் வலைபக்கத்தில் என்னால் விளம்பரம் கொடுத்து வலைபக்கத்தை பிரபலமாக்க முடியாது என்பதை மட்டும் ஒப்புக்கொள்கிறேன்

    உங்களிடம் சில கேள்வி:
    • நண்பனின் மனைவி  என்றால் உங்களுக்கு அவ்வளவு கேவலமா ?

    • நண்பனின் என்று போடாமல் உங்களின் பெயரை போட்டு தலைப்பு போட்டிருந்தால் நீங்கள் இப்படி பின்னூட்டம் இட்டிருக்கமட்டீர்கள் .
    •  
    • அதெப்படி நீங்கள் பட்டியல் இடும் Top 10 பட்டியலில்  உங்களின் வலைபூவையும் சேர்த்துக்கொள்ள முடிகிறது .  உஜாலா நடத்தும் போட்டியில் அதன் பணியாளர்கள் குடும்பத்தினர் கலந்துகொள்ள முடியாது ,அதனால் அவர்கள் திறமை இல்லாதவர்களா?
    •  
    • Hacking பதிவு  எனது வலைபக்கத்தில் இருந்ப்பதால் Hacking என்பது தொழில்நுட்பம் பிரிவில் இருந்து நீங்கிவிடுமா?
    •  
    • வேலைக்காரியை கேவலமாக உங்கள் வலைபக்கத்தில் விமர்சித்திருப்பது நீங்கள் பெண்களின் மீது எவ்வளவு மதிப்பு வைத்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது.?
    •  
    • அவர்கள் உங்கள் வீட்டில்  சும்மா வேலை செய்யவில்லையே . நீங்கள் அடுத்த வீட்டை பற்றி தெரிந்து கொள்ளும்போது தானே அன்பாக பேசுகிறீர்கள்  ,  அவ்வாறு பிடிக்கவில்லை என்றால் ஏன் வைத்துக்கொள்கிறீர்கள் ?

    • அதுஎன்ன சுதந்திர இலவச மென்பொருள் .  சுதந்திரம் , இலவசம் இரண்டும் வெவ்வேறா ?  Click here to View

    • உங்களுக்கு யார் Top 10 பட்டியல் இடும் உரிமையை தந்தது ,நீங்கள் யார் அதை நிர்ணயிக்க எங்களுக்கு தெரியும் நாங்கள் யார் என்று ?
    •  
    • இதெல்லாம் Hits கிடைக்க வழி என்று எங்களுக்கு தெரியாதா? எங்களுக்கும் நடத்த தெரியாதா ?                   
    •  
    • நான் நீங்கள் போட்ட பின்னூட்டத்திற்கு நன்றி தெரிவித்து உங்களுக்கு போட்ட பின்னோட்டம் ஏன் இன்னும் நீங்கள் பிரசுரிக்கவில்லை . அப்புறம் எதுக்கு உங்களுக்கு Comment Box.?
    •  
    • நீங்கள் கேபிள் அண்ணா வலைத்தளத்தில் விளம்பரம் கொடுக்கா விட்டால்  Alexa Rank  உங்களுக்கு எவ்வளவு தற்ப்போது இருக்கும் என்று தெரியாதா.? List ல் இருக்கும் மற்றவர்கள் இப்படிதான் உங்களைபோல் விளம்பரம் கொடுக்கிறார்களா?  
    •  
    • தினமும் நாம் 500 Hits கொடுத்தால் அவர்களும் Hits சில தளங்கள் கொடுப்பார்கள் இப்படி Exchange Hits வாங்க மற்றவர்களால் முடியாதா.?    இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் ...
        நண்பரே முதலில் வலைபூங்கா   இணையதளம் சென்று Top 10 நடுநிலையாக நடத்த கற்றுக்கொள்ளுங்கள் ,எனக்கு கிடைத்ததால்  இதனை சொல்லவில்லை . நானே மறந்துவிட்டேன் இப்படி ஒரு போட்டியை ,அவரே Comment ல்  வந்து விருது கிடைத்தது பற்றி தெரிவித்தார் .

              இப்படி தமிழில் தொழில்நுட்பம் வளர்க்கிறேன் என்று சொல்லிக்கொண்டு சக பதிவரை ஒடுக்கும் எண்ணம் கொண்ட உங்களால் இதனை வளர்க்க முடியாது என்பது நிச்சயம்.
            இப்படி கமெண்ட் போட என்ன காரணம் என்று எனக்கு தெரியும் ,புரியாதவர்கள்   எனது  மற்றும் அவரது கடந்த இரண்டு மாத பதிவுகளை பாருங்கள் புரியும். நான்  பிறரை மதிக்கும் உண்மையான தமிழன் என்னிடம் வேண்டாம் இந்த வேலை .


    தேடிச்சோறு தினந்தின்று – பல
    சினஞ்சிறு கதைகள் பேசி – மனம்
    வாடி துன்பம் மிக உழன்று
    பிறர் வாட பல செயல்கள் செய்து
    நரை கூடி கிழ பருவம் எய்தி- கொடுங்
    கூற்றுக்கிரையென பின் மாயும் – பல
    வேடிக்கை மனிதரை போலே
    நானும் வீழ்வேன் என நினைத்தாயோ!
                                - சுப்பிரமணிய  பாரதி 
    Read more...

    Saturday, January 23, 2010

    1

    குட்டீஸ் திறனை வளர்ப்பதில் இணையதளங்களின் பங்கு

  • Saturday, January 23, 2010
  •       இன்றைய காலகட்டத்தில் நமக்கு எவ்வித சந்தேகம் வந்தாலும் கூகிள் , விக்கிபீடியா பெரும்பாலும் தீர்த்துவிடுகின்றன .   ஆனால் குட்டீஸ்    அடிப்படை திறன் களான  கணித திறன் ,புதிர்கள்  போன்றவற்றை வளர்ப்பது பற்றி பார்ப்போம் .      

       கணித பாடம் என்றாலே நம்மில் பலருக்கு  பயம் தான் அதிலும் அல்ஜீப்ரா (algebra)என்றால்  பயந்து ஓடிவிடுவோம் . குட்டீஸ்களுக்கு  அல்ஜீப்ரா , புதிர்கள் போன்றவற்றை நாம்  சொல்லி தருவது மிக கடினம் .

                          பதினைந்து வருடங்களுக்கு முன் பள்ளி படிக்கும் போது வீட்டில் உள்ள தாத்தா, பாட்டி ஓய்வு நேரங்களில்  கதைகள், புதிர் கணக்கு சொல்லி கேள்வி கேட்ட்பார்கள்   அதற்கு பதில் சொன்னால் விரும்பும் பொருளை வாங்கி தருகிறேன் என்று சொல்லுவார்கள் . அவர்கள் அப்போது கேட்ட கேள்விகள் இப்போது வேலைக்கு செல்லும் போது Aptitude , logical reasoning ,puzzles வடிவில் வந்து  உதவுகின்றன , ஆனால் இப்போதுள்ள குட்டீஸ்களுக்கு இந்த வாய்ப்பு மிக குறைவு நமக்கு கிடைத்த தாத்தா , பாட்டி இவர்களுக்கு கிடைப்பதில்லை .  இப்போது அந்த குறைகளை தீர்க்க சில இணைய தளங்கள் வந்துவிட்டன .

                     எளிய முறையில் படங்களுடன் குழந்தைகள் ஆர்வமுடன் பதிலளிக்கும் வகையில் கேள்விகள் உள்ளன .

    • எண்கணித புதிர்கள் .
    • அல்ஜீப்ரா
    • ஜாமென்றி
    • லாஜிக் புதிர்கள்
    • கணித விளையாட்டுகள் ,
    • விரைவாக முடிவெடுக்கும் திறனை வளர்க்கும் விளையாட்டுகள்
    • சீட்டாட்ட புதிர்கள்
    • ஐன்ஸ்டீன் புதிர்கள்
    • கணித Dictionary
    • மறைந்துள்ள பொருட்களை கண்டறிவது
    • வயதை கண்டறிதல் , நேரம்  கண்டறியும் புதிர்கள் 
    • எளிய கூட்டல்,கழித்தல், பெருக்கல்& வகுத்தல் என நீள்கிறது .
                  முக்கியமாக குழந்தைகளின் பெற்றோர்கள்  , ஆசிரியர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பகுதிகளும் கொடுத்துள்ளனர் .  இதற்கென தனி குழுக்கள் அமைத்து செயல்படுத்தி வருகின்றனர் .

     நேரம் கிடைத்தால் நாம் கூட போய் ஜாலியாக  கற்றுக்கொள்ள நிறைய தகவல்கள் உள்ளன .......

               மேற்கூறிய அடிப்படை திறன்கள்  குழந்தைகள் பள்ளி பாடங்களை எளிதாக , விரைவாக கற்று அதிக மதிப்பெண் பெற உதவுகின்றன என்பது கூடுதல் தகவல் .மொத்தத்தில் இணையதளம் சிறியவர் பெரியவர் என்ற பாகுபாடு இன்றி எல்லோருக்கும் பயன்படுகிறது என்பதில் சந்தேகமே இல்லை . 

    குட்டீஸ்களை கணித புலிகளாக்க உதவும் இணையதளங்களின் தொகுப்பு :














       இவை அனைத்தும் இலவச சேவை வழங்கும் தளங்கள் , இன்னும் சில  கட்டணம் வசூலிக்கும் தளங்களும் உள்ளன ...
        
               உலக அளவில் கணிணியை உபயோகப்படுத்தும் குட்டீஸ் பட்டியலில் நாம் இந்தியாவிற்கு 23 ம் இடம் .தமிழில் இத்தகைய வசதிகள் கொண்ட இணையதளம் இதுவரை இல்லை என்பது வருந்தத்தக்க  விஷயம்.
    அடுத்த பதிவில்  :
    ஏர்டெல் to ஏர்டெல் free sms அனுப்ப tips & tricks
    Read more...

    Friday, November 27, 2009

    0

    வலைபூவிற்கு Background Picture சில நிமிடங்களில் அமைக்கும் எளிய வழி

  • Friday, November 27, 2009
  • நமது blog Template எவ்வித படங்களும் இல்லாமல் இருக்கும் அதில் இயற்கை காட்சிகளோ அல்லது நமக்கு பிடித்த தலைவர் , சினிமா நட்சத்திரங்களோ இணைத்தால் blog பார்பதற்கு மிக அழகாக இருக்கும் , படிக்கவருபவர்களையும் ஈர்க்கும் வகையில் இருக்கும் .

     
    உங்களுக்கு தேவையான Image ஐ photobucket
    அல்லது Google Image சென்றோ தேடி அதன்மேல் Click செய்து Save Copy Image தேர்வு செய்துகொள்ளுங்கள் .

    இந்த படத்தினை Background ல்  HTML ,Script போன்றவை தெரிந்திருக்கதேவை இல்லை .

    முதலில் உங்கள் blog ல்
    1.Click 'Layout' -->'Edit Html' for your blog
    அடுத்து
    Ctrl F clickசெய்து
    search box ல்
    body {         என type செய்து Enter கொடுத்ததும் அந்த இடத்தை காட்டும் கீழ்க்கண்டவாறு Code இருக்கும் 

    body {

      background:#123;
      margin:0;
      text-align:center;
      line-height: 1.5em;
      font: x-small Trebuchet MS, Verdana, Arial, Sans-serif;
      color:$mainTextColor;
      font-size/* */:/**/small;
      font-size: /**/small;
      }
    body {  உள்ளே
    background:url(PUT IMAGE URL HERE) repeat top right;

    என type செய்து  PUT IMAGE URL HERE என்ற இடத்தில் நீங்கள் Background ல் இடம்பெற செய்யும் படத்தின்  URL address கொடுத்துவிடுங்கள்  //background:#123; என்பதை நீக்கிவிடுங்கள் அல்லது Comment கொடுத்துவிடுங்கள் ..
    அவ்வளவுதான் . இறுதியில் கீழ்க்கண்டவாறு இருக்கும்
    body {
    background:url(http://img1.chakpak.com/se_images/63422_-1_564_none/rajnikanth-wallpaper.jpg) ;
    /* background-attachment: fixed; */
      //background:#123;
      margin:0;
      text-align:center;
      line-height: 1.5em;
      font: x-small Trebuchet MS, Verdana, Arial, Sans-serif;
      color:$mainTextColor;
      font-size/* */:/**/small;
      font-size: /**/small;
      }
    உங்கள் Blog Background Picture ரெடி ...


    Read more...

    Friday, September 11, 2009

    8

    பதிவு திருடர்கள் விருது பற்றிய அறிவிப்பு

  • Friday, September 11, 2009



  • நம் பதிவுலகில் எவ்வளவோ திறமைகளை பாராட்டி விருதுகளும் ,பாராட்டுகளும் வழங்குகின்றோம் , இப்படி ஒரு விருதை அறிவித்தால் எல்லோரும் ஆர்வமுடன் படிக்கவருவார்கள் இப்படி ஒரு விருதா என்று ? விருது கொடுப்பவர்களுக்கு intresting blog போல intresting award வழங்குபவர் என்ற பெயரும் கிடைக்கும் . ஹிட்ஸ் அதிகமாக கிடைக்க வாய்ப்பு அதிகம். ரசிக்க கூடிய விருதாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை .......

    நமது பதிவுகளை திருடி அவர்களது ப்ளோகில் போட்டு அந்த ப்லோக் கிற்கு புதுமையான பேர் வைத்து இருப்பவர்களுக்கு இத்தகைய விருது .
    அனைத்து பதிவர்களிடமும் கருத்துக்களை கேட்டால் அவர்களும் சில ப்லோக் பற்றி சொல்லுவார்கள் அவற்றை தொகுத்து திறமை அடிப்படையில் வழங்கி கௌரவிக்கலாம் . ஒவொருவரும் தனித்தனியாக இப்படி பெற்ற அனுபவம் உண்டு இதை தடுக்க என்ன செய்யலாம் ? அல்லது நம் பதிவை திருடி போட்டிருப்பதால் நமக்கு ஒரு சந்தோசம் , நம் பதிவையும் திருட ஆரம்பித்து விட்டனர் என்று .

    விருதுக்கு உதாரணமாக கந்தசாமி பட டைரக்டர் சுசி கணேசன் போல யோசித்து முகமூடி அணிந்த உருவம் அமைத்து முடியை பறக்கவிட்டு இருப்பது போல(மேலே உள்ள படத்தை போல) லோகோ செய்யலாம் .
    இதை எப்படி அவர்களுக்கு வழங்கமுடியும்?
    இதை அவர்கள் எப்படி ப்லோக் இல் போட்டு கொள்வார்களா என்பது தானே ?
    சுயமாக சிந்திக்காதவர்களுக்கு இவ்வளவு கஷ்டம் ஏன் நாமே நமது ப்லோக் அவர்களது ப்லோக் பெயருடன் போட்டுக்கொள்ளலாம் . அவர்களுக்கும் ஒரு விளம்பரம் கிடைத்தால் சந்தோசப்படுவார்கள் . இப்படி வள்ளுவர் சொல்லியபடி தண்டிக்கலாம் .

    முடிந்தால் பதிவு திருடர் விருதை உபயோகமான கருத்துக்களை எல்லோருக்கும் பொய் சேர தனது ப்லோக் கிலும் போட்டு சேவை புரிந்தவர் விருது என மாற்றி அமைக்கலாம் .

    செந்தழல் ரவி , பொன்மலர் ,sumazla அக்கா ,வால் பையன் , கேபிள் ஜி , நிஜாமுதீன்
    சூர்யா கண்ணன் , ராகவன் நைஜீரியா,butterfly சூர்யா , எவனோ ஒருவன் ,பனையூறான் ,prabhakar ramasamy ,செல்வராஜ் அண்ணே ,கார்கி geetha achel,கார்த்திகேயன் ,வசந்த் மற்றும் செந்தில் போன்றவர்கள்(விடுபட்ட நண்பர்கள் மன்னிக்கவும் ) இப்படி ஒரு விருது கொடுத்தால் அது இன்னும் சிறப்பாக இருக்கும் எல்லோருக்கும் போய்சேரும் வார இறுதியில் இதுபற்றி அறிவிப்பீர் கள் என்ற நம்பிக்கையுடன் இந்த பதிவை இடுகிறேன் .


    கடந்த வாரம் நண்பர் செந்தில் - செந்தில் பக்கங்கள் எழுதிய

    முதுமலைக் காட்டுல இருந்து ஒரு கடுதாசி!

    என்ற கட்டுரை படித்து கூட எழுதமுடியுமா என வியந்தேன் இப்படி எழுதுபவர்களுக்கு மத்தியில் இது போன்றவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர் என்பது வேதனை ,


    நன்றி :
    இப்படி ஒரு பதிவு எழுதவைத்த கண்ணாடி போட்டுக்கொண்டு பைக்கில் போஸ் கொடுக்கும் புதுமை வலைதள நண்பருக்கு நன்றி .

    காரணம்:

    "பிடித்த பாடலை பாடி அதை வைத்து கண்டுபிடித்து டவுன் லோடு செய்யலாம்" இரண்டு நாட்களுக்குமுன் நான் எழுதியது

    http://saidapet2009.blogspot.com/2009/09/blog-post_09.html


    அவரது வலைத்தளத்தில் இன்று http://puthumaitech.blogspot.com/2009/09/blog-post_1877.html
    என்ற தலைப்பில் நான் எழுதியதை சூடாக ஒரு எழுத்து கூட மாற்றாமல் ஒரே ஒரு போட்டோ மற்றும் மாற்றி தலைப்பை கூட மாற்றாமல் அப்படியே எழுதியதற்கு நன்றி . நன்றி, நன்றி ..
    என்னால் முடிந்தவரை என் நண்பர்களிடம் விருது வழங்க ஏற்ப்பாடு செய்துவிட்டேன் உங்கள் திறமையின் அடிப்படையில் கண்டிப்பாக வழங்குவார்கள் .

    Read more...

    Subscribe