Wednesday, September 16, 2009

0

இப்படியும் விளம்பரங்கள் தேவைதானா?

  • Wednesday, September 16, 2009
  • Share







  • ஒவ்வொரு ஸ்டேஷன் முழுவதும் (சென்னை)எங்கு பார்த்தாலும் விளம்பர பேனர் ,போதாததற்கு டிவி வைத்து முழுவதும் விளம்பரம் .ரயில் வரும் நேரம் , தாமத நிலவரம் கூட சிறியதாக எப்போதாவது கீழே சிறிய எழுத்தில்  ,

    அட பாட்டு கூட வேண்டம் எதாச்சு தெரிஞ்சிக்கிற மாதிரி முக்கியமான இடம் , செய்தி அப்பப்ப போடலாம் அதுவு இவங்களுக்கு தோணாது.

    ரயில்வே சுவற்றில் விளம்பரங்களை விட  இவர்கள் சங்கத்து விளம்பரம் பொன்னையா அது இது என்று . அந்த இடத்தில் தனியார் விளம்பரம் போட்டால் வருமானமாவது  வந்திருக்கும் வேலையை விட விளம்பரம் தான் இவர்களுக்கு முக்கியம் .
     .

    இன்று தாம்பரம்- பீச் வரை எல்லா ஸ்டேஷன் களிலும் ஒரு விளம்பரம்  ஒருவர் தான் வாங்கிய கடனின் காரணமாக ஒரு வருடங்களாக வேலைக்கு வராததால் ரயில்வேயில் அவரை வேலையை விட்டு நீக்கி விட்டார்களாம் , அந்த வேலையை மீண்டும் வாங்கித்தந்த இல்லை, இல்லை  போராடி வாங்கி தந்த மண்டல தலைவர் படத்தை போட்டு  அவருக்கு நன்றி கூறி பெரிய விளம்பர போஸ்டர் ,  ஆனால் வேலைக்கு வராத காரணம் கடன் தொல்லை , அப்ப நோட்டீஸ் அடிக்க செலவுக்கு என்ன இன்னும் கடன் வாங்கினாரா தெரியவில்லை ?உங்கள் சங்க தலைவர் வாங்கி தந்தால்  உங்கள் நிலைய அலுவலகத்தில் உள்ள நோட்டீஸ் போர்டு அல்லது அரை சுவர் முழுவதுமோ ஒட்டி கொள்ளுங்கள் , முடிந்தால் அவர்  படத்தை உங்கள் வீட்டில் மாட்டி வணங்குங்கள்  அவர் இன்னும் சந்தோஷமடைந்து நல்ல பணிகள் செய்வார்.
         

    ஏதாவது சிறிய நிறுவன துண்டு விளம்பரம் ரயில் பெட்டிகளில் இருந்தால் கிழித்துவிடுகின்றனர், ஒட்டியவன் கிடைத்தால் அவனை பிடித்து அபராதம் போட்டு விடுகின்றனர்  இது பாராட்டவேண்டிய செயல் ஆனால் கடந்த இரு நாட்களாக நிலையத்தில் தென்படும் இந்த விளம்பரம் மட்டும் அப்படியே இருக்கிறது  அது என்னவென்று பாருங்கள் .
    ஏழை மாணவர்களுக்கு ரூபாய்  500  க்கு laptop வழங்க விருக்கும் ராகுல் காந்திக்கு 'கை' கொடுப்போம் இந்திய இளைஞர் காங்கிரசில் சேருவோம் -  இளைஞர் காங்கிரசில் இயக்கம் .


    இந்த இயக்கம் எங்குள்ளது என்று station master அறிவார் , நடவடிக்கை எடுப்பாரா ? அல்லது போஸ்டர் கிழிப்பாரா? .


    எல்லோருக்கு தெரிந்த முக்கிய விஷயம்  நமது தென்னக ரயில்வே  அதிலும் தமிழ் நாட்டில் T.T.R  கடமை உணர்வுக்கு அளவே இருக்காது தினமும் குறைந்தது பத்து பேரை பிடித்து அன்பாக தோள்மேல்  கை போட்டு கலரை பிடித்து கூட்டி செல்வார்கள் , பாராட்டவேண்டிய விஷயம் தான் அனால் ரயில்வே இதை இந்தியா முழுவதும் செய்தால் பாராட்டலாம் , பீகாரில் பரிசோதகரை டிக்கெட் கேட்டால்  அப்படியே தூக்கி வெளியே வீசி விடுவார்களாம்  அப்போது தமிழன் மட்டும் என்ன ------?.



    ஒரு பத்து பதினைந்து  மாதங்களுக்கு முன்பு வட நாட்டில் இருந்து தமிழகம் வந்த ஒரு கும்பல் டிக்கெட் எடுக்காமல் வந்தபோது அவர்களை பிடித்த நம் சென்னை பரிசோதகர் களிடம் சொன்ன பதில் இதுவரை எந்த மாநிலத்திலும் டிக்கெட் கேட்கவில்லை தமிழ் நாட்டில் மட்டும் தான் கேட்கிறீர்கள் என்று .  அவர்களுக்கு சிறப்பு பெட்டி ஒதுக்கி அவர்களின் பயணத்தை தொடரவைத்து மீதி கதை. ஆனால்  எப்பவும் நாம் தொங்கிக்கொண்டுதான் செல்கிறோம் கூடுதல் பேட்டியோ, ரயிலோ விடுவது இல்லை . பத்து வருடதிற்கு முன்  விட்ட அதே ரயில் வசதிகள் தான் இப்பவும் .  அப்புறம் வருமானம் அதிகமாகாதா என்ன?
    .
    ஜனதா சாப்பாடு , பத்து ரூபாய்க்கு ஏழு பூரி எல்லாம் இரண்டு நாளைக்கு மட்டும் தான் . இப்ப எங்க இருக்கன்னு தெரியல அப்படி விளம்பரம் கூட பாக்கமுடியல .குடிநீர் வசதிகூட இல்லை.  அப்புறம் என் platform டிக்கெட் மட்டும் கேட்கிறார்கள் தெரியல? தண்டவாளங்களில் ஏதேனும் குறை இருக்கிறதா என்று சுத்தியலை தூக்கி கொண்டு பல மயில் வெயிலின் செல்லும் ஊழியர்கள் கஷ்டப்பட்டு கொண்டுதான் இருக்கிறார்கள் .எதோ கொஞ்சம் ரயில்வே ரன்றாக இருக்கிறது என்றால் மக்களுக்காக சேவை செய்யும் ஒரு சில ரயில்வே பணியாளர்களால் தான் .ஊட்டி போன்ற பாரம்பரிய ரயில் சேவையை நமக்கு சிறப்பாக வழங்குபவர்களும் இவர்கள் தான் .








    ரயில் நிலையங்களில்  அதிரவைக்கும்  விளம்பரங்கள்

    0 Responses to “இப்படியும் விளம்பரங்கள் தேவைதானா?”

    Subscribe