Tuesday, October 25, 2011

1

எந்தெந்த இணையதளத்தில் என்னென்ன username ,password பயன்படுத்துகிறீர்கள் என்பதை தெரிந்துகொள்ள

  • Tuesday, October 25, 2011
  • நீங்கள் பயன்படுத்தும்  தளங்களின்   username ,password போன்றவற்றை Firefox ,google crome ல் இருந்து கண்டுபிடிக்கலாம் அதுவும் ஒரு சில நொடிகளில் .மறந்துபோகின்றவர்களுக்கு இது நல்ல பயன்தரும் .பயன்படுத்தும் Username மற்றும் Password அனைத்தும்.
    இணையதளத்தில் பெரும்பாலும் IE விட Firefox மிக  பாதுகாப்பானது வைரஸ் பாதிப்பு மிக குறைவு .  எனவே பெரும்பாலானோர் Firefox பயன்படுத்துகின்றோம் .
    நாம் பல்வேறு இணையதளங்களில் உபயோகப்படுத்தும் username ,password ஆகியவை நமது Firefox, Google Chrome ல் சேமித்து வைக்கபட்டுஇருக்கும்    அவற்றை எப்படி கண்டுபிடிக்கலாம் என்று பார்ப்போம் .  கணினிக்கு சென்று கீழ்கண்டவற்றை  செய்யுங்கள்.

    1) Open Mozilla Firefox

    2) Go to Tools > Options.

    3) Go to security tab.

    4) Click "view saved passwords".

    5) Click "show passwords".

     முதலில் sitename, username  காட்டும்  பிறகு show password button மூலம் password காட்டும் அவ்வளவுதான் உங்கள் Username,password ரெடி.


    அடுத்து Google chrome ல் எப்படி என்று பார்ப்போம்

    1.Open Google chrome

    2.Goto
    settings -> Options

    3.
    Goto Personal stuff -> Show saved passwords

     
      எந்தெந்த இணையத்தளத்தில் என்னென்ன Username. pasword  என்பது கிடைத்துவிடும்.
    இனி உங்களுக்கும் password மறந்துவிட்டால் இப்படி தெரிந்துகொள்ளலாம் ,

    இனி browsing center, office மற்றும் நண்பர்கள் வீடுகளுக்கு சென்று இணையதளத்தை பயன்படுத்தும் போது இறுதியாக  Clear recent history சென்று Delete செய்துவிடுங்கள் அப்போதுதான் பாதுகாப்பு.  இல்லாவிட்டால் பிறர் மேற்கண்ட முறையில் Username, Password ஆகியவற்றை  தெரிந்து கொள்ள வாய்ப்பு  உள்ளது .  இதை தவிர்க்க

    1) Open Mozilla Firefox

    2) Go to Tools &select; Options.

    3) Go to Privacy tab.

    4)Clear history when firefox closes

    தேர்வு செய்தால்இவற்றை Browser ல் save ஆவதை  தடுக்கலாம் .மேலும் master password அமைப்பது போன்ற  இன்னும் சில வழிகளிலும்  இதை தடுக்கலாம்.
    Read more...

    Saturday, October 22, 2011

    1

    டி ஆர் பவர் ஸ்டார் சாம் ஆண்டெர்சன் மங்காத்தா வீடியோ

  • Saturday, October 22, 2011
  • டி ஆர் பவர் ஸ்டார் சாம் ஆண்டெர்சன் கலக்கும்  மங்காத்தா வீடியோ .

    நம்ம பவர் ஸ்டார் லத்திகா செம ஓட்டம் பேப்பர் இல் ..இவற்றுடன் டி ஆர் சேர்ந்த மங்காத்தா வில் நடித்தால் ..இதோ 
    இன்று காலையில் youtube இல் பார்த்து வயிறு வலிக்க சிரித்தது . பொதுவாக இது போல் ரீமிக்ஸ் பாடலுக்கோ அல்லது குறிப்பிட்ட சீனுக்கோ செய்து வெளியிடுவார்கள் ஆனால் இந்த  வீடியோ வில் மங்காத படம் முழுவதையும் பார்ப்பது போல இருக்கும் .நல்ல காமெடி திறன் உள்ளவர் களால்  மட்டுமே இது சாத்தியம் ..இதனை உருவாக்கிய SSN  கல்லூரி  மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் டி ஆர் அர்ஜுன் போட்டி போட்டு கலக்கி இருக்கிறார்கள் ..கீழே உள்ள வீடியோ உங்களை  கண்டிப்பாக சிரிக்க  VAIKKUM  ...



    Read more...

    Monday, August 15, 2011

    1

    எட்டயபுரத்து பாரதி & ஆங்கிலேயரை வெறுத்த இந்திய அதிசயம்: சுதந்திர தின பதிவு

  • Monday, August 15, 2011
  • எட்டயபுரத்து பாரதி:

    ஊழல் கருப்புப்பணம் என பல தடைகள் இருந்தாலும் அவற்றை எல்லாம் தகர்த்து வலிமையான இந்தியா உண்டாகும் விரைவில் என்பதில் ஆச்சர்யம் இல்லை ...
    மகாகவி சுப்பிரமணிய பாரதி இந்த பெயரையோ அவரது பாடல்களையோ  படிக்கும் போது விடுதலை உணர்வு தானாக வந்துவிடும் அவ்வளவு வலிமையான எழுத்துக்கள் , பெயர் கொண்டவர்  . 
       
    எத்தனை பேர் சுதந்திர திற்காக  பாடுபட்டிருந்தாலும் கவிதைகள் , பாடல்களின் மூலம் சுதந்திர உணர்வை வளர்த்த பாரதி பள்ளி நாட்களில் இருந்து மிகவும் பிடித்த தலைவர். 

    பத்தாம் வகுப்பில் படித்த அவரது பாஞ்சாலி சபதம் வரிகளில் 


    தேவி திரௌபதி சொல்வாள்-‘ஓம்,
    தேவி பராசக்தி ஆணை யுரைத்தேன்;
    பாவி துச்சாதனன் செந்நீர்,-அந்தப்
    பாழ்த்துரி யோதனன் ஆக்கை இரத்தம்,
    மேவி இரண்டுங் கலந்து-குழல்
    மீதினிற் பூசி நறுநெய் குளித்தே
    சீவிக் குழல்முடிப் பேன் யான்;-இது
    செய்யு முன்னே முடியே’னென் றுரைத்தாள்.
    மனப்பாட பகுதிக்காக படித்தாலும் மறக்கமுடியாத வரிகள்.


    முன்பு இருந்த அரசு வேலையில் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர,குடியரசு தின நண்பர்களுடன் அணிவகுப்பில் கலந்துகொண்டு அதற்காக இரண்டு வாரங்களுக்கு முன் பிருந்தே பயிற்சி என விறுவிறுப்பாக மகிழ்ச்சியாகவும் இருக்கும் .
    தப்பாக செய்பவருக்கு  parade griound இல் திட்டு,punishment வாங்கி அன்று முழுவதும் நண்பர்கள்  அதை சொல்லி கிண்டல் செய்துகொண்டு  எனசெல்லும் .இப்போது ஸ்வீட்டோடு முடிந்துவிடுகிறது சுதந்திரதினம்.


    ஆங்கிலேயரை வெறுத்த இந்திய அதிசயம்: காந்தி, நேரு,கட்டபொம்மன் ,பாரதி போன்றவர்கள் போராட்டம் பற்றி நமக்கு தெரியும் . இந்திய அதிசயம் ஆங்கிலேயரை எதிர்த்த சுவாரஸ்ய கதை இது.
                குதுப்மினார் குத்புதின்ஐபெக்கால் முதல் மாடி வரை தான் கட்டப்பட்டது . அதை வானுயர வெற்றிகரமாக கட்டி முடித்தவர் சுல்தான் இல்தூமிஷ் .உயரம் -(242) அடி மொத்தம் உச்சிக்கு செல்ல (319) படிகள் . முஸ்லீம் மக்கள்தொழுகைக்கும் பயன்பட்டது .பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் சற்று மோசமான நிலையில் இருந்த குதுப்மினாரைசீரமைக்க முடிவு செய்யப்பட்டது அதற்க்காக ராபர்ட் ஸ்மித் என்ற கட்டட கலைவல்லுனரை அரசு அழைத்து வந்தது , வந்தவர் ரிப்பேர் மட்டுமல்லாதுஅதிகபிரசங்கி தனமாக குதுப்மினருக்கு ஒரு ஆங்கில மேற்கூரை வைத்தால்மேலும் நன்றாக இருக்கும் என்று மரத்தால் ஒரு சிறு கோபுரம் அமைத்து உச்சியில் பொருத்தினார் .

       இயற்கை அதை அனுமதிக்கவில்லை ! பெரும் இடி விழுந்துகோணலாகிபோனது கலை உணர்வு மிகுந்த பிரிடிஷ் அதிகாரிகள் தலையில்அடித்துக்கொண்டு (1948) ல் இறக்கிவைத்தனர் .இன்றளவும் பரிதாபமாக சுணங்கி நிற்கும் அதை காணலாம் ..இது என்ன அபத்தம் என்று குதுப்மினார் அந்த வெள்ளைக்கார குல்லாயை ஒதுக்கி தள்ளிவிட்டதாம்.வெள்ளைக்காரர்கள் தன் மீது சுமத்திய பாரத்தை விரட்டிய முதல் இந்தியன்குதுப்மினார் என்பதில் நமக்கும் பெருமைதான்.குதுப்மினார்


    இந்தியன் என்பதில் பெருமைகொள்வோம் ...........அனைவருக்கும் சுதந்திர தின  வாழ்த்துக்கள்...
    Read more...

    Subscribe