Thursday, September 30, 2010

0

இன்டர்நெட் இல்லாமல் ஜிமெயில் பார்க்கும் & அனுப்பும் வசதி

  • Thursday, September 30, 2010


  • Gmail usage without internet

            இன்டர்நெட் இணைப்பு இல்லாமல் Browsing செய்யும் முறை பற்றி முந்தைய பதிவில் பார்த்தோம் .நம்மில் பலர்  இன்டெர் நெட்  இணைப்பு இரவில் மட்டும் அல்லது குறிப்பிட்ட அளவு மாதம் குறிப்பிட்ட GB/MB அளவு மட்டு பயன்படுத்தும் வசதி பெற்றிருப்போம் ,இத்தகைய வசதி உள்ளவர்களுக்கு இந்த Gmail Offline ல் பயன்படுத்தும் வசதி மிக மிக உபயோகமாக இருக்கும் .

        நீங்கள் Internet இணைப்பு கொடுத்தவுடன் Mail கள் Desktop  வந்துவிடும்  .  இதனால் இணைப்பு இல்லாதபோதும் நாம் Mail பார்க்கலாம் .அதேபோல இணைப்பு இல்லாதபோதும் Mail அனுப்பலாம் , அவ்வாறு அனுப்பும் மெயில் Outbox ல் தங்கிவிடும் எப்போது இணைப்பு கொடுக்கிறோமோ அப்போது mail சென்றுவிடும்

    .Laptop வைத்திருப்பவர்கள் பயணம் செய்துகொண்டே Mail பார்த்து Reply கொடுக்க வசதியாக இருக்கும் .
                 முதலில் உங்கள் ஜிமெயில் Login செய்து settings சென்று அதில்  Google Gears  நிறுவப்பட்டு உள்ளதா என்று பாருங்கள், இல்லாவிட்டால்

       http://tools.google.com/gears  சென்று  இன்ஸ்டால் செய்யுங்கள்.

    பிறகு  ஜிமெயில் more>>  சென்று  Labs என்பதை தேர்வு செய்யுங்கள்
    offline - enable கொடுத்து save  செய்யவும்.

    பிறகு உங்கள் ஜிமெயில் inbox வந்து settings  அருகில்  உள்ள offline கிளிக் செய்து click next  கொடுக்கவும் படத்தில் கட்டியவாறு கேட்கும்  install offline access for gmail  க்கு  next button  கிளிக் செய்யவும் . அடுத்து கேட்கும்  permission  ஓகே  கொடுக்கவும்.

    ஜிமெயில் உங்கள் desktop  வந்துவிடும்.
    உங்கள் மெயில்கள் அனைத்தும் படத்தில் கட்டியவாறு   உங்கள் computerக்கு download  ஆகதொடங்கும் .

    இனி நீங்கள்  offline  ல் மெயில் உங்கள் கணிப்பொறியில் எப்போதுவேண்டுமானாலும்  பார்க்கலாம்./ பதில் அனுப்பலாம் ...இதுபோன்ற பல சிறப்பான வசதிகள் கொண்டது ஜிமெயில் .



    google secrets தொடரும்....

    குறிப்பு :  C/ Desktop தவிர மற்ற Drive களில் இதனை அமைக்க சாத்தியம் இல்லை என்று நினைக்கிறேன் .ஏனென்றால் Google Gear நாம் C Drive ல் இன்ஸ்டால் செய்திருக்கிறோம் .
    Read more...

    Tuesday, August 31, 2010

    2

    வெள்ளைக்காரர்கள் vs குதுப்மினார் & இயக்குனர் செல்வராகவன்

  • Tuesday, August 31, 2010








  • இந்திய சுதந்திர தின பதிவு : கொஞ்சம் லேட் தான் ....இருந்தாலும் தெரிந்துகொள்ளவேண்டியதகவல்..  காந்தி, நேரு,கட்டபொம்மன் ,பாரதி போன்றவர்கள் போராட்டம் பற்றி நமக்கு தெரியும் . இந்திய அதிசயம் ஆங்கிலேயரை எதிர்த்த சுவாரஸ்ய கதை இது.

    குதுப்மினார் குத்புதின்ஐபெக்கால் முதல் மாடி வரை தான் கட்டப்பதூமிஷ் .உயரம் -(242) அடி மொத்தம் உச்சிக்கு செல்ல (319) படிகள்

           முஸ்லீம் மக்கள் தொழுகைக்கும் பயன்பட்டது .பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் சற்று மோசமான நிலையில் இருந்த குதுப்மினாரைசீரமைக்க முடிவு செய்யப்பட்டது .ட்டது . அதை வானுயர வெற்றிகரமாக கட்டி முடித்தவர் சுல்தான் இல்
        
         அதற்க்காக ராபர்ட் ஸ்மித் என்ற கட்டட கலைவல்லுனரை அரசு அழைத்து வந்தது , வந்தவர் ரிப்பேர் மட்டுமல்லாதுஅதிகபிரசங்கி தனமாக குதுப்மினருக்கு ஒரு ஆங்கில மேற்கூரை வைத்தால்மேலும் நன்றாக இருக்கும் என்று மரத்தால் ஒரு சிறு கோபுரம் அமைத்து உச்சியில் பொருத்தினார் .

               இயற்கை அதை அனுமதிக்கவில்லை ! பெரும் இடி விழுந்துகோணலாகிபோனது கலை உணர்வு மிகுந்த பிரிடிஷ் அதிகாரிகள் தலையில்அடித்துக்கொண்டு (1948) ல் இறக்கிவைத்தனர் .இன்றளவும் பரிதாபமாக சுணங்கி நிற்கும் அதை காணலாம் ..

              இது என்ன அபத்தம் என்று குதுப்மினார் அந்த வெள்ளைக்கார குல்லாயை ஒதுக்கி தள்ளிவிட்டதாம்.வெள்ளைக்காரர்கள் தன் மீது சுமத்திய பாரத்தை விரட்டிய முதல் இந்தியன்குதுப்மினார் என்பதில் நமக்கும் பெருமைதான்.குதுப்மினார்


    twitter இல் படித்தவை :


    ட்விட்டரில் அன்றாட நிகழ்வுகள் கருத்துக்களை எளிமையாக பகிர்ந்து கொள்ளும் ஒரே real hero , living legent இயக்குனர் செல்வராகவன் அவர்கள் மட்டுமே என்பது ட்விட்டர் பயன்படுத்துபவர்களுக்கு தெரியும் , நேற்று நம் living legent க்கு அப்படி என்ன மன வருத்தமோ ..மிக வருத்தமுடன் ட்விட்டி இருந்தார் .


                வாழ்க்கையை ஆர்வமிகுந்ததாக மற்ற யோசனை கூறுங்கள்,நான் என்னுள் வெறுமையாக எண்ணுகிறேன் என்று ...
     Can some one please teach me how to find interest in life?? These days I feel so empty inside ..


    செல்வா சார் அடுத்த படம் சீக்கிரம் கொடுங்க எல்லாம் சரியாகிவிடும் ...
    அவரின் மனவருத்தம் விரைவில் நீங்க பிரார்த்திப்போம் ...

    Read more...

    Monday, August 30, 2010

    2

    மறந்து போன மைக்கேல் ஜாக்சன் பிறந்தநாள் & நோபல் பரிசு

  • Monday, August 30, 2010
  • நமது தமிழக நடிகர்களில், மறைந்த சிரிப்பு நடிகர் சந்திரபாபு, அன்றே மைக் கேல் ஜாக்சன் போன்று சிறப்பாக நடனமாடியவர். தற்போதுள்ள சூழ்நிலை அந்த காலத்தில் இல்லாததால், அவர் மைக்கேல் ஜாக்சனைப் போன்று, உலகம் முழுவதும் புகழ்பெற முடியவில்லை. இருந்த போதிலும், கடைசி காலத் தில், மைக்கேல் ஜாக் சனைப் போலவே, கடன் தொல்லை சந்திரபாபுவுக்கும் இருந்துள்ளது.

    மைக்கேல் ஜாக்சன் இறக்கும்போது, அவருக்கு 500 கோடி டாலர் கடன் இருப்பதாகக் கூறப்படுகிறது. எந்தளவுக்கு அவர் மன உளைச்சலுடன் இருந்திருப்பார் என நினைக்கும் போதே, அவர் ரசிகர்களுக்கு, தானாக கண்களில் கண்ணீர் வந்திருக்கும். அவரது இறப்பில், பல சந்தேகங்கள் எழுப்பப் பட்டிருப்பது வருத்தம் அளிக்கிறது. ஜாக்சன் இறக்கும் போது, வெறும் 50 கிலோ எடை மட்டுமே இருந்துள் ளதும், அவர் உடம்பில், ஊசி போடாத இடங்களே இல்லாத வகையில், ஊசியால் துளைக்கப்பட்டிருப்பதும், தனது உடலை அழகு செய்து கொள்ள, பலமுறை அறுவை சிகிச்சை செய்துள்ளதால், தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, தன் உயிரிழப்புக்கு, தானே காரணமாகி உள்ளார்.

    எந்தவொரு நாட்டிய கலைஞனும், இந்த மண்ணில் பெறாத பெருமையை, மைக்கேல் ஜாக்சன் பெற்றிருந்தாலும், அவரின் சில தீய பழக்கத்தால், அவருக்கு அவப்பெயர் வந்தாலும், அவரின் நடனத்தை பார்த்து ரசித்தவர்கள், அவரை ஒரு அதிசய பிறவியாகத்தான் பார்த்து வந்தனர். ஆனால், ஜாக்சனின் திரைமறைவு வாழ்க்கையில் நடந்த அசம்பாவிதங்களே, இன்று அவரின் மரணத்துக்கு காரணமாக மாறிவிட்டது.ஜாக்சனின் வாழ்க்கை, அனைவருக்கும் ஒரு பாடமாக நிச்சயம் அமைய வேண்டும்.

    மைக்கேல் ஜாக்சன் 29 auguest பிறந்தநாள் ...அவர் மறைந்தாலும் அவரது நடனம் என்றும் மறையாது ..அமைதிக்கான நோபல் பரிசு அவருக்கு கிடைக்க  பிரார்த்திப்போம் .
    twitter இல் ரசித்த வரிகள் :
    நம்மை விட்டு சென்ற மைக்கேல் ஜாக்சன் னால் சொர்கம் சிறப்புடன் இருக்கிறது ... 
    ஒரு வருடம் ஆகியும் அவரைப்போல ஒருவரும் இன்னும் வரவில்லை இனி வருவதும் ?
    Read more...

    Subscribe