Showing posts with label cinema. Show all posts
Showing posts with label cinema. Show all posts

Sunday, August 29, 2010

1

ரசிகர்கள் ரசிக்கும் சிறந்த இளைய தலைமுறை நடிகர்

  • Sunday, August 29, 2010
  •  ரசிகர்கள் ரசிக்கும் பிடித்த அந்த நடிகர் யாருன்னுநீங்களே சொல்லுங்க

    தருதல, இளைய தலைவலின்னு ஓவரா ஸீன் போடாம சூர்யா ன்னு மட்டு பெயர் போடுறது புடிக்கும் .
    காசுகுடுத்து கட் அவுட் , பாலபிசேகம் பண்ணாம இருக்குறது புடிக்கும்

    நாலு படத்துல ஒன்னு ஓடினதும் அடுத்த முதல்வர் , ரசிகர்மன்ற சீரமைப்பு, அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை என ஸீன் போட்டு வது என இல்லாமல் இருப்பது .


    (I am back) , நா ஒருதடவ முடிவு பண்ணா எ பேச்ச நானே கேக்கமாட்டே (அப்ப என்ன ------ நீ முடிவு பண்ற ) இப்படி அர்த்தமே இல்லாத (பஞ்ச்) வசனம் பேசாதது (இது ரெண்டுக்கும் என்ன அர்த்தம்ன்னு யாராச்சு தெரிஞ்ச சொல்லுங்கப்பா.)

    கலர் கலரா டிரஸ் போட்டு ராமராஜன் ரீ-என்ட்ரி ய தடுத்தது . சிம்புவ விட்டு பில்ட் அப் பன்னசொல்றது (இன்னுமாய ஒங்கள நம்புறாங்க ) இந்தமாதிரி வேலைய பண்ணாம இருப்பது .

    பிறந்தநாள் அன்று மட்டும் கம்ப்யூட்டர் தருவது , மரகன்று நட சொல்வது என இல்லாமல் அகரம் (Foundation) ஆரம்பித்து உதவிசெய்வது .

    ஐம்பது படம் நெருங்கியும் கண்துடைப்புக்காக ஒரு லட்சம் மட்டும் நன்கொடை தராமல் , வருமானத்தில் பத்து சதவீதம் சமுதாய நலனுக்கு ஒதுக்கியது .


    எல்லா படங்களிலும் டிரஸ் மட்டும் மாறிக்கொண்டு , தொப்பையை தூக்கி கொண்டும் ஆடாமல் எல்லோரும் ரசிக்கும்படி நடனம் ஆடுவது.


    சினிமாவில் அமைதியான நாடு கேட்டேன் என்று திரையில் பாடிவிட்டு வெளியே சைலன்ஸ் என சவுண்ட் விடுவது , அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கூறிவிட்டு அப்பொழுது எதோ பேசிவிட்டேன் இப்போது பக்குவம் வந்துவிட்டது என்று கூறாமல் அமைதிகாப்பது .


    டிவி பெட்டியில் இயக்குனருடன் குழந்தைபோல பேட்டி கொடுத்து பிறகு அவரை சைலன்ஸ் என்று மிரட்டாமலும் , இயக்குனர் ஹோட்டலில் மிரட்டினார் என்று சொல்லாமல் இருப்பது .

    எல்லோர் மனதிலும் ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாக 
    இடம்பிடிதுக்கொண்டிருப்பது.


    Twitter ல் ரசித்த வரிகள் :
                                                       தமிழர்களை மட்டும் ஏமாற்றிவரும் இலங்கை , இப்போது இந்தியாவையும் கிரிக்கெட் மூலம் ஏமாற்ற ஆரம்பித்துவிட்டது அம்பயர் உதவியுடன்  ...

    எப்படியோ பைனல்ல அப்டி எது நடக்கல ... இருந்தாலும் இலங்கை அணி இந்த தொடர் மூலம் கோப்பையை வென்றாலும் பெயரை கெடுத்துக்கொண்டதுதான் நிஜம்...
    Read more...

    Saturday, August 28, 2010

    0

    ஈரம் : விமர்சனம் - நந்தாவின் அமைதியான அட்டகாசம்

  • Saturday, August 28, 2010

  • தமிழில் வந்திருக்கும் திரில்லர் என்று சொல்லக்கூடிய அளவிற்குகொடுக்க முயற்சி செய்துள்ளனர் .   முதலில் சிந்து மேணன்  தண்ணீரில் மிதந்தபடி இறக்கும் காட்சி , அதற்கு முன்  அவர் அறையிலிருந்து தணீர் வெளியேறுவதை கூட திகிலுடன் காட்டி  தண்ணீரை  காட்டி கூட பயத்தை உண்டாக்க முடியும் என்று காட்டி இருக்கின்றனர் .
    அந்த இறப்பின் பின்னணி என்ன அவரின் கடந்த கால வாழ்க்கை இவைதான் மீதி கதை .இதை விசாரிக்கவரும் ஆதி சிந்து வின்  காதலன் , காவல்துறையில் பணிபுரிபவருக்கு தான் மகளை தர மறுப்பதால்  ஆதி சிந்து இடையே காதல் முறிந்து நந்தாவை மணக்கிறார் .
    மனைவிமேல்  நண்பனின் பேச்சை கேட்டு  சந்தேகப்பட்டு அவரை மன ரீதியாக துன்புறுத்துகிறார் அந்த பிளாட் தான் மகளுக்கு கிடைக்கததால் சிந்துவை  விரட்ட  தினமும் ஒருவன்  வந்து போகிறான் என நந்தாவிடம் சொல்லிவிடுகிறார் ,இது போல இன்னொரு வீட்டுகாரர் , வாட்ச்மேன் போன்றோரும் சொல்ல சந்தேகத்தால் மனைவிக்கு தூக்கமாத்திரை கொடுத்து தண்ணீரில்  போட்டு கொலை செய்து விடுகிறார் .

    நீர் உருவில் வந்து அந்த மூன்று பேரையும்  சிந்து கொல்கிறார், இதை அறிந்த ஆதி எப்படி உண்மையை எல்லோருக்கும் தெரிவிக்கிறார்  என்பது விறுவிறுப்பான கதை.


    ஆதி  அனைத்து   காட்சிகளிலும்  கலக்குகிறார் , அனால்  எதோ ஒன்று மிஸ்ஸிங் இன்ஸ்பெக்டர்  வேடம் நன்றாக பொருந்துகிறது .

    நந்தா   பேசும் வார்த்தைகள் மிக குறைவு  ,  எந்த வித ஆர்ப்பாட்டமும் இன்றி வில்லத்தனம் காட்டுகிறார் ,  ஓவர் ஆக்டிங்  இல்லாமல்   இயல்பாக அதுவும் அந்த" எனை காணவில்லையே  நேற்றோடு  படலை சிந்து பாடிக்கொண்டு டிவி இல் பார்க்கும்போது அதை மாற்றி திரும்ப அந்த பாடலை நந்தாவிடம்  வைக்க சொல்லும் சிந்து  அப்போது இவர் நடிப்பு  அட்டகாசம் .  எல்லோரையும் தூக்கி சாப்பிட்டுவிடுகிறார் .
     பின்னணி இசை ,ஒளிப்பதிவு   மிரட்டலாக இருக்கிறது .  கொலை பின்னணி , சிந்து -ஆதி காதல் இரண்டையும் சேர்ந்தே சொல்லி இருப்பது வித்தியாசமாக விறுவிறுப்பாக செல்ல உதவுகிறது.
    கண்டிப்பாக  இரண்டு முறையாவது பார்த்தால் தான்  அணைத்து கட்சிகளிலும் உள்ள கருத்துக்கள் புரியும் .   ஒவ்வொரு  காட்சியையும்  ஹாலிவுட்  படங்கள் போல எதோ ஒன்றை வைத்து கதையை நகர்த்தி இருக்கிறார்  இயக்குனர்.

    திரில்லேர் படங்களின் முழு  கதையுயும்  விமர்சித்தால்  படிப்பவர்களுக்கு  இவ்வளவு தானா  இன்று நினைக்கதோன்றும் , அப்படி விமர்சிப்பதும் கடினம் ,  ஓரிரு  இடங்கள் மட்டும்   இழுப்பது போல தோன்றுவது  தவிர  படம் முழுவதும் பரபர , விறுவிறு கண்டிப்பாக போய் பார்க்கலாம் ஈரத்தை ...
    Read more...

    Friday, May 28, 2010

    1

    சிங்கம் - அட்டகாசம்

  • Friday, May 28, 2010
  • நீண்ட நாட்களுக்கு பிறகு முதல் நாள் முதல் காட்சி சென்று பார்த்த படம் .சூர்யா ,ஹரி , விவேக் ,பிரகாஷ்ராஜ் அனுஷ்கா என எதிர்பார்த்து சங்கம் தியேட்டர் ல்  பர்ர்த்த படம் . ஆரம்பம்  முதலே ஹரி யின் விறுவிறுப்பு , சூர்யா வின் கம்பீரம் என அசத்தல் . வழக்கமான தாதா கதையில் வித்தியாசமாக விறுவிறுப்பாக இருக்கிறது .
    சப் இன்ஸ்பெக்டர்  சூர்யாவை அவரது சொந்த ஊரில் மோதமுடியாமல் , பழிவாங்க சென்னைக்கு இன்ஸ்பெக்டர் ஆக்கி , அவரை பழிவாங்க  நினைத்து தனது ஆள் ,பணம் தாதா என எல்லாவற்றையும் இழந்து சூர்யாவால் கொல்லப்படுகிறார் பிரகாஷ் ராஜ் என்பதை கொஞ்சம்கூட போர் அடிக்காமல் விறுவிறுவென ஓவ்வொரு நொடியும் செல்லும் கதை .

    விவேக் காமெடி அசத்தல் சில இடங்களில் மட்டும் இழுக்கிறது , பிரகாஷ் ராஜ் வழக்கமான தாதா , சூர்யாவின் ஊரில் அவரிடம் மோதும்  போது ஊர் மக்கள் அனைவரும் வந்து மிரட்டி காரை உடைப்பது தியேட்டர் ரை  அதிரவைக்கும் காட்சி படையப்பா ஊஞ்சல் காட்சி போல் ,  பாடல் தான் சுமார் ராகம் மற்றபடி எல்லாமே அசத்தல் .

    தூத்துக்குடி ,தாமிரபரணி என உயர்த்தி சொல்லி  ,சென்னை ,கூவம் என சென்னையை இறக்கியிருப்பது கொஞ்சம் தவிர்த்திருக்கலாம் .

    அனுஷ்கா படம் முழுக்க வந்து அசத்துகிறார் ,இனி போலீஸ் கதை என்றால் சூர்யா தான் என சொல்லும் அளவுக்கு துரைசிங்கமாக வருகிறார் . சன் piture கொடுத்திருக்கும் சும்மர் வேட்டை இந்த சிங்கம்.

    தியேட்டர் முழுவதும் சிரிப்பும் கைதட்டல் தான் ,  சென்னையில் இப்படி என்றால்  பிற சிறிய ஊர்களில் இன்னும் அதிகமாக எதிர்பார்க்கலாம் .தூத்துக்குடி , திருநெல்வேலி மற்றும் எங்கள் கோயமுத்தூர் அதிரும் என்பதில் சந்தேகமே இல்லை ...

    விஜய் ரசிகர்களுக்கு பிடிக்காதவன் இந்த சிங்கம் . மாஸ் ஹீரோ என்ற  பெயரை சூர்யாவுக்கு வாங்கிதந்திருக்கிறது . ரஜினிக்கு அடுத்த மாஸ் சூர்யா தான் என்று சொல்லலாம் . சூர்யாவுக்கு 100% கொடுத்திருக்கும் 25 வது படம் சிங்கம், 


    2:30 மணிநேரம்  குடும்பத்துடன் சென்று பார்க்ககூடிய  பரபரப்பான விறுவிறுப்பான mass family entertainer மசாலா படம். சிரித்துகொண்டே விறுவிறுப்பாக செல்கிறது இந்த சிங்கம் . 100% entertainment.

    indru
    Read more...

    Saturday, February 13, 2010

    0

    விஷால்+சந்தானம் +யுவன்= கலக்கும் தீராத விளையாட்டு பிள்ளை

  • Saturday, February 13, 2010


  • விஷால் எதிலும் best வேண்டும் என்று நினைப்பவர் பேனா வாங்கினாலும் மூன்றை தேர்வு செய்து அதில் சிறந்ததை வாங்குபவர் ,  திருமணம் செய்வதற்கு மூன்று பெண்களை காதலித்து அதில் best ஆக இருப்பவரை திருமணம் செய்ய நினைக்கிறார் .

    சந்தானம் , மயில்சாமி ,சத்யன் இவரது நண்பர்கள்.முதல் பாதி முழுவதும் இவர்களின் காமெடி சிரித்துக்கொண்டே இருக்கலாம் , அதிலும் சந்தானம் அடிக்கும் லூட்டி சூப்பர் .  விஷாலை கூட ஓட்டுகிறார்.

    ஒருபெண் பணக்காரி அவளிடம் ஆட்டோ டிரைவர் என்று சொல்லியும் , இன்னொருபென்னுக்கு ஆண் என்றாலே பிடிக்காது அவளிடம் பொண்ணுங்கன்னாலே புடிக்காது என்று சொல்லியும் மூன்றாவது பெண்ணுக்கு ஒருவனை காதலித்து அவனையே கல்யாணம் செய்யும் ஆசை   இப்படி மூவரையும் காதலிக்கவைக்கிறார் விஷால்  முதல் பாதி விறுவிறுப்பு,விஷால் செய்யும் அனைத்தும் ரசிக்கும்படி உள்ளது .
    பணக்கார பொண்ணுக்கு உண்மை தெரிந்ததும்  விஷாலிடம் எப்படி நீ மீதமுள்ள இரு பெண்களில் ஒருவரை திருமணம் செய்கிறாய் என்று சவால் விடுகிறார் .  விஷால்இவர் கொடுக்கும் இடைஞ்சல்களை  எப்படி இதனை சமாளிக்கிறார் என்பது விறுவிறுப்பாக சொல்லி இருக்கிறார்கள் கடைசி 15 நிமிடங்களை தவிர .
    விஷால் காமெடி , காதல் , டான்ஸ், சண்டை என எல்லாவற்றிலும் பின்னி எடுக்கிறார் .இடையிடையே பாடல்கள் வந்தாலும்  யுவன் சங்கர் ராஜா  அருமையாக இசை ரசிக்க வைக்கிறது.ஒளிப்பதிவு  அருமை. .வித்தியாசமான  ,புதுமையான காட்சிகள் என படம் செல்வதால் படம் எல்லோரையும் ஈர்க்கும் வகையில் உள்ளது .பெண்களின் காதலுக்கு எதிராக விஷால்  வசனம் பேசி கைதட்டல் வாங்குகிறார் .

    பிரகாஷ் ராஜ் ஹீரோஇன் அண்ணன் + தாதாவாக  சில காட்சிகள் வந்தாலும் அவர் சிரிக்கவைக்கிறார், மௌலி விசாலின் அப்பாவாக வந்து அவரும் சிரிக்கவைக்கிறார் . இறுதிகாட்சியில் சிநேகா இலவச இணைப்பாக வருகிறார்.விஷால் இனி இதுபோல தனக்கு ஏற்ற கதைகளை தேர்வு செய்வார் என நம்பலாம்.இளைஞர்களுக்கு பிடிக்கும் வகையில் வந்துள்ள படம்.

    விஷாலுக்கு வெற்றிப்படம்  தீராத விளையாட்டுப்பிள்ளை good Entertainer......
    ஏன் இந்த படத்திற்கு  Times of india  ஒரு star மட்டும் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை.?
    ....
    Read more...

    Monday, September 7, 2009

    2

    காங்கிரஸ் ,விஜய் , ராஜ சேகர ரெட்டி

  • Monday, September 7, 2009
  • வழக்கம் போல் எனக்கு வரும் விஜய் எஸ்.எம்.எஸ்கள்:


    ஜோக் 1:ராஜ சேகர ரெட்டி இறப்பதற்கு காரணம் என்ன தெரியுமா ?

    விஜய் காங்கிரஸில் சேருகிறார் என்ற செய்தியை கேட்டதும் அதிர்ச்சியில் இறந்துவிட்டாராம் .
    இப்படி நடக்கும் எதாவது ஒரு நிகழ்வை( இதற்க்கு முன் மைக்கல் ஜாக்சன் இறப்பு , பன்றி காய்ச்சல் போன்றவற்றை விஜயை தொடர்பு படுத்தி விடுகின்றார்கள்
    ஜோக் 2 :



    விநாயகர் சிலை முன்னாடி ராமா, ராமா ராமே கிட்ட வில்ல கேட்டேன் என பாடிய அதி புத்திசாலி விஜய் மட்டும் தான் .


    இன்னும் விஜய் பற்றி என்ன என்ன எஸ்.எம்.எஸ் வரும் என்று தெரியல ..
    Read more...

    Saturday, August 29, 2009

    2

    விஜயகாந்த்-பஞ்ச்-வடிவேலு

  • Saturday, August 29, 2009

  • MINDBLOWING: VIJAYAKANTH'S Dialogues in English

    1) U can study and get any certificates. But u cannot get ur death சர்டிபிகேட்


    <

    a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhK5qndTh1DN3igSQH_KNhfYk-IoeoG41RvJxitxVjPU0ZeV75T6juH-UuVxepW-VMbttT2iUHlcDuDTB7F456o692COwGMwqfl1QPbZqzSgOY9X0Cy1R9hPRGFdG82Dtfhimry_I_Ian_X/s1600-h/vjvj.jpg">




    2) U may have AIRTEL or BSNL connection but when u
    sneeze u ll say HUTCH




    3 ) U can bcome an engineer if u study in
    engineering college. U cannot bcom a president if
    u studies in Presidency College




    4 ) U can expect a BUS from a BUS stop ... u
    cannot expect a FULL from FULL stop






    6 ) U can find tea in teacup. But cannot find world
    in world cup




    7) U can find keys in Keyboard but u cannot find mother in motherboard.






    ENNE ANGU KOLLU DEIVAME
    _
    Read more...

    Saturday, August 22, 2009

    0

    வேட்டைக்காரன் பரபரப்பான கதை லீக்

  • Saturday, August 22, 2009



  • விஜய் குடும்பத்தில் உள்ள அனைவரும் திடீரென்று மர்மமான முறையில் ஒரே நாளில் இறந்துவிடுகின்றனர்.

    வெளி நாட்டில் படித்துக்கொண்டிருக்கும் விஜய் இதை கேள்விப்பட்டு அவரது காதலி அனுஷ்கா மற்றும் நண்பர்களிடம் இதற்க்கு காரணமானவர்களை அழித்துவிட்டு வருகிறேன் என்று சொல்லி இந்தியா வருகிறார்.

    அப்போது தன் குடும்பத்தார் பன்றி காய்ச்சல் நோயால் இறந்ததை அறிந்து கோபத்துடன் உலகத்தில் உள்ள அனைத்து பன்றிகளையும் வேட்டையாட புறப்படுகிறார்.

    இடையிடையே அனுஷ்கா வுடன் ஆடி பாடுகிறார்.

    கிளைமாக்ஸ் :
    அவருக்கு இன்னும் ஒரு மணி நேரத்தில் வெளிநாட்டிற்கு செல்லவேண்டிய விமானம் புறப்பட்டுவிடும் . சுமார் ஒரு லட்சம் பன்றிகள் முன்பு விஜய் மேடையில் தோன்றுகிறார் இப்படி பரபரப்பான விறுவிறுப்பில் பஞ்ச் டயலாக் பேசி அனைத்து பன்றிகளையும் கொன்று விமானத்தை பிடிக்கிறார் இளைய தலைவலி.


    இப்படித்தான் எனக்கு எஸ்.எம்.எஸ் ல அனுப்புனாங்க சென்னை முழுவதும் இதுதான் ஹாட் ...(நகைச்சுவைக்காக மட்டும்)

    ஐடியா மணி கேட்ட கேள்வி : பன்றிக்காயச்சலுக்கு ஏன் பன்றிகளை கொல்கிறார்?
    இன்னும் படம் ரிலீஸ் ஆகும் போது எப்படி எல்லாம் எஸ்.எ.எஸ் வருமோ தெரியவில்லை
    Read more...
    1

    தமிழ் சினிமா ஹீரோக்களின் பஞ்ச் மெசேஜ்

  • தமிழ் சினிமா ஹீரோக்களின் பஞ்ச் மெசேஜ் ஜாலி கலாட்டா

    Enter Fleedy.com

    |





    Enter Fleedy.com

    |

    Enter Fleedy.com
    <

    Enter Fleedy.com

    |





    Enter Fleedy.com

    <

    Enter Fleedy.com

    |





    Enter Fleedy.com

    |





    Enter Fleedy.com







    எது ரொம்ப உங்களுக்கு புடிச்சதுன்னு சொல்லுங்க.



    Read more...

    Saturday, August 15, 2009

    1

    எமனையே கலாய்த்த விஜய்

  • Saturday, August 15, 2009

  • எமனையே கலாய்த்த விஜய் நகைச்சுவை எஸ்.எம்.எஸ்


    எமன்: உன் கடைசி ஆசை என்ன கேள் தருகிறேன்?

    விஜய்: நான் நடித்த வில்லு படம் நீங்கள் பார்க்க வேண்டும்.

    எமன் : நான் உன்னை கொல்ல வந்தால் நீ என்னை கொல்ல பார்கிறாயா!

    விஜய்:??????

    (நகைச்சுவைக்காக மட்டும்)



    நமக்கான சிந்தனை: தினமும் ஐந்து முறை சோப்பு போட்டு கைகளை சுத்தம் செய்வோம். பன்றி காய்ச்சலை தவிர்ப்போம்.
    Read more...

    Friday, August 14, 2009

    5

    பொக்கிஷம் விமர்சனம்

  • Friday, August 14, 2009

  • பொக்கிஷம் :
    மகன் தனது இன்றைய காதலையும் , அவனது தந்தையின் காதலையும் அழகாக சொல்லி இருக்கும் படம் . ஒரு நிமிடம் வெயிட்டிங் கால் வந்தாலும் ஏவ கூட பேசிட்டு இருந்த என கேட்கும் இன்றைய காதலிக்கும் , காதலன் பிரிவினால் வாழ்வையே இழக்கும் அன்றைய காதலையும் வெளிச்சம் போடு காட்டும் உன்னத காவியம்.

    லெனின் கப்பல் பணி அதிகாரி (சேரன் ) முஸ்லீம் பெண் பத்மப்ரியா கல்லூரி மாணவி (1970)ல் நடக்கும் கதை . அப்பா விஜயகுமார் சிகிச்சைக்காக மருத்துவமனை க்கு வருகிறார் அவரை பார்க்க வரும் சேரன் மற்றும் அங்கு அம்மாவின் சிகிச்சைக்கு வரும் பத்மப்ரியா இருவரும் இலக்கியங்களை பற்றி பேசி நட்பை வளர்கின்றனர். வேலைக்காக கொல்கத்தா செல்லும்போது பத்மப்ரியா உறவினர் வீட்டுக்கு சென்று விடுகிறார் . அவரிடம் சொல்லாமல்
    வருத்தத்துடன் செல்லும் சேரனுக்கு அப்பா விஜயகுமார் அந்த பெண் தன்னை நன்றாக பார்த்துக்கொண்டார் நன்றி சொல்லி கடிதம் போடும்படி முகவரி அனுப்புகிறார் .

    கடிதம் மூலம் காதல் செய்கின்றனர் ,பிறகு அப்பாவுடன் பெண் கேட்க செல்கிறார் சேரன் , சரி பெண்ணை தருகிறேன் என்று சொல்லி அனுப்பி , ஊரை காலிசெய்து சென்று விடுகிறார் பத்மப்ரியா அப்பா .அவர்களை தேடி அலைந்து கிடைக்காததால் அப்பாவுக்காக வேறு பெண்ணை திருமணம் செயகிறார்சேரன் .


    சேரன் மகன் சொத்து பத்திரத்தை தேடும் போது சேரனின் கடிதம் ,டைரி படித்து
    பத்மப்ரியாவை தேடும் போது எழுதிய கடிதங்களை எப்படி தன் அப்பா நினைவாக பத்மப்ரியாவை கண்டு பிடித்து சேர்க்கிறார் என்பது மீதி கதை .அவர் பத்மப்ரியாவை சந்தித்து தான் சேரன் மகன் அப்பா இறந்து விட்டார் என்று சொல்லும் போதும் , பத்மப்ரியா ஊரை கலி செய்து வந்தபின் என்ன நடந்தது என்பதை அறியும் போது எல்லோர் மனமும் கனக்கிறது.


    அருமையான காதல் கதை சில இடங்களில் மட்டும் மெதுவாக செல்கிறது , சேரனின் முகம் தான் வயதான தோற்றம் அளிக்கிறது நடிப்பு அருமை ,பத்மப்ரியா அழகான முஸ்லீம் பெண்ணாக , அருமையான நடிப்பு இறுதிகாட்சியில் வரும் வயதான தோற்றம் மிக அருமை. ஒளிப்பதிவு ,பின்னணி இசை பாராட்டும் படி உள்ளது.

    (1970) ல் நடக்கும் அனைத்து காட்சி அமைப்புகளும் அருமை .

    காதல் நினவு சின்னம் இந்த பொக்கிஷம் .

    குத்துபாட்டு ,ஹீரோ பறந்து வருவது , பஞ்ச் பேசுவது இல்லாமல் மனதை வருடும் படம் சேரனின் கொடியை உயரே பறக்கவிட்ட படம் .


    காதலின் அழுத்தத்தை இதைவிட சொல்ல முடியாது. தமிழை தவிர பிற மொழிகளில் இப்படி ஒரு படம் வந்திருந்தால் உலகமே கொண்டாடியிருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை .




    Read more...

    Monday, August 10, 2009

    2

    அரசியல்ல இதெல்ல சகஜமப்பா ..

  • Monday, August 10, 2009






  • நாராயணா இந்த கொசு தொல்ல தாங்க முடியலடா !
    கவுண்டமணி கலக்கல் காமெடி .இதைவிட பெரிய காமெடி யாராலும் கொடுக்க முடியாது .ஆமா அப்பா விஜய் படம் இங்க எதுக்கு ? நல்ல யோசிங்க புரியும் ....







    புரியலையா எனக்கு புரியல விட்டுடுங்க ! ஐடியா மணி சொன்ன ஐடியா இது .
    Read more...

    Sunday, August 9, 2009

    0

    வேலைக்கு ஆள் எடுப்பது , ஆர்டர் பிடிப்பது எப்படி

  • Sunday, August 9, 2009
  • வேலைக்கு ஆள் எடுப்பது
    சங்கு ஊதுற வயசுல சங்கீதா காமெடி




    ஆர்டர் பிடிப்பது எப்படி






    Read more...
    0

    சண்டே ஸ்பெஷல் - ஹைதராபாத் மட்டன் பிரியாணி செய்வது எப்படி

  • Read more...
    1

    அஜித், விஜய், சூர்யா அடுத்தடுத்த பட பெயர்கள்

  • இவர்களின் அடுத்து நடிக்கும் பட பெயர்கள் (சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டும்)

    விஜய்







    வேட்டைக்காரன்
    மோசக்காரன்
    பைத்தியக்காரன்
    பிச்சைக்காரன்
    சூனியக்காரன்



    அஜித் - எஸ்.ஜே .சூர்யா









    வாலி
    குடம்
    அன்டா
    சொம்பு
    தட்டு



    ஜீவா - விகடன் தயாரிப்பில்










    எஸ்.எம்.எஸ்
    எம்,எம்,எஸ்
    மிஸ்டு கால்
    ராங் கால்




    சிம்பு -வெங்கடேஷ்









    குத்து
    வெட்டு
    கிள்ளு
    தள்ளு


    தனுஷ்-ரமணா









    சுள்ளான்
    கொசு
    மூட்டை பூச்சி
    கரப்பான் பூச்சி





    சூரியா-ஹரி










    சிங்கம்
    கரடி
    யானை
    குதிரை

    (நகைச்சுவைக்காக மட்டும் )
    Read more...

    Monday, August 3, 2009

    4

    தமிழ் சினிமாவில் மட்டும் ஏன் இப்படி ?

  • Monday, August 3, 2009


  • தமிழ் சினிமாவை பொறுத்தவரை எல்லாமே காமெடிதான் . பின்ன என்னங்க

    கில்லின்னு சொல்றாங்க ஆனா ஹீரோ கபடி விளையாடுறாரு .

    போக்கிரில போலீஸ் ன்னு சொல்லிட்டு
    (watchman) காட்டுறாங்க.


    அழகிய தமிழ் மகன்னு சொன்னாங்க ஆனா கடைசிவரை அது யாருன்னு காட்டவே இல்லை.என்ன கொடுமை சார்.




    இதுகூட பரவாயில்லை குருவின்னு சொன்னாங்க ஆனா
    தியேட்டர்ல ஒரு காக்கா கூட இல்லை .





    வில்லுனு சொன்னாங்க ஆனா தியேட்டர் ல கல்லு பறந்தது தா நிஜம் சத்தியமா நா டாக்டர் .விஜய் ய கிண்டல் பன்னலைங்கோ

    பின் குறிப்பு;
    இதெல்லாம் நான் கேள்வி பட்டது இப்படி ரிஸ்க் எடுத்து இந்த படங்களை பார்க்கும் தைரியம் எனக்கு இல்லை.

    எப்படி எல்லாம் எஸ்.எம்.எஸ் ரூம் போட்டு யோசிச்சி அனுப்புறாங்க பாருங்க .

    ( நகைச்சுவைக்காக மட்டுமே )

    எனக்கு வந்த எஸ்.எம்.எஸ் இது . தமிழ் சினிமாவில் ஹீரோக்கள் தங்கள் சுய நலத்திற்க்காக ரசிகர்களை இப்படி தூண்டி விட்டு தங்கள் வளர்ச்சியடைவதை நிறுத்துவார்களோ தெரிய வில்லை .

    அவர்களுக்காக இப்படி கேவலமாக யோசிக்காமல் நல்ல சிந்தனைகளை எஸ்.எம்.எஸ் அனுப்பலாமே. ரசிகர்கள் திருந்தாதவரை இது மாறப்போவது இல்லை .
    Read more...

    Friday, July 31, 2009

    4

    உலகையே மிரட்டும் தென் இந்திய திரைப்பட ஹீரோக்கள்

  • Friday, July 31, 2009

  • தென் இந்திய படங்களை பார்த்து உலகமே மிரண்டு போயிருக்கிறது , அதற்கு காரணமான இந்த காட்சிகளை பார்த்து ஏன் என்று தெரிந்துகொள்ளுங்கள் :
    இதன் மூலம் அரசியலுக்கும் வந்து கலக்க ஆரம்பித்துவிட்டனர் .

    முதலில் கேப்டன் :







    அடுத்த வீடியோ:






    மீண்டும் கேப்டன் :







    விஜய்: இதெல்லாம் சும்மா இந்த வீடியோ பாருங்க நான் தான் இதவிட பெஸ்ட் ன்னு தெரியும் . இவங்களை விட அரசியலுக்கு நான்தான் பெஸ்ட்னு நீங்களே சொல்லுவீங்க ;;'''''







    இதைபார்த்து வடிவேலு , மைக்கல் ஜாக்சன் என்ன நினைக்கிறார்கள் பாருங்க






    உங்கள் கமெண்ட்டையும் மறக்காம சொல்லுங்க ..



    (நகைச்சுவைக்காக மட்டும்)
    Read more...

    Thursday, July 30, 2009

    5

    தமிழ் சினிமா ஹீரோக்களின் அடுத்தடுத்த பட பெயர்கள்

  • Thursday, July 30, 2009

  • தமிழ் சினிமா ஹீரோக்களின் அடுத்தடுத்த பட பெயர்கள்


    ஒரு ஜாலி கலாட்டா

    ரொம்ப நாள் முன்னாடி எங்கோ பார்த்து இப்ப கூட நல்ல காமெடி யா இருக்கும்
    நம்ம தலைவர்ல இருந்து ஆரம்பிப்போம் .


    ரஜினி: ரோபோ , பேட்டரி ட்ரைன் , ஜெட்,ரிமோட் கார் .,,,,

    கமல் : தலைவன் இருக்கிறான் ,தொண்டன் தீ குளித்துவிட்டான் , தலைவி ஓடிவிட்டாள்...,,,




    விஜயகாந்த் : தர்மபுரி , சேலம் , ஈரோடு ,நாமக்கல், மயிலாடுதுறை
    விஜய் : வில்லு , அம்பு, கத்தி, கபடா ,கம்பு ...,,,
    அஜித் : அசல் , நகல் , ஜெராக்ஸ்,கலர் ஜெராக்ஸ் ...,,,

    சூர்யா: வாரணம் ஆயிரம் , தோரணம் ரெண்டாயிரம்,பஞ்சவர்ணம் மூவாயிரம் ...,,,

    விக்ரம் : கந்தசாமி , கருப்புசாமி ,ராமசாமி, முனுசாமி, குழந்தைசாமி
    தனுஷ் : படிக்காதவன் , முட்டாள்,தருதல ...,,,
    சிம்பு: சிலம்பாட்டம் , மயிலாட்டம் ,கரகாட்டம், புலியாட்டம் ,பாம்பாட்டம் ...,,,


    ஜீவா: ஈ , கொசு ,மண்புழு , கரப்பன் பூச்சி , எறும்பு ...,,,
    விஷால் : சத்யம் , அபிராமி, ஐநோக்ஸ் ,தேவி, உதயம் ...,,,
    பரத் : சேவல், புறா, மைனா, வாத்து,

    நகுல் : காதலில் விழுந்தேன் , பைக் ல விழுந்தேன் , ரோட்ல விழுந்தேன் , டிச்சில விழுந்தேன் ...,,,
    ஜீவன் : தோட்டா, புல்லட், ரைபில் , ரிவால்வேர்...,,,


    ஆர்யா : நான் கடவுள் , நீ பேய் , அவன் அரக்கன் , நாம பூதம் , அவள் ஆவி ...,,,

    ஜெயம் ரவி : சம்திங் சம்திங், எவ்ரி திங் எவ்ரி திங் ,நோதிங் நோதிங், எனி திங் எனி திங் ...,,,


    நரேன் : அஞ்சாதே , ஆறாதே ,ஏலாதே ,எட்டாதே

    சரத்குமார் :( 1977, 1976, 1975, 1974, 1973 )
    எஸ்.ஜே. சூர்யா: நியூட்டன் மூன்றன் விதி, பாஸ்கல் விதி, பிளெம்மிங் விதி , தலைவிதி


    மாதவன் : குரு என் ஆளு , பிரியா அவன் ஆளு , நயந்தாரா பிரபுதேவா ஆளு...,,,
    சாந்தனு: சக்கரக்கட்டி , சுண்ணாம்பு கட்டி...,,
    Read more...

    Subscribe