Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts
Saturday, August 29, 2009
0
Saturday, August 29, 2009
என்பதை
ஒப்புக் கொள்ள மறுத்த மனம்.
- காசிகணேசன் ரங்கநாத்
மறக்காமல் அவருக்கு உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள் ...
Read more...
என் எழுத்து... கவிதை
எனது நண்பரின் கவிதை இது. உங்களுக்காக
என் எழுத்து...
கவிதை எழுதுதல் கால விரயம்
என்று உலகம் கூற,
கவிதை எழுதாது வீணான
நாட்களில்,
கல்லாது வீணான காலங்கள்...
எழுதப்படாது வீணான
நாட்குறிப்பு.
மீட்டப்படாத வீணையில்
துயின்று கிடந்த ராகங்கள்...
அலைகிளம்பாது
அடங்கிக் கிடந்த மஹா சமுத்திரங்கள்...
நடைபயிலாது
முடங்கிக் கிடந்த குழந்தைகள்...
அடைமழையோ என்று
இடியோடு பொழியாத மேகங்கள்...
காணாது மறந்துபோன
ஒருகோடி விண்மீன்களின்
கண்சிமிட்டல்கள்...
ஒளிவிழாது இருண்டு கிடந்த
உலகத்தின் பாதி...
சந்திர அப்பங்களைத்
தின்ன மறந்துபோன
பல நூறு இரவுகள்...
மறந்து மரத்துப் போன
எமது மூதாதையர் சரித்திரம்...
ஒப்புக் கொள்ள மறந்து மறுக்கப்பட்ட
எமது உள்ளத்து உள்ளொளி.
அண்ட முகடுகளை உரசிப்பார்க்க
மறந்துபோன உள்ளம்.
என்பதை
ஒப்புக் கொள்ள மறுத்த மனம்.
- காசிகணேசன் ரங்கநாத்
மறக்காமல் அவருக்கு உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள் ...
Saturday, August 22, 2009
0
Saturday, August 22, 2009
கவிதை இளமைக்காலம், இயற்கை
இளமைக்காலம்
இதுவொரு இனிய காலம்
இளைஞர்களுக்கும், யுவதிகளுக்கும்
பட்டாம் பூச்சி போன்று
படபடத்து திரியும் காலம்
பட்டென்று பாசமும்
சட்டென்று காதலும்
நச்சென்று கோபமும்
கூடியே வரும் காலம்
துடி துடிப்புடனே உற்சாகத்துடன்
துள்ளித் திரியும் -ஒரு
இனிமையான காலமது.
இயற்கை
கண்மூடித்தூங்கும் போது அன்னையாகிறாய்
கவிதைகள் எழுதும் போது காதலியாகிறாய்
தவறுகள் தொடுக்கும் போது ஆசனாகின்றாய்
உன்னுள் எத்தனை குழந்தைகள்?
அருவிகளாய்ச் சுமக்கின்றாய்
பசுமையைச் சுமக்கின்றாய்
வனவிலங்குகளைச் சுமக்கின்றாய்
நீயும் ஒரு சுமைதாங்கி !
எத்தனை விஞ்ஞானம் வளர்ந்தாலும்
காலத்தால் அழியாதது கவிசுவடுகள்
இன்றோ காவியச் சுடுகாடுகள்
அத்தனைக்கும் யார் காரணம் ? நான் (மனிதன்)
உன்னை அளிக்கும் நோக்கத்தில் என்னை
அழித்துக் கொள்கின்றேன். ஆருயிரே
அன்பெனும் கேள்வியை நடத்தி பசுமை என்னும்
வரம் தருவாயாக? அல்லது சாபம் தருவாயா?
நாங்கள் விரும்புவது சுந்தரவனக்காடுகள்
சுடுகாடுகள் அல்ல.
நிலவில்லாமல் இரவில் ஒளி இல்லை
நீ ! இல்லாமல் மனித வாழ்வில் ஒளி இல்லை
உன்னுள் அமைதியாய் இருக்கும்போது
ஆடும் மயிலாய் அமைதியாய் மெருகூட்டுகிறாய்
அளிக்கும்போது எரிமலையாய்
விரிசலாய் படமெடுக்கிறாய்
மனிதன் வளர்ந்தது உன்னுள்
மானுடம் வளர்ந்தது உன்னுள்
நாகரிகம் வளர்ந்தது உன்னுள்
ஒவ்வொரு அணுவிலும் உள்ள உன்னை
என் அன்னையாகக் கருதுவதில் தவறில்லை
கறிமேடாய் ஆகின்ற உன்னை காவியச் சுவடுகளாக
மாற்ற இதோ வருகிறது
இன்னொரு மானுடம்.
Read more...
இதுவொரு இனிய காலம்
இளைஞர்களுக்கும், யுவதிகளுக்கும்
பட்டாம் பூச்சி போன்று
படபடத்து திரியும் காலம்
பட்டென்று பாசமும்
சட்டென்று காதலும்
நச்சென்று கோபமும்
கூடியே வரும் காலம்
துடி துடிப்புடனே உற்சாகத்துடன்
துள்ளித் திரியும் -ஒரு
இனிமையான காலமது.
இயற்கை
கண்மூடித்தூங்கும் போது அன்னையாகிறாய்
கவிதைகள் எழுதும் போது காதலியாகிறாய்
தவறுகள் தொடுக்கும் போது ஆசனாகின்றாய்
உன்னுள் எத்தனை குழந்தைகள்?
அருவிகளாய்ச் சுமக்கின்றாய்
பசுமையைச் சுமக்கின்றாய்
வனவிலங்குகளைச் சுமக்கின்றாய்
நீயும் ஒரு சுமைதாங்கி !
எத்தனை விஞ்ஞானம் வளர்ந்தாலும்
காலத்தால் அழியாதது கவிசுவடுகள்
இன்றோ காவியச் சுடுகாடுகள்
அத்தனைக்கும் யார் காரணம் ? நான் (மனிதன்)
உன்னை அளிக்கும் நோக்கத்தில் என்னை
அழித்துக் கொள்கின்றேன். ஆருயிரே
அன்பெனும் கேள்வியை நடத்தி பசுமை என்னும்
வரம் தருவாயாக? அல்லது சாபம் தருவாயா?
நாங்கள் விரும்புவது சுந்தரவனக்காடுகள்
சுடுகாடுகள் அல்ல.
நிலவில்லாமல் இரவில் ஒளி இல்லை
நீ ! இல்லாமல் மனித வாழ்வில் ஒளி இல்லை
உன்னுள் அமைதியாய் இருக்கும்போது
ஆடும் மயிலாய் அமைதியாய் மெருகூட்டுகிறாய்
அளிக்கும்போது எரிமலையாய்
விரிசலாய் படமெடுக்கிறாய்
மனிதன் வளர்ந்தது உன்னுள்
மானுடம் வளர்ந்தது உன்னுள்
நாகரிகம் வளர்ந்தது உன்னுள்
ஒவ்வொரு அணுவிலும் உள்ள உன்னை
என் அன்னையாகக் கருதுவதில் தவறில்லை
கறிமேடாய் ஆகின்ற உன்னை காவியச் சுவடுகளாக
மாற்ற இதோ வருகிறது
இன்னொரு மானுடம்.
Subscribe to:
Posts (Atom)




